search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விம்பிள்டன் டென்னிஸ்"

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஜூலை 3-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை லண்டனில் நடக்கிறது.
    • 2019-ம் ஆண்டு கொரோனா நோய் தொற்றுக்கு முன்னதாக வழங்கப்பட்ட பரிசுத் தொகையைவிட தற்போது 17.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் போட்டிகள் முடிந்துவிட்டன. ஆண்கள் ஒற்றையா் பிரிவில் ஜோகோவிச் (செர்பியா) இந்த 2 பட்டத்தையும் கைப்பற்றினார்.

    பெண்கள் ஒன்றையர் பிரிவில் ஷபலென்கா (பெலாரஸ்) ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், ஸ்வியாடோக் (போலாந்து) பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் வென்றனர்.

    3-வது கிராண்ட்சிலாமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஜூலை 3-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை லண்டனில் நடக்கிறது.

    இந்த நிலையில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மொத்த பரிசுத்தொகை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்தப் போட்டியின் பரிசுத்தொகை ரூ.464 கோடியாகும். இது கடந்த முறை வழங்கப்பட்ட மொத்த பரிசுத் தொகையை விட 11 சதவீதம் அதிகமாகும்.

    ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுவதற்கு தலா ரூ.24.41 கோடி கிடைக்கும். முதல் சுற்றுடன் வெளியேறுபவர்கள் தலா ரூ.57 லட்சம் பெறவார்கள். 2019-ம் ஆண்டு கொரோனா நோய் தொற்றுக்கு முன்னதாக வழங்கப்பட்ட பரிசுத் தொகையைவிட தற்போது 17.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • கை மற்றும் கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
    • கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை தவறவிடுவேன் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது.

    இங்கிலாந்தை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை எம்மா ராடுகானு. 2021-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவரான அவர், இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கை மற்றும் கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    சமீபத்தில் நடந்த மாட்ரிட் ஓபனில் இருந்து கையில் காயத்துடன் வெளியேறி இருந்தார். காயம் காரணமாக அவர் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும் போது, கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை தவறவிடுவேன் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது.

    என்னை ஆதரித்த என்று ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

    • நடால் 22 பட்டத்துடன் முதல் இடத்திலும், பெடரர், ஜோகோவிச் ஆகியோர் தலா 20 பட்டத்துடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
    • விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஒரே ஒரு முறைதான் ஜோகோவிச் தோற்றுள்ளார்.

    லண்டன்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த அரை இறுதியில் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பி யனுமான ஜோகோவிச் (செர்பியா) அரை இறுதியில் 9-வது வரிசையில் உள்ள கேமரூன் நோரியை (இங்கிலாந்து) எதிர் கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 2-6, 6-3, 6-2, 6-4 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு 8-வது முறையாக முன்னேறினார். ஒட்டு மொத்தமாக கிராண்ட் சிலாம் போட்டியில் 32-வது தடவையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இதன் மூலம் அவர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) சாதனையை முறியடித்தார்.

    ஜோகோவிச் நாளை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் நிக் கார்கியோசை (ஆஸ்திரேலியா) எதிர் கொள்கிறார். அவரை வீழ்த்தி 21-வது கிராண்ட் சிலாம் பட்டம் வெல்லும் வேட்கையில் உள்ளார்.

    நடால் 22 பட்டத்துடன் முதல் இடத்திலும், பெடரர், ஜோகோவிச் ஆகியோர் தலா 20 பட்டத்துடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

    நாளை வெற்றி பெற்றால் ஜோகோவிச் முன்னேறி பெடரரை பின்னுக்கு தள்ளி விடுவார்.

    ஜோகோவிச் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஒரே ஒரு முறைதான் (2013) தோற்றுள்ளார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதி போட்டியின்போது நடாலுக்கு வயிற்றுப்பகுதியில் வலி ஏற்பட்டது.
    • சரியான வேகத்தில் என்னால் சர்வீஸ் செய்ய முடியவில்லை என்பதால் விலகியதாக நடால் தகவல்

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், 2ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்), அமெரிக்காவின் டெய்லர் பிட்சை 3-6, 7-5, 3-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். இந்த போட்டியின்போது நடாலுக்கு வயிற்றுப்பகுதியில் வலி ஏற்பட்டது. சிறிது நேர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு களமிறங்கி இப்போட்டியில் வெற்றி பெற்றிருந்தார். இன்று நடைபெறவிருந்த அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் நடால் மோத இருந்தார்.

    இந்த நிலையில், அரையிறுதி போட்டியில் இருந்து விலகுவதாக ரபேல் நடால் அறிவித்தார். வயிற்று தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அரையிறுதியில் விளையாட வில்லை என்று அறிவித்தார்.

    போட்டி தொடங்கு வதற்கு முன்பாக நிருபர்களை சந்தித்த நடால் கூறும்போது, துரதிர்ஷ் வசமாக நான் போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.

    காலிறுதி ஆட்டத்தில் நான் வயிற்று வலியால் அவதிப்பட்டதை அனைவரும் பார்த்தனர். அடிவயிற்று தசைகளில் காயம் ஏற்பட்டு இருப்பது உறுதியானது. அரை இறுதியில் இருந்து விலகும் முடிவை பற்றி நாள் முழுவதும் யோசித்து எடுத்தேன். எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலையில் பல முயற்சிகளை நான் தொடர்ந்து இருந்தாலும், தற்போது தொடர்ந்து விளையாடினால் காயம் மோசமாகிவிடும் என்பது வெளிப்படையானது. இதை சொல்வதில் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் என்னால் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற முடியாது. சரியான வேகத்தில் என்னால் சர்வீஸ் செய்ய முடியவில்லை என்பது மட்டுமல்ல சாதாரண செயல்பாட்டையும் செய்ய முடியாது என்பதால்தான் இந்த முடிவை எடுத்தேன், என்றார் நடால்.

    ரபேல் நடால், விலகியதை அடுத்து ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இன்று நடக்கும் மற்றொரு அரையிறுதியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா)-கேமரூன் நோரி (இங்கிலாந்து) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா)-ரைபதினா (கஜகஸ்தான்) மோதுகிறார்கள். இருவரும் முதல் முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜபீர் 7-6 (11-9), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • கால் இறுதியில் ஒன்ஸ் ஜபீர் செக்குடியரசுவை சேர்ந்த மரியா பவுஸ்கோவை சந்திக்கிறார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 3-வது வரிசையில் உள்ள ஒன்ஸ் ஜபீர் (துனிசியா) 24-வது நிலை வீராங்கனை எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) மோதினார்கள்.

    இதில் ஜபீர் 7-6 (11-9), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். கால் இறுதியில் அவர் செக்குடியரசுவை சேர்ந்த மரியா பவுஸ்கோவை சந்திக்கிறார்.

    மற்ற ஆட்டங்களில் தஜ்னா மரியா, ஜூலி நீமையர் (ஜெர்மனி) வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

    • அல்காரஸ் 6-3, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    • 5-ம் நிலை வீராங்கனையான ஷக்காரி (கிரீஸ்) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 15-வது வரிசையில் உள்ள கெர்பர் (ஜெர்மனி) அதிர்ச்சிகரமாக தோற்றார். 24-ம் நிலை வீராங்கனையான எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் அவரை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்ற 3-வது சுற்று போட்டிகளில் 3-வது வரிசையில் இருக்கும் ஜபேர் (துனிசியா), கார்சியா (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    5-ம் நிலை வீராங்கனையான ஷக்காரி (கிரீஸ்) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 5-ம் நிலை வீரரான கார்லோஸ், அல்காரஸ் (ஸ்பெயின்) 3-வது சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த ஆஸ்கர் ஒட்டேவை எதிர் கொண்டார்.

    இதில் அல்காரஸ் 6-3, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    20-வது வரிசையில் உள்ள ஜான் இஸ்னெர் (அமெரிக்கா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.

    • சானியா மற்றும் பாவிக் ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
    • 35 வயதான சானியா மிர்சா தனது இறுதி விம்பிள்டன் போட்டியில் விளையாடி வருகிறார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா- பாவிக் ஜோடி விளையாடி வருகிறது.

    ஆறாம் நிலை வீராங்கனையான சானியா மற்றும் பாவிக் ஜோடி 6-4, 3-6, 6(10)-6(3) என்ற செட் கணக்கில் ஜார்ஜியாவின் நடேலா டிசலமிட்ஸே - ஸ்பெயினின் டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

    35 வயதான சானியா மிர்சா தனது இறுதி விம்பிள்டன் போட்டியில் விளையாடி வருகிறார்.

    • முர்ரேவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு அமெரிக்க வீரர் தகுதி.
    • இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் வீரர் யுகோ ஹம்பெர்ட் வெற்றி.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் தனாசி கோக்கினாகிசை எதிர்கொண்டார்.

    இதில் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்ற ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் சக நாட்டை சேர்ந்த கெக்மனோவிச்சை அவர் சந்திக்கிறார்.

    மற்றொரு பரபரப்பான ஆட்டத்தில் பிரிட்டடை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே, அமெரிக்காவின் ஜான் இஸ்னருடன் மோதினர். இதில் 6-4, 7-6, 6-7, 6-4 என்ற செட்களில் முர்ரேவை வீழ்த்திய இஸ்னர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் யுகோ ஹம்பெர்ட் 3-6, 6-2, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் 6-ம் நிலை வீரர் நார்வேயை சேர்ந்த கேஸ்பர் ரூட்டை வீழ்த்தினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது.
    • செரீனா வில்லியம்ஸ் ஓராண்டுக்கு பிறகு களம் திரும்புகிறார்.

    லண்டன்:

    ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அவர்களுக்கு ஆதரவு தந்த பெலாரஸ் ஆகிய இரு நாட்டு வீரர், வீராங்கனைகள் விம்பிள்டனில் பங்கேற்க போட்டி அமைப்பு குழு தடை விதித்து விட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் வெற்றிக்கு தரவரிசை புள்ளிகள் வழங்கப்படாது என்று அறிவித்தது. இந்த சலசலப்புக்கு மத்தியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் அங்கு முகாமிட்டு தங்களை தயார்படுத்தி வருகிறார்கள்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச்சுக்கும் (செர்பியா), முன்னாள் சாம்பியன் ரபெல் நடாலுக்கும் (ஸ்பெயின்) இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 'நம்பர் ஒன்' வீராங்கனையும், சமீபத்தில் பிரெஞ்சு ஓபனை வென்றவருமான இகா ஸ்வியாடெக் (போலந்து) பட்டம் வெல்லபிரகாசமான வாய்ப்புள்ளது.

    ஆனால் இந்த முறை அதிக கவனத்தை ஈர்த்துள்ள செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஓராண்டுக்கு பிறகு களம் திரும்புகிறார். 40 வயதான செரீனா 7 முறை விம்பிள்டன் உள்பட 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற அனுபவசாலி. இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் கைப்பற்றினால் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்கரேட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்து விடுவார்.

    இந்த விம்பிள்டன் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.387 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் கோப்பையை ஏந்தும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.19¼ கோடி கிடைக்கும். 2-வது இடத்தை பெறுவோருக்கு ரூ.10 கோடி வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் வெல்லும் ஜோடி ரூ.5¼ கோடியை பரிசாக பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2022-ம் ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் பரிசுத்தொகை கடந்த ஆண்டை விட 11.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • ஆண், பெண் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு தலா ரூ. 19 கோடி வழங்கப்படுகிறது.

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந் தேதி முதல் ஜூலை 10-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 11.1 சதவீதம் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்த பரிசுத்தொகை ரூ. 392 கோடி ஆகும்.

    ஆண், பெண் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு தலா ரூ. 19 கோடி வழங்கப்படுகிறது. ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தோற்பவர்கள் ரூ.9.5 கோடி பெறுவார்கள்.

    விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ரபெல் நடால், பலம் வாய்ந்த ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார். #Wimbledon2018 #RafelNadal #NovakDjokovic
    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் 2-வது தரவரிசையில் இருப்பவரும், 2 முறை சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) கால்இறுதியில் 5-வது வரிசையில் இருக்கும் டெல் போட்ரோவை (அர்ஜென் டினா) எதிர்கொண்டார்.

    இதில் நடால் 7-5, 6-7 (7-9), 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 4 மணி 47 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    நடால் அரை இறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், 3 முறை விம்பிள்டன் பட்டம் வென்றவருமான ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொள்கிறார். அவர் கால் இறுதியில் ஜப்பான் வீரர் நிஷிகோரியை தோற்கடித்து இருந்தார்.

    மற்றொரு கால்இறுதியில் 9-வது வரிசையில் இருக்கும் ஜான் இஸ்னெர் (அமெரிக்கா) 6-7 (5-7), 7-6 (9-7), 6-4, 6-3 என்ற கணக்கில் ரோனிக்கை (கனடா) வீழ்த்தினார். இஸ்னெர் அரை இறுதியில் கெவின் ஆண்டர்சனை (தென்ஆப்பிரிக்கா) சந்திக்கிறார்.

    ஆண்டர்சன் கால்இறுதியில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீரருமான ரோஜர் பெடரரை (சுவிட்சர்லாந்து) வீழ்த்தி இருந்தார். அரை இறுதி ஆட்டங்கள் நாளை நடக்கிறது.

    இன்று நடைபெறும் பெண்கள் அரை இறுதி ஆட்டங்களில் கெர்பர் (ஜெர்மனி)- ஒஸ்டா பென்கோ (லாத்வியா), செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) -ஜூலியா ஜார்ஜெஸ் (ஜெர்மனி) மோதுகிறார்கள். #Wimbledon2018 #RafelNadal #NovakDjokovic
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரரான ரபெல் நடால் ஆகியோர் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். #NovakDjokovic #RafaelNadal
    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் இரண்டாம் நிலை வீரரும், 2 முறை பட்டம் வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 4-வது சுற்றில் செக்குடியரசை சேர்ந்த வெஸ்லியை எதிர் கொண்டார். இதில் நடால் 6-3, 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    அவர் 6-வது முறையாக கால் இறுதியில் நுழைந்து உள்ளார். விம்பிள்டனில் 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்த முன்னேற்றத்தை அடைந்து உள்ளார்.

    நடால் கால்இறுதியில் 5-வது வரிசையில் இருக்கும் டெல் போட்ரோ (அர்ஜென்டினா) அல்லது ஷிமோனை (பிரான்ஸ்) சந்திக்கிறார். இருவரும் மோதிய 4-வது சுற்று ஆட்டத்தில் டெல்போட்ரோ 7-6 (7-1), 7-6 (7-5) 5-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. இந்த ஆட்டம் தொடர்ந்து இன்று நடைபெறும்.

    3 முறை சாம்பியனும், 12-வது வரிசையில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் ரஷியாவைச் சேர்ந்த கச்சனோவை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால் இறுதியில் நிஷிகோரியை சந்திக்கிறார்.

    மற்ற ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), இஸ்னர் (அமெரிக்கா), நிஷிகோரி (ஜப்பான்), ரோனிக் (கனடா) ஆகியோர் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), கெர்பர் (ஜெர்மனி), பெர்டன்ஸ் (நெதர்லாந்து), ஒஸ்டா பென்கோ (லாத்வியா), ஜுலியா ஜார்ஜஸ் (ஜெர் மனி), சிபுல்கோவா (சுலோ வாக்கியா), டாரியா கசாட் சினா (ரஷியா), கேமிலா ஜியோர்பி (இத்தாலி) ஆகியோர் 4-வது சுற்றில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்கள். பெண்கள் கால்இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. #NovakDjokovic #RafaelNadal
    ×