search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி விஷம் குடித்து சாவு
    X

    தொழிலாளி விஷம் குடித்து சாவு

    • உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார்.
    • போலீஸ் விசாரணை

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வாங்கூர் பஸ் நிலைய தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 46) தொழிலாளி. இவர் கடந்த 4 வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

    இந்நிலையில் கடந்த 29-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஆனந்தன் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உறவினர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×