search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரிமங்கலம் அருகே   செங்கல் சூளை தொழிலாளி  விஷம் குடித்து சாவு
    X

    காரிமங்கலம் அருகே செங்கல் சூளை தொழிலாளி விஷம் குடித்து சாவு

    • வீட்டிலிருந்து வெளியே சென்றவரை காணவில்லை.
    • கிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்த காவேரிபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (40). இவர் ஓசூரில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டிலிருந்து வெளியே சென்றவரை காணவில்லை.

    கிருஷ்ணனை அவரது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் காரிமங்கலம்-திப்பம்பட்டி சாலையில் கிருஷ்ணன் பிணமாக கிடப்பதாக தெரியவந்தது.

    இது பற்றி தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதில் கிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் எதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×