விஷம் குடித்து தொழிலாளி சாவு

மதுபோதையில் விபரீதம் போலீசார் விசாரணை
விஷம் குடித்து தொழிலாளி சாவு
Published on

ஆரணி:

ஆரணி அடுத்த வடுகசாத்து கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 65), தொழிலாளி. இவர், மதுபோதையில் விஷம் குடித்ததாக தெரிகிறது.

மயங்கி கிடந்த முத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com