search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஸ்து நாள்"

    • அனைத்து கட்டிடங்களுக்கும் உயிரோட்டம் உண்டு என்ற கருத்தை வாஸ்து முன் வைக்கிறது.
    • வீடுகளுக்குள் நல்ல வெளிச்சம் வரும்படி கட்டமைக்கப்பட வேண்டியது முக்கியம்.

    ஒரு வீடு அல்லது மனை அமைப்புக்கு வடகிழக்கு அல்லது தென்மேற்கு பகுதிகளில் வாஸ்து ரீதியான குறைகள் இருக்கும்போது அதன் உரிமையாளருக்கு பல்வேறு சிக்கல்கள் வரலாம் என்று வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். வங்கியில் கடனை வாங்கி வீடு அல்லது மனை வாங்குவது அப்படிப்பட்ட சிரமங்களை சந்திக்கவா என்ற கேள்வி அனைவருக்கும் வரலாம்.

    அனைத்து கட்டிடங்களுக்கும் உயிரோட்டம் உண்டு என்ற கருத்தை வாஸ்து முன் வைக்கிறது. அதனை அனுசரித்து வீடு அல்லது மனை அமைப்பை சரி செய்து, கட்டிடங்களை அமைத்துக்கொண்டால் எதிர்காலத்தில் உருவாகும் சிக்கல்களை சமாளிக்கலாம் என்பது வாஸ்து நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

    வீடு என்பது மணலும் சிமெண்டும் கூடிய கட்டிடமாக இருப்பினும், இயற்கையின் சக்திகளும் இணைந்துதான் இருக்கிறது. இயங்கும் பூமியின் மீது அமைக்கப்படும் கட்டமைப்புகள் குறிப்பிட்ட வடிவத்தை அடையும்போது இயற்கையின் ஆற்றலால் தாக்கம் பெற்று அதற்கேற்ப செயல்படத் தொடங்கி விடும் என்ற வாஸ்துவின் உட்கருத்தை வல்லுனர்கள் எடுத்துக்காட்டி இருக்கிறார்கள்.

    பழமையான கட்டிட சாஸ்திர நூல்கள் வீடுகளுக்குள் நல்ல வெளிச்சம் வரும்படி கட்டமைக்கப்பட வேண்டியது முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளன. வீடுகள் இருட்டாக இருப்பது கூடாது. ஒரளவாவது சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் வரவேண்டும். குறிப்பாக, சூரிய வெளிச்சம் வடகிழக்கு வழியாக வீட்டுக்குள் நுழையும்போது- பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவ்வாறு, சூரிய வெளிச்சம் நுழையாத வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளில் நல்ல பலன்களை எதிர்பார்க்க இயலாது என்பதையும் வாஸ்து சாஸ்திர நூல்கள் குறிப்பிட்டுள்ளன.

    ஒரு கட்டமைப்பை சுற்றிலும் நான்கு பக்கங்களிலும் காலி இடம் இருப்பது சிறப்பு என்பது பிரதான வாஸ்து விதியாகும். அதாவது, காம்பவுண்டு சுவரை ஒட்டியவாறு கட்டிடத்தை அமைக்காமல், சுற்றி வருவதற்கு ஏதுவாக காலியிடம் இருக்கவேண்டும். அதன் மூலம், நிலத்திலிருந்து வெளிப்படும் இயற்கை சக்தி ஓட்டத்துக்கு தடை ஏற்படாமல், மனை அல்லது கட்டிடத்தின் எட்டு பக்கங்களிலும் உள்ள அஷ்ட திசை அதிபதிகளின் நற்பலன்கள் கிடைக்க அது ஏதுவாக அமையும்.

    எந்த திசையை நோக்கிய மனையாக இருந்தாலும், அதற்குரிய திசை அதிபர்களை அறிந்து அவர்களின் தன்மைக்கு ஏற்ப கட்டமைப்பை வடிவமைப்பது முக்கியம். கோண திசையில் உள்ள மனைகளுக்கும் இந்த விதி பொருந்தும். கிழக்கு திசைக்கு இந்திரன், மேற்கு திசைக்கு வருணன், வடக்கு திசைக்கு குபேரன் மற்றும் தெற்கு திசைக்கு எமதர்மன் ஆகியோர் அதிபதிகளாக அமைகிறார்கள்.

    • வாஸ்து பகவான் கண் விழிக்கும் நாளே வாஸ்து நாள்.
    • வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார்.

    வாஸ்து நாளில், வாஸ்து பகவானை வழிபடுவது சிறப்பு. இல்லத்தின் திருஷ்டியைப் போக்கி, தொழிலில் மேன்மையும் உத்தியோகத்தில் உயர்வும் தந்து அருளுவார் வாஸ்து பகவான். இன்று வாஸ்து நாள். வாஸ்து பகவான் கண் விழிக்கும் நாளே வாஸ்து நாள் எனப்படுகிறது. சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம். ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். அந்த எட்டு நாட்களிலும் வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார்.

     வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாட்களில் ஒருநாளில் ஒன்றரை மணி நேரம் மட்டுமே விழித்திருப்பார். அப்படி அவர் விழித்ததும் காலையிலேயே நீராடுவார் என்றும் பூஜைகள் செய்வார். இதையடுத்து பூஜைக்குப் பின்னர் உணவு எடுத்துக் கொள்ளுவார். அப்படி நிம்மதியும் நிறைவுமாக இருக்கும் தருணம்தான், வாஸ்து பூஜைக்கான நேரம். பூமி பூஜைக்கான நேரமாகும். பூமிபூஜையின் போது வாஸ்து ஹோமம் மற்றும் பூஜைசெய்தால் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேறும். இன்று பூமி காரகனாகிய செவ்வாய்க்கிழமை வாஸ்து செய்வது விசேஷம். இன்று வேறு தோஷங்கள் பார்க்க வேண்டாம். நேரம், வாக்கிய பஞ்சாங்கப்படி காலை 9.12 முதல் 10.42 வரை வாஸ்து செய்ய நல்ல நேரம் ஆகும்.

    • நம்மில் ஒவ்வொருவரின் கனவாக இருப்பது சொந்த வீடு.
    • வாஸ்து பகவானை பூஜிக்காமல் ஆரம்ப பூஜையை செய்வது உகந்தது அல்ல.

    நம்மில் ஒவ்வொருவரின் கனவாக இருப்பது சொந்த வீடு. அப்படி வீடு, தொழிற்சாலை போன்ற கட்டிடங்களைக் கட்டும் முன்பாக, வாஸ்து பகவானை வழிபட்டு, பின்னர் அந்தப் பணிகளைத் தொடர வேண்டும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். ஒரு வருடத்தில் எட்டு மாதங்களில் எட்டு நாட்கள் மட்டுமே வாஸ்து பகவான் கண் விழிக்கின்றார். மற்ற அனைத்து நாட்களும் அவர் நித்திரையில் இருக்கிறார். வாஸ்து பகவானை பூஜிக்காமல், அடிப்படையான ஆரம்ப பூஜையை செய்வது உகந்தது அல்ல என்கிறார்கள். அத்தகைய சிறப்புக்குரிய வாஸ்து பகவானைப் பற்றிதான் இங்கே பார்க்கப் போகிறோம்.

    வாஸ்து புருஷன் தோன்றிய வரலாறு

    அந்தகாசுரன் என்ற அசுரனுடன் பெரும் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார், சிவபெருமான். அப்போது சிவனின் உக்கிரமான வடிவத்தில் இருந்து வெளிப்பட்ட வியர்வைத் துளிகள் பூமியில் விழுந்தது. அதில் இருந்து தோன்றிய மிகப்பெரிய பூதம் ஒன்று, மிகுந்த பசியுடன் மூன்று உலகங்களையும் விழுங்கக்கூடியதாக இருந்தது. அதைப்பார்த்த சிவபெருமான், "அந்தகாசுரனின் உதிரத்தை உண்டு, உன் பசியை போக்கிக்கொள்" என்று அந்த பூதத்திடம் கூறி மறைந்தார்.

    அதன்படியே செய்த பூதம், அந்தகாசுரன் அழிந்த பிறகு, கடுமையான தவத்தை மேற்கொண்டது. அந்த தவத்தைக் கண்ட தேவர்கள் நடுங்கினார்கள்.

    திருக்கயிலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமானும் மாய அஸ்திரங்களை அனுப்பி அந்த பூதத்தை பூமியில் விழும்படி செய்தார். அப்போதும் அந்த பூதம் தன் வலிமையால், மேலே எழ முயற்சி செய்தது. அப்போது அந்த பூதத்தின் மீது தேவர்கள் பலரும் அமர்ந்தனர். அதன் காரணமாக பூதம் அடங்கியது. மேலும் தேவர்கள் அமர்ந்த காரணத்தால் அந்த பூதம் புனிதமானது.

    அந்த பூதத்திற்கு `வாஸ்து' என்ற பெயர் உண்டானது. இன்னும் சிலர், இந்த பூதம் அழிந்த பின், அதனை அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார் மீண்டும் உயிர்ப்பித்ததாகவும் சொல்கிறார்கள்.

    முன்பு ஒரு யுகத்தில் மலைகளுக்கு இறகுகள் இருந்ததாம். இறகுகளைக் கொண்ட மலைகள், பறந்து பறந்து பின் பூமியில் இறங்கி பூமியை அதிர்வுக்குள்ளாக்கியும், சேதப்படுத்தியும் தொல்லை கொடுத்தன.

    இதனால் இந்திரன் தன்னுடைய வஜ்ஜிராயுதத்தைக் கொண்டு, மலைகளின் இறகுகளை அறுத்து எறிந்தான். இதனால் பறக்க முடியாத மலைகள், குளிகன், மகாபத்மன், பத்மன், கார்கோடகன், ஆனந்தன், தட்சன், சங்கன், வாசுகி போன்ற பல நாகங்களின் மீது விழுந்து அழுத்தின. இதனால் பாரம் தாங்காமல் அந்த நாகங்கள் கக்கிய விஷத்தில் இருந்து வாஸ்து தோன்றியதாகவும் சில புராணங்கள் சொல்கின்றன. வாஸ்து பகவானை `பூமி புத்திரன்' என்றும் அழைப்பார்கள்.

    வாஸ்து பூஜை செய்யும் முறை

    வாஸ்து பகவான் நித்திரையை விட்டு கண் விழிக்கும் நாளில்தான் இந்தப் பூஜையை செய்ய வேண்டும். வீடு கட்டுபவர்கள், வீடு கட்டுவதற்கான ஆரம்ப பூஜை (கிரக ஆரம்பம்) செய்வதற்கு முன்பாக, இந்த வாஸ்து பூஜையை செய்ய வேண்டியது அவசியம்.

    பொதுவாக, செவ்வாய், சனிக்கிழமைகள் தவிர்த்து சுபவேளையில் மனை தேர்வு செய்த பின் வீடு கட்டத் திட்டமிடலாம். பூமியை தேர்ந்தெடுத்த பின் 'பூ பரிகஷா' என்ற மனை பரிசோதனை செய்தல் நல்லது. ஒரு அடி அகல நீள ஆழம் உள்ள குழி தோண்டி நீர் விட்டு, அதில் வெள்ளை மற்றும் சிவப்பு மலர்களைப் போட்டு பரிசோதிக்க வேண்டும். மனை பூஜைக்கு முன் வாஸ்து பூஜை செய்தல் அவசியம்.

    வாஸ்து புருஷனை பூஜித்து விட்டு, அதன்பின்னர் வீடு அல்லது தொழிற்சாலைகளை கட்டலாம். மனையின் தென்கிழக்கு பாகத்தில் நான்கு செங்கல்களை தேர்ந்தெடுத்து, அதற்கு கிணற்று நீர் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    பின்னர் அந்த செங்கல்களை கிழக்கு மேற்காக வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களையும் ஆவாஹனம் செய்து ஷோடச உபசாரம் செய்து பூஜிக்க வேண்டும். தொடர்ந்து ஒன்பது செங்கற்களை கிழக்கு மேற்காக வைத்து, நவக்கிரகங்களை அதில் ஆவாஹனம் செய்து அபிஷேக, ஆராதனை செய்து பூஜிக்க வேண்டும்.

    செங்கற்களை நான்கு, மூன்று, இரண்டு என்ற வரிசையில் வைத்தல் வேண்டும். பூஜைக்கு வாசனை மலர்களைப் பயன்படுத்த வேண்டும். எந்தப் பூஜையும் விநாயகரை ஆராதனை செய்த பின் செய்வது உத்தமம் என்பதால், விநாயகரை பூஜித்தே வாஸ்து பூஜையை செய்ய வேண்டும். மேலும் வாஸ்து பூஜை செய்யும் நாளில் குலதெய்வம், கிராம தெய்வம், இஷ்ட தெய்வத்தையும் பூஜித்தல் நன்மை தரும்.

    முதலில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து அதற்கு குங்குமம் வைத்து மலர் சரம் சாற்ற வேண்டும். அப்போது 'ஓம் வக்ர துண்டம் ஆவாஹயாமி', 'ஓம் விக்னராஜம் ஆவாஹயாமி', 'ஓம் கஜானனம் ஆவாஹயாமி', 'ஓம் ஸித்தி விநாயகம் ஆவாஹயாமி' ஆகிய நான்கு நாமங்களை ஆவாஹனம் செய்து, அருகம்புல் மாலை சூட்டி, விநாயகரின் ஷோடச நாமங்களால் அவரை அர்ச்சித்து விக்னங்களும், அந்த மனையில் உள்ள சகல பூத, பிரேத, பிசாசுகளும் விலகவும், அதே இடத்தில் லட்சுமி தேவியின் வாசம் ஏற்படவும், குடும்ப விருத்தி ஏற்படவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    பின் வாஸ்து புருஷனை, 'ஓம் பூ: வாஸ்து புருஷம் ஆவாஹயாமி', 'ஓம் புவ: மஹாகாயம் ஆவாஹயாமி', 'ஓம் ஸுவ: க்ருஷ்ணாங்கம் ஆவாஹயாமி', 'ஓம் பூர்புவஸ்ஸுவ: ரக்தலோசநம் ஆவாஹயாமி' என்ற நாமங்களை ஆவாஹனம் செய்து, பின் வீடுகட்ட ஆரம்பிக்கும் இடத்தில் 'ஆத்யேஷ்ட காத்யாஸம்' என்றபடி 9 கற்களை வைத்து, நான்கு திசையில் நான்கு கற்களையும் வைத்து பந்தனம் செய்து, பின் எட்டு திக்குகளிலும் இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசான தேவர்களுக்கு பூசணிக்காய் பலி சேர்க்க வேண்டும்.

    கோவிலாக இருந்தால் 'மூர்தேஷ்ட காத்யாஸம்' என்றபடி கடைசி கல் பிரம்மா பாதத்தில் வைக்க வேண்டும். ஆத்யேஷ்ட காத்யாசம் செய்யும் முன் 'ரத்ஷையாசம்' என்றபடி நவமணிகள் என அழைக்கப்படும், முத்து, பவளம், மரகதம், புஷ்பராகம், வைரம், நீலம், கோமேதகம் வைடூர்யம், மாணிக்கம் முதலியவற்றை வைக்கவும். அதோடு நவதானியங்களை, சுமங்கலி பெண்களைக் கொண்டு சேர்ப்பது விசேஷமானது.

    மேலும் செப்பு, வெள்ளி தகட்டில் ஷட்கோணமும், நடுவில் வாஸ்து மூல எழுத்தும், வட்டமும் வரைந்து, அதன் மேல் அஷ்ட தளம் எழுதி, இந்திரன் முதல் ஈசானன் வரை எழுதி, நான்கு பக்கத்திலும் நான்கு வாஸ்து பிரதான நாமங்களை எழுதி பூஜித்து வாஸ்து யந்திர ஸ்தாபனமும் செய்யலாம்.

    இந்த வருடத்தில் வருகிற மார்ச் மாதம் 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை), (மாசி மாதம் 22-ந் தேதி) காலை 8 நாழிகைக்கு வாஸ்து புருஷன் கண் விழிக்கிறார். இந்த நாளில் வீடு கட்டுபவர்கள், அதற்கான பூஜையை செய்யலாம். வருகிற 5-ந் தேதி காலை 10.06 மணிக்கு மேல் 10.42 மணிக்குள் வாஸ்து பூஜை செய்வது விசேஷ நன்மைகளை தரும். (இது சூரிய உதயத்தில் இருந்து அந்தந்த ஊருக்கு ஏற்றபடி கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.)

    இதில் எமகண்டம் ஒன்பது மணி முதல் 10.30 மணி வரை இருப்பதால், 'அந்த நேரத்தில் செய்ய வேண்டாம்' என்று நினைப்பவர்கள், 10.30 மணிக்கு மேல் ஆரம்பித்து செய்யலாம். பொதுவாக வாஸ்து பூஜைக்கு சந்திராஷ்டமம் இல்லாமல் இருந்தால் போதும்.

    செவ்வாய்க்கிழமை, சனிக் கிழமை, அஷ்டமி, நவமி, மரண யோக தோஷங்கள் பார்க்க வேண்டியது இல்லை. ஆனால் கிரக ஆரம்பத்திற்கு இவை அனைத்தையும் கட்டாயம் பார்க்க வேண்டும்.

    விசேஷ வாஸ்து தியானம்

    வாஸ்து புருஷோ மஹா காயோ க்ருஷ்ணாங்கோ

    ரக்த லோசந ரக்தாநநோ த்விபாஹூச்ச

    பப்பருவாஹ பராங்க்க:

    ஸயாநம் நீலதிக் பாதமை சாந்யே ந்யஸ்த மஸ்தக:

    என்ற மந்திரத்தை உச்சரித்து வாஸ்து பகவானை தியானிக்க வேண்டும். அவரை தியானிப்பது சகல நன்மைகளையும் கொடுக்கும். மேலும் வன்னி, வில்வம், அரசு, ஆல், அத்தி, புரசை, கருங்காலி ஆகிய ஏழு சமித்துக்கள் வாஸ்து ஹோமத்திற்கு விசேஷமானவை ஆகும். வாஸ்து பகவானுக்கு வெண் பொங்கல் நைவேத்தியம் வைப்பது மிகவும் நல்லது. மனையில் சங்கு ஸ்தாபனம் செய்து ஸல்லியம் பார்ப்பது போன்றவையும் மிகவும் விசேஷமானது.

    'வாஸ்து புருஷத்யாம்நம்:-

    வாஸ்து புருஷோ மஹாகாயோ க்ருஷ்ணாங்கேர ரக்தலோசந:

    ஏகாந நோ த்விபாஹுஸ்ச பப் ருவாஹ:

    பராங்கக: ஸயாநம் நீலதிக்பாதம் ஐஸாந்யே ந்யஸ்த மஸ்தக:

    குதாஞ்ஜலி புடோ த்யாயேத் பஸம்வத் இஷ்டார்த்த ஸித்தே யே!'

    என்பது, திருவல்லிக்கேணி, திருப்பதி போன்ற ஆலயங்களில் சொல்லப்படும் வாஸ்து தியானம் ஆகும்.

    • பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கும் வழக்கம் காலம்காலமாக உள்ளது.
    • தேய்பிறை நவமி முதல் சதுர்த்தசி முடிய உள்ள நாட்களில் தொடங்குவது கூடாது.

    கட்டுமான பணிகளை தொடங்கும் முன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கும் வழக்கம் காலம்காலமாக உள்ளது. அதற்காக பொருத்தமான நாள், நட்சத்திரம் போன்ற விஷயங்களை பலரும் தேர்வு செய்வது நடைமுறையாக உள்ளது. நான்கு திசைகளிலும், எந்த ஒரு திசையிலும் வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கான தலைவாசல் அமைக்கப்படலாம். அதற்கேற்ப நல்ல நாட்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

    வாஸ்து பகவான் நித்திரை விடும் நாட்களில், அவர் விழித்திருக்கும் 90 நிமிடங்களில் பூஜை செய்யலாம். இந்த நேரப்பொழுதில் அவர் ஒவ்வொரு 18 நிமிடங்களில் முறையே பல் துலக்குதல், ஸ்நானம் செய்தல், பூஜை செய்தல், உணவு உண்ணுதல், வெற்றிலை போடுதல் ஆகிய காரியங்களில் ஈடுபடுவார்.

    இதில், அவர் உணவு உண்ணும் நேரம் மற்றும் வெற்றிலை போடும் நேரத்தில் பூஜிப்பது வெகு விசேஷம். அதன்படி மனைகோல நல்ல நேரங்கள், வாஸ்து புருஷன் நித்திரை விடும் நாட்களின் பட்டியல் இதோ:-

    வாஸ்து புருஷன் விழிக்கும் நாட்கள்

    சித்திரை 10-ம் தேதி - காலை 8.00 9:30

    வைகாசி 21-ம் தேதி - காலை 9:12 10:42

    ஆடி 11-ம் தேதி - காலை 6:48 - 8:18

    ஆவணி 6-ம் தேதி - மாலை 2:24 3:54

    ஐப்பசி 11-ம் தேதி - காலை 6:48 8:18

    கார்த்திகை 8-ம் தேதி - காலை 10:00 -11:30

    தை 12-ம் தேதி - காலை 9:12 10:42

    மாசி 22-ம் தேதி - காலை 9:12 - 10:42

    மேற்கண்ட மாதம், நாள் மற்றும் நேரம் விவரங்கள் எல்லா வருடத்திலும் நிலையானதாக இருக்கும். மாற்றமில்லாத இந்த நாட்களுக்கு வாரம், திதி, நட்சத்திர தோஷம் எதுவும் கிடையாது என்பது ஐதீகம்.

    மேற்கண்ட நாட்களில் பூஜை போட முடியாவிட்டால் கீழ்க்கண்ட விஷயங்களை கவனித்து நல்லநாளில் பூஜை செய்யலாம்.

    வடக்கு தலைவாசல் வீடுகளுக்கான மனை கோலும் பணிகளை தேய்பிறை நவமி முதல் சதுர்த்தசி முடிய உள்ள நாட்களில் தொடங்குவது கூடாது.

    கிழக்கு தலைவாசல் வீடுகளுக்கான மனை கோலும் பணிகளை வளர்பிறை நவமி முதல் சதுர்த்தசி முடிய உள்ள நாட்களில் தொடங்கக் கூடாது.

    தெற்கு தலைவாசல் வீடுகளுக்கான மனை கோலும் பணிகளை பவுர்ணமி முதல் தேய்பிறை அஷ்டமி வரை உள்ள நாட்களில் தொடங்கக் கூடாது.

    மேற்கு தலைவாசல் வீடுகளுக்கான மனை கோலும் பணிகளை அமாவாசை முதல் வளர்பிறை அஷ்டமி வரை உள்ள நாட்களில் தொடங்கி செய்வது கூடாது.

    மனை கோலும் நேரத்தில் பஞ்சாங்கம் என்ற 5 அங்கங்களில் ஒன்றான யோகம் என்ற அம்சம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மனை கோல ஏற்ற 14 யோகங்களாவன:

    பிராம்மியம், மகேந்திரம், சாத்தியம், சிவம், சுப்பிரம், ஆயுஷ்மான், சவுபாக்கியம், துருவம், வைதிருதி, சோபனம், சுபம், பிரீதி, சித்தம், சித்தி ஆகியவையாகும்.

    இந்த யோகங்கள் அமைந்த சுப நேரத்தில் மனை கோலுவது பல நன்மைகளை உண்டாக்கும் என்று வாஸ்து நூல்கள் குறிப்பிட்டுள்ளன.

    • செவ்வாய் கிழமையாக இருப்பது அவசியம்.
    • கிரக வசிய பூஜையை செய்யலாம்.

    வீடு-மனை ஆகியவற்றை அடைவதில் உள்ள சிக்கல்களுக்கு வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இரண்டு விதமான வழிகளை காட்டி இருக்கின்றனர். முதலாவது வழி பூமி வசிய முறை என்றும், இரண்டாவது வழி கிரக வசிய முறை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. நம்பிக்கை சார்ந்த அப்படிப்பட்ட விஷயங்களின் குறிப்புகளை இங்கே காணலாம்...

    முதல் வழிமுறை

    வீடு அல்லது மனை வாங்க தேவையான வசதிகள் அமைந்த பலருக்கும் எதிர்பாராத தடைகளால் தாமதமாகி இருக்கக்கூடும். அந்த சூழலில் பின்பற்றவேண்டிய வாஸ்து கிரக வசிய முறை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

    ஒரு ஆண்டுக்கு 8 முறை வாஸ்து கண் விழிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த நாட்களில் கிரக வசிய பூஜை முறையை கடைப்பிடித்து பயன்பெறலாம்.

    வாஸ்து விழித்தெழும் நாட்கள்

    * சித்திரை - 10-ம் நாள் காலை 8-55 முதல் 9-30 மணி வரை.

    * வைகாசி - 21-ம் நாள் காலை 10-06 முதல் 10-42 மணி வரை.

    * ஆடி - 11-ம் நாள் காலை 7-38 முதல் 8-14 மணி வரை.

    * ஆவணி - 6-ம் நாள் பகல் 3-18 முதல் 3-54 மணி வரை.

    * ஐப்பசி - 11-ம் நாள் காலை 7-42 முதல் 8-18 மணி வரை.

    * கார்த்திகை - 8-ம் நாள் காலை 11-09 முதல் 11-45 மணி வரை.

    * தை - 12-ம் நாள் காலை 10-50 முதல் 11-26 மணி வரை.

    * மாசி - 22-ம் நாள் காலை 10-12 முதல் 10-48 மணி வரை.

    மேற்கண்ட எட்டு நாள்களில் எந்த நாளிலும் கிரக வசிய பூஜையை செய்யலாம். பூஜைகள் வழக்கமான முறைப்படி மங்களன் என்ற செவ்வாய் மற்றும் வாஸ்து புருஷன் ஆகியவர்களுக்கு செய்வது முறை. அதன் மூலம் மனை வாங்குவதில் உள்ள தடைகள், மனை வாங்கிய பிறகு வீடு கட்டுவதில் உள்ள தடைகள் ஆகியவை அகலும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    இரண்டாம் வழிமுறை

    ஜோதிட கிரக சிந்தாமணி என்ற பெரிய வருசாதி நூலில் சொல்லப்படுவதாவது:-

    * அஸ்தம், பரணி, திருவோணம் மற்றும் விசாகம் ஆகிய நான்கு நட்சத்திரங்கள் அமைந்த நாளில், நட்சத்திரத்தின் நான்காம் பாதம் உள்ள நேரத்தை கணக்கிட்டு கொள்ளவேண்டும்.

    * அன்று செவ்வாய் கிழமையாக இருப்பது அவசியம்.

    * மேற்கண்ட இரண்டு நிலைகளும் உள்ள நாளில் வரக்கூடிய கடக லக்னம் அமைந்த நேரத்தில் சுத்தமான மண்ணை சிறிய அளவில் பிரசாதமாக சாப்பிட வேண்டும். அதன் மூலம் பூமி, மனை மற்றும் வீடு ஆகிய பாக்கியம் கிடைக்கும் என்று பாடல் வடிவத்தில் கூறப்பட்டுள்ளது.

    மேற்கண்ட முறையில் மண்ணை எடுக்க சுத்தமான ஒரு இடத்தில் மேல் பரப்பில் உள்ள மண்ணை ஒதுக்கி விட்டு சுமார் மூன்றடி ஆழத்தில் இருக்கும் சுத்தமான மண்ணை எடுத்து வைத்து கொள்வது அவசியம்.

    மேற்கண்ட நேரத்தில் இஷ்ட தெய்வம், வாஸ்து மற்றும் செவ்வாய் பூஜைகள் செய்து பழங்களில் வைக்கப்பட்ட சிறிதளவு மண்ணை பிரசாதமாக உண்பதால் சொந்த வீடு அல்லது மனை வாங்கக்கூடிய யோகம் சித்திக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

    ×