search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து பெண் சாவு
    X

    விஷம் குடித்து பெண் சாவு

    • வீட்டில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட் டம், ஆற்காடு அருகே கீழ்வி ஷாரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி (வயது 42). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    இவரது மகன் ரமேஷ் பலரிடம் கடன் வாங்கியதாகவும், அதனை அடைக்க பத்மாவதி வீட்டில் இருந்த நகையை மகனுக்கு கொடுத்ததாகவும், இதனால் வீட்டில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று பத்மாவதி விஷ தழையை அரைத்து குடித்தார். இதனைய டுத்து அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவம னையிலும், பின்னர் அங்கி ருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பத்மாவதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×