search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drink poison and die"

    • உடல்நிலை சரியாகாததால் விரக்தி
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த கோவிலூர் கிராமம் ,இலுப்பை தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 55), விவசாயி. இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை சரியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 7.30மணி அளவில் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்து மயங்கி கிடந்தார் . இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர்.

    அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட் டம், ஆற்காடு அருகே கீழ்வி ஷாரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி (வயது 42). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    இவரது மகன் ரமேஷ் பலரிடம் கடன் வாங்கியதாகவும், அதனை அடைக்க பத்மாவதி வீட்டில் இருந்த நகையை மகனுக்கு கொடுத்ததாகவும், இதனால் வீட்டில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று பத்மாவதி விஷ தழையை அரைத்து குடித்தார். இதனைய டுத்து அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவம னையிலும், பின்னர் அங்கி ருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பத்மாவதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுபோதையில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த வடுகசாத்து கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 65), தொழிலாளி. இவர், மதுபோதையில் விஷம் குடித்ததாக தெரிகிறது.

    மயங்கி கிடந்த முத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தந்தை வேலைக்கு செல்ல சொன்னதால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மேல் கொடுங்கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் (வயது 45) விவசாயி. இவருடைய மகன் கார்த்திக் (18). ஐ.டி.ஐ. முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மனோகர் கார்த்தியை ஏன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறாய் என்று கண்டித்ததாக தெரிகிறது. பின்னர் கீழ்க்கடுங்காலூர் கிராமத்தில் நடைபெற்ற பாட்டு கச்சேரி நிகழ்ச்சியை பார்ப்பதற்காக மனைவி சரளாவுடன் சென்று விட்டார்.

    அப்போது வீட்டில் தனியாக இருந்த கார்த்திக் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    பின்னர் வீட்டிற்கு வந்த பெற்றோர் கார்த்திக் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கார்த்திகை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கீழ் கொடுங்கலூர் போலீஸ் நிலையத்தில் மனோகர் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நலக் குறைவால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    தூசி:

    வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள தர்மாபுரம் குளக் கரை தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 63), உடல்நலக் குறைவால் இவர் அவதிப்பட்டு வந்தார்.

    பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் விஷத்தை குடித்து விட் டார். மயங்கிய நிலையில் இருந்த இவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட் டார்.

    இது தொடர்பாக இவருடைய மகன் சக்திவேல் தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • உடல் நலக்குறைவால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    வந்தவாசி அடுத்த ஆச்சமங்கலம் கிராமத்தை சேர்ந்த வர் சமுத்திரம் (வயது 39), இவரது மனைவி தேவி (27) இவர்கள் குடும்பத்துடன் செய்யாறு அருகே உள்ள பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர்.

    தேவிக்கு கடந்த 10 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.

    இதனால் மனவேதனை அடைந்த தேவி விஷத்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அவரது கணவர் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காம ல்தேவி பரிதாபமாக இறந்து விட்டார்.இது குறித்து செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார்.
    • போலீஸ் விசாரணை

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வாங்கூர் பஸ் நிலைய தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 46) தொழிலாளி. இவர் கடந்த 4 வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

    இந்நிலையில் கடந்த 29-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஆனந்தன் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உறவினர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×