search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஸ்து சாஸ்திரம்"

    • திருமணமாகாத பெண்களை வீட்டின் வடமேற்கு அறையில் படுக்குமாறு செய்தால், விரைவில் திருமணம் கூடி வரும்.
    • வெளியில் இருக்கும் ரோடு மட்டத்தை விட வீட்டுக்கு தளம் உயரமாக இருக்க வேண்டும்.

    * வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கையை ஒற்றைப் படையில் அமைக்க வேண்டும்.

    * வீட்டுக்கு காலியிடம் அமைக்க வேண்டும் என்றால், மனைக்கு வடக்கிலும் கிழக்கிலும் அமைக்க வேண்டும்.

    * கழிவு நீரை வீட்டிற்கு கிழக்கு அல்லது வடக்கில் வெளியேறுமாறு அமைக்க வேண்டும்.

    * வாசல்படிகள் ஒற்றைப் படையில் அமைய வேண்டும். மேற்கிலிருந்த கிழக்கு நோக்கியோ, தெற்கிலிருந்து வடக்கு நோக்கியோ ஏறுமாறு அமைக்க வேண்டும்.

    * மாடியை வடக்கிலோ, கிழக்கிலோ கட்டவும், மாடிப்படி வடக்கு நோக்கி ஏறும்படியோ, கிழக்கு நோக்கி ஏறுமாறோ அமைக்க வேண்டும்.

    * கிணறு, போரிங், நீர்த்தொட்டி முதலியவற்றை கிழக்கிலோ, மேற்கிலோ அமைக்கவும்.

    * கழிவறை வடக்கு பார்த்து அமரும்படி அமைக்க வேண்டும். ஈசான்ய மூலையில் கழிவறை அமையக்கூடாது.

    * மாணவர்கள் கிழக்கு நோக்கி உட்கார்ந்து படித்தால் கல்வி சிறக்கும்.

    * வியாபார ஸ்தலத்தில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமரவும்.

    * இரும்பு பெட்டி, பீரோ முதலியவற்றை தென்மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கி நோக்கி வைக்க வேண்டும். செல்வம் நிலைத்திருக்கும்.

    * வியாதிஸ்தர்களை வீட்டின் தென்மேற்கு அறையில் தெற்கில் தலை வைத்து படுக்க வைத்தால் நோய் குணமாகும்.

    * தண்ணீர் தொட்டி வீட்டின் கன்னி மூலையில் மாடியில் அமைக்க வேண்டும்.

    * வீட்டில் பாகப்பிரிவினை செய்தால், மூத்தவர்களுக்கு மேற்கு அல்லது தெற்குப் பகுதியை கொடுக்க வேண்டும். இளையவர்களுக்கு கிழக்கு அல்லது வடக்கு பகுதியை கொடுக்கவும்.

    * வீட்டின் அருகில் மாமரம், வாழை மரம், வேப்ப மரம், எலுமிச்சை, மல்லிகைச் செடியை வளர்க்கலாம்.

    * ஆலமரம், பனைமரம், எருக்கு, எட்டி மரம், வில்வ மரம், முருங்கை மரம், பப்பாளி, அகத்திச்செடி, இலுப்பை மரம் வளர்க்கக் கூடாது.

    * வெளியில் இருக்கும் ரோடு மட்டத்தை விட வீட்டுக்கு தளம் உயரமாக இருக்க வேண்டும்.

    திருமணமாகாத பெண்களை வீட்டின் வடமேற்கு அறையில் படுக்குமாறு செய்தால், விரைவில் திருமணம் கூடி வரும்.

    • அனைத்து கட்டிடங்களுக்கும் உயிரோட்டம் உண்டு என்ற கருத்தை வாஸ்து முன் வைக்கிறது.
    • வீடுகளுக்குள் நல்ல வெளிச்சம் வரும்படி கட்டமைக்கப்பட வேண்டியது முக்கியம்.

    ஒரு வீடு அல்லது மனை அமைப்புக்கு வடகிழக்கு அல்லது தென்மேற்கு பகுதிகளில் வாஸ்து ரீதியான குறைகள் இருக்கும்போது அதன் உரிமையாளருக்கு பல்வேறு சிக்கல்கள் வரலாம் என்று வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். வங்கியில் கடனை வாங்கி வீடு அல்லது மனை வாங்குவது அப்படிப்பட்ட சிரமங்களை சந்திக்கவா என்ற கேள்வி அனைவருக்கும் வரலாம்.

    அனைத்து கட்டிடங்களுக்கும் உயிரோட்டம் உண்டு என்ற கருத்தை வாஸ்து முன் வைக்கிறது. அதனை அனுசரித்து வீடு அல்லது மனை அமைப்பை சரி செய்து, கட்டிடங்களை அமைத்துக்கொண்டால் எதிர்காலத்தில் உருவாகும் சிக்கல்களை சமாளிக்கலாம் என்பது வாஸ்து நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

    வீடு என்பது மணலும் சிமெண்டும் கூடிய கட்டிடமாக இருப்பினும், இயற்கையின் சக்திகளும் இணைந்துதான் இருக்கிறது. இயங்கும் பூமியின் மீது அமைக்கப்படும் கட்டமைப்புகள் குறிப்பிட்ட வடிவத்தை அடையும்போது இயற்கையின் ஆற்றலால் தாக்கம் பெற்று அதற்கேற்ப செயல்படத் தொடங்கி விடும் என்ற வாஸ்துவின் உட்கருத்தை வல்லுனர்கள் எடுத்துக்காட்டி இருக்கிறார்கள்.

    பழமையான கட்டிட சாஸ்திர நூல்கள் வீடுகளுக்குள் நல்ல வெளிச்சம் வரும்படி கட்டமைக்கப்பட வேண்டியது முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளன. வீடுகள் இருட்டாக இருப்பது கூடாது. ஒரளவாவது சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் வரவேண்டும். குறிப்பாக, சூரிய வெளிச்சம் வடகிழக்கு வழியாக வீட்டுக்குள் நுழையும்போது- பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவ்வாறு, சூரிய வெளிச்சம் நுழையாத வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளில் நல்ல பலன்களை எதிர்பார்க்க இயலாது என்பதையும் வாஸ்து சாஸ்திர நூல்கள் குறிப்பிட்டுள்ளன.

    ஒரு கட்டமைப்பை சுற்றிலும் நான்கு பக்கங்களிலும் காலி இடம் இருப்பது சிறப்பு என்பது பிரதான வாஸ்து விதியாகும். அதாவது, காம்பவுண்டு சுவரை ஒட்டியவாறு கட்டிடத்தை அமைக்காமல், சுற்றி வருவதற்கு ஏதுவாக காலியிடம் இருக்கவேண்டும். அதன் மூலம், நிலத்திலிருந்து வெளிப்படும் இயற்கை சக்தி ஓட்டத்துக்கு தடை ஏற்படாமல், மனை அல்லது கட்டிடத்தின் எட்டு பக்கங்களிலும் உள்ள அஷ்ட திசை அதிபதிகளின் நற்பலன்கள் கிடைக்க அது ஏதுவாக அமையும்.

    எந்த திசையை நோக்கிய மனையாக இருந்தாலும், அதற்குரிய திசை அதிபர்களை அறிந்து அவர்களின் தன்மைக்கு ஏற்ப கட்டமைப்பை வடிவமைப்பது முக்கியம். கோண திசையில் உள்ள மனைகளுக்கும் இந்த விதி பொருந்தும். கிழக்கு திசைக்கு இந்திரன், மேற்கு திசைக்கு வருணன், வடக்கு திசைக்கு குபேரன் மற்றும் தெற்கு திசைக்கு எமதர்மன் ஆகியோர் அதிபதிகளாக அமைகிறார்கள்.

    • நம்மில் ஒவ்வொருவரின் கனவாக இருப்பது சொந்த வீடு.
    • வாஸ்து பகவானை பூஜிக்காமல் ஆரம்ப பூஜையை செய்வது உகந்தது அல்ல.

    நம்மில் ஒவ்வொருவரின் கனவாக இருப்பது சொந்த வீடு. அப்படி வீடு, தொழிற்சாலை போன்ற கட்டிடங்களைக் கட்டும் முன்பாக, வாஸ்து பகவானை வழிபட்டு, பின்னர் அந்தப் பணிகளைத் தொடர வேண்டும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். ஒரு வருடத்தில் எட்டு மாதங்களில் எட்டு நாட்கள் மட்டுமே வாஸ்து பகவான் கண் விழிக்கின்றார். மற்ற அனைத்து நாட்களும் அவர் நித்திரையில் இருக்கிறார். வாஸ்து பகவானை பூஜிக்காமல், அடிப்படையான ஆரம்ப பூஜையை செய்வது உகந்தது அல்ல என்கிறார்கள். அத்தகைய சிறப்புக்குரிய வாஸ்து பகவானைப் பற்றிதான் இங்கே பார்க்கப் போகிறோம்.

    வாஸ்து புருஷன் தோன்றிய வரலாறு

    அந்தகாசுரன் என்ற அசுரனுடன் பெரும் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார், சிவபெருமான். அப்போது சிவனின் உக்கிரமான வடிவத்தில் இருந்து வெளிப்பட்ட வியர்வைத் துளிகள் பூமியில் விழுந்தது. அதில் இருந்து தோன்றிய மிகப்பெரிய பூதம் ஒன்று, மிகுந்த பசியுடன் மூன்று உலகங்களையும் விழுங்கக்கூடியதாக இருந்தது. அதைப்பார்த்த சிவபெருமான், "அந்தகாசுரனின் உதிரத்தை உண்டு, உன் பசியை போக்கிக்கொள்" என்று அந்த பூதத்திடம் கூறி மறைந்தார்.

    அதன்படியே செய்த பூதம், அந்தகாசுரன் அழிந்த பிறகு, கடுமையான தவத்தை மேற்கொண்டது. அந்த தவத்தைக் கண்ட தேவர்கள் நடுங்கினார்கள்.

    திருக்கயிலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமானும் மாய அஸ்திரங்களை அனுப்பி அந்த பூதத்தை பூமியில் விழும்படி செய்தார். அப்போதும் அந்த பூதம் தன் வலிமையால், மேலே எழ முயற்சி செய்தது. அப்போது அந்த பூதத்தின் மீது தேவர்கள் பலரும் அமர்ந்தனர். அதன் காரணமாக பூதம் அடங்கியது. மேலும் தேவர்கள் அமர்ந்த காரணத்தால் அந்த பூதம் புனிதமானது.

    அந்த பூதத்திற்கு `வாஸ்து' என்ற பெயர் உண்டானது. இன்னும் சிலர், இந்த பூதம் அழிந்த பின், அதனை அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார் மீண்டும் உயிர்ப்பித்ததாகவும் சொல்கிறார்கள்.

    முன்பு ஒரு யுகத்தில் மலைகளுக்கு இறகுகள் இருந்ததாம். இறகுகளைக் கொண்ட மலைகள், பறந்து பறந்து பின் பூமியில் இறங்கி பூமியை அதிர்வுக்குள்ளாக்கியும், சேதப்படுத்தியும் தொல்லை கொடுத்தன.

    இதனால் இந்திரன் தன்னுடைய வஜ்ஜிராயுதத்தைக் கொண்டு, மலைகளின் இறகுகளை அறுத்து எறிந்தான். இதனால் பறக்க முடியாத மலைகள், குளிகன், மகாபத்மன், பத்மன், கார்கோடகன், ஆனந்தன், தட்சன், சங்கன், வாசுகி போன்ற பல நாகங்களின் மீது விழுந்து அழுத்தின. இதனால் பாரம் தாங்காமல் அந்த நாகங்கள் கக்கிய விஷத்தில் இருந்து வாஸ்து தோன்றியதாகவும் சில புராணங்கள் சொல்கின்றன. வாஸ்து பகவானை `பூமி புத்திரன்' என்றும் அழைப்பார்கள்.

    வாஸ்து பூஜை செய்யும் முறை

    வாஸ்து பகவான் நித்திரையை விட்டு கண் விழிக்கும் நாளில்தான் இந்தப் பூஜையை செய்ய வேண்டும். வீடு கட்டுபவர்கள், வீடு கட்டுவதற்கான ஆரம்ப பூஜை (கிரக ஆரம்பம்) செய்வதற்கு முன்பாக, இந்த வாஸ்து பூஜையை செய்ய வேண்டியது அவசியம்.

    பொதுவாக, செவ்வாய், சனிக்கிழமைகள் தவிர்த்து சுபவேளையில் மனை தேர்வு செய்த பின் வீடு கட்டத் திட்டமிடலாம். பூமியை தேர்ந்தெடுத்த பின் 'பூ பரிகஷா' என்ற மனை பரிசோதனை செய்தல் நல்லது. ஒரு அடி அகல நீள ஆழம் உள்ள குழி தோண்டி நீர் விட்டு, அதில் வெள்ளை மற்றும் சிவப்பு மலர்களைப் போட்டு பரிசோதிக்க வேண்டும். மனை பூஜைக்கு முன் வாஸ்து பூஜை செய்தல் அவசியம்.

    வாஸ்து புருஷனை பூஜித்து விட்டு, அதன்பின்னர் வீடு அல்லது தொழிற்சாலைகளை கட்டலாம். மனையின் தென்கிழக்கு பாகத்தில் நான்கு செங்கல்களை தேர்ந்தெடுத்து, அதற்கு கிணற்று நீர் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    பின்னர் அந்த செங்கல்களை கிழக்கு மேற்காக வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களையும் ஆவாஹனம் செய்து ஷோடச உபசாரம் செய்து பூஜிக்க வேண்டும். தொடர்ந்து ஒன்பது செங்கற்களை கிழக்கு மேற்காக வைத்து, நவக்கிரகங்களை அதில் ஆவாஹனம் செய்து அபிஷேக, ஆராதனை செய்து பூஜிக்க வேண்டும்.

    செங்கற்களை நான்கு, மூன்று, இரண்டு என்ற வரிசையில் வைத்தல் வேண்டும். பூஜைக்கு வாசனை மலர்களைப் பயன்படுத்த வேண்டும். எந்தப் பூஜையும் விநாயகரை ஆராதனை செய்த பின் செய்வது உத்தமம் என்பதால், விநாயகரை பூஜித்தே வாஸ்து பூஜையை செய்ய வேண்டும். மேலும் வாஸ்து பூஜை செய்யும் நாளில் குலதெய்வம், கிராம தெய்வம், இஷ்ட தெய்வத்தையும் பூஜித்தல் நன்மை தரும்.

    முதலில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து அதற்கு குங்குமம் வைத்து மலர் சரம் சாற்ற வேண்டும். அப்போது 'ஓம் வக்ர துண்டம் ஆவாஹயாமி', 'ஓம் விக்னராஜம் ஆவாஹயாமி', 'ஓம் கஜானனம் ஆவாஹயாமி', 'ஓம் ஸித்தி விநாயகம் ஆவாஹயாமி' ஆகிய நான்கு நாமங்களை ஆவாஹனம் செய்து, அருகம்புல் மாலை சூட்டி, விநாயகரின் ஷோடச நாமங்களால் அவரை அர்ச்சித்து விக்னங்களும், அந்த மனையில் உள்ள சகல பூத, பிரேத, பிசாசுகளும் விலகவும், அதே இடத்தில் லட்சுமி தேவியின் வாசம் ஏற்படவும், குடும்ப விருத்தி ஏற்படவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    பின் வாஸ்து புருஷனை, 'ஓம் பூ: வாஸ்து புருஷம் ஆவாஹயாமி', 'ஓம் புவ: மஹாகாயம் ஆவாஹயாமி', 'ஓம் ஸுவ: க்ருஷ்ணாங்கம் ஆவாஹயாமி', 'ஓம் பூர்புவஸ்ஸுவ: ரக்தலோசநம் ஆவாஹயாமி' என்ற நாமங்களை ஆவாஹனம் செய்து, பின் வீடுகட்ட ஆரம்பிக்கும் இடத்தில் 'ஆத்யேஷ்ட காத்யாஸம்' என்றபடி 9 கற்களை வைத்து, நான்கு திசையில் நான்கு கற்களையும் வைத்து பந்தனம் செய்து, பின் எட்டு திக்குகளிலும் இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசான தேவர்களுக்கு பூசணிக்காய் பலி சேர்க்க வேண்டும்.

    கோவிலாக இருந்தால் 'மூர்தேஷ்ட காத்யாஸம்' என்றபடி கடைசி கல் பிரம்மா பாதத்தில் வைக்க வேண்டும். ஆத்யேஷ்ட காத்யாசம் செய்யும் முன் 'ரத்ஷையாசம்' என்றபடி நவமணிகள் என அழைக்கப்படும், முத்து, பவளம், மரகதம், புஷ்பராகம், வைரம், நீலம், கோமேதகம் வைடூர்யம், மாணிக்கம் முதலியவற்றை வைக்கவும். அதோடு நவதானியங்களை, சுமங்கலி பெண்களைக் கொண்டு சேர்ப்பது விசேஷமானது.

    மேலும் செப்பு, வெள்ளி தகட்டில் ஷட்கோணமும், நடுவில் வாஸ்து மூல எழுத்தும், வட்டமும் வரைந்து, அதன் மேல் அஷ்ட தளம் எழுதி, இந்திரன் முதல் ஈசானன் வரை எழுதி, நான்கு பக்கத்திலும் நான்கு வாஸ்து பிரதான நாமங்களை எழுதி பூஜித்து வாஸ்து யந்திர ஸ்தாபனமும் செய்யலாம்.

    இந்த வருடத்தில் வருகிற மார்ச் மாதம் 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை), (மாசி மாதம் 22-ந் தேதி) காலை 8 நாழிகைக்கு வாஸ்து புருஷன் கண் விழிக்கிறார். இந்த நாளில் வீடு கட்டுபவர்கள், அதற்கான பூஜையை செய்யலாம். வருகிற 5-ந் தேதி காலை 10.06 மணிக்கு மேல் 10.42 மணிக்குள் வாஸ்து பூஜை செய்வது விசேஷ நன்மைகளை தரும். (இது சூரிய உதயத்தில் இருந்து அந்தந்த ஊருக்கு ஏற்றபடி கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.)

    இதில் எமகண்டம் ஒன்பது மணி முதல் 10.30 மணி வரை இருப்பதால், 'அந்த நேரத்தில் செய்ய வேண்டாம்' என்று நினைப்பவர்கள், 10.30 மணிக்கு மேல் ஆரம்பித்து செய்யலாம். பொதுவாக வாஸ்து பூஜைக்கு சந்திராஷ்டமம் இல்லாமல் இருந்தால் போதும்.

    செவ்வாய்க்கிழமை, சனிக் கிழமை, அஷ்டமி, நவமி, மரண யோக தோஷங்கள் பார்க்க வேண்டியது இல்லை. ஆனால் கிரக ஆரம்பத்திற்கு இவை அனைத்தையும் கட்டாயம் பார்க்க வேண்டும்.

    விசேஷ வாஸ்து தியானம்

    வாஸ்து புருஷோ மஹா காயோ க்ருஷ்ணாங்கோ

    ரக்த லோசந ரக்தாநநோ த்விபாஹூச்ச

    பப்பருவாஹ பராங்க்க:

    ஸயாநம் நீலதிக் பாதமை சாந்யே ந்யஸ்த மஸ்தக:

    என்ற மந்திரத்தை உச்சரித்து வாஸ்து பகவானை தியானிக்க வேண்டும். அவரை தியானிப்பது சகல நன்மைகளையும் கொடுக்கும். மேலும் வன்னி, வில்வம், அரசு, ஆல், அத்தி, புரசை, கருங்காலி ஆகிய ஏழு சமித்துக்கள் வாஸ்து ஹோமத்திற்கு விசேஷமானவை ஆகும். வாஸ்து பகவானுக்கு வெண் பொங்கல் நைவேத்தியம் வைப்பது மிகவும் நல்லது. மனையில் சங்கு ஸ்தாபனம் செய்து ஸல்லியம் பார்ப்பது போன்றவையும் மிகவும் விசேஷமானது.

    'வாஸ்து புருஷத்யாம்நம்:-

    வாஸ்து புருஷோ மஹாகாயோ க்ருஷ்ணாங்கேர ரக்தலோசந:

    ஏகாந நோ த்விபாஹுஸ்ச பப் ருவாஹ:

    பராங்கக: ஸயாநம் நீலதிக்பாதம் ஐஸாந்யே ந்யஸ்த மஸ்தக:

    குதாஞ்ஜலி புடோ த்யாயேத் பஸம்வத் இஷ்டார்த்த ஸித்தே யே!'

    என்பது, திருவல்லிக்கேணி, திருப்பதி போன்ற ஆலயங்களில் சொல்லப்படும் வாஸ்து தியானம் ஆகும்.

    • படம் வைக்கும்போது ஜோடியாக வைப்பதுதான் முறை.
    • வாஸ்து ரீதியாக அமைத்து பராமரித்து வருவது வழக்கத்தில் இருக்கிறது.

    உள் அலங்கார யுக்திகளில் ஒன்றாகவும், அலங்கார கலைப்பொருள் என்ற கண்ணோட்டத்துடன் வீட்டின் உட்புறமாகவும், வெளிப்பகுதிகளிலும் சிலைகள் வைக்கப்பட்டாலும், வாஸ்து ரீதியான அணுகுமுறை யாகத்தான் அவை கவனிக்கப்படுகின்றன. அறைகளை அலங்கரிக்கும் உள்கட்டமைப்பு முறைகளில் பல்வேறு நவீன அணுகுமுறைகள் இப்போது கையாளப்பட்டு வருகின்றன. அவற்றில் பிரத்யேகமான முறையாக மண் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட சிலைகளை வீடுகளின் முக்கியமான இடங்களில் வைப்பதும் ஒன்று. பரவலாக நடைமுறையில் இருக்கும் அத்தகைய சிலை அலங்கார முறைகளில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    வீடுகளின் வரவேற்பறை, சுவர் அலமாரிகள், ஷோகேஸ், படிக்கும் அறை, பூஜையறை ஆகிய இடங்களில் பரவி இருக்கும் நேர்மறை சக்தி அலைகளை ஈர்க்கும் மையமாக பிள்ளையார் சிலைகள் அமைக்கப்படுகின்றன.

    வீடுகளில் வைக்கப்படுவது மட்டுமல்லாமல் தெரு முனைகளிலும் பிள்ளையார் சிலைகள் இருக்கின்றன. பிள்ளையார் சிலைகள் வைப்பது ஆன்மிக அடையாளம் என்ற நிலையை தாண்டி, வைக்கப்படும் இடத்தில் உள்ள பஞ்சபூத சக்திகளை நிலைப்படுத்தும் தன்மை கொண்ட வடிவியல் குறியீடாக வாஸ்து சாஸ்திரம் கவனிக்கிறது.

     வீடுகளின் நுழைவு வாசலில் பிள்ளையார் சிலை அல்லது படம் வைக்கும்போது ஜோடியாக வைப்பதுதான் முறை. ஒன்று நுழைவாயிலை பார்த்தவாறும், இன்னொன்று அதற்கு எதிர்ப்புறம் பார்த்தவாறு வைக்க வேண்டும். மற்ற இடங்களில் பிள்ளையார் சிலைகள் வைக்கப்படும்போது பெரிய அளவில் உள்ளவற்றை தவிர்த்து சிறிய அளவாக இருப்பதையே வைக்க வேண்டும்.

    வீடுகளை பாதிக்கும் தெருக்குத்து போன்ற வாஸ்து ரீதியான குறைகள் பிள்ளையார் சிலைகளை அமைப்பதன் மூலமாக சரி செய்யலாம் என்பது பரவலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக வீடுகளின் தெற்கு திசை, மேற்கு திசை மற்றும் தென்மேற்கு மூலை ஆகிய பகுதிகளில் தெருக்குத்து இருக்கும்பட்சத்தில் வீட்டு சுவரில் அல்லது சுற்றுச்சுவரில் கல்லால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலையை வாஸ்து ரீதியாக அமைத்து பராமரித்து வருவது வழக்கத்தில் இருக்கிறது.

     சீனாவில் இருந்து நமக்கு இறக்குமதியான பொருட்களில் சிரிக்கும் புத்தர் என்ற சிலை வடிவமும் ஒன்று. பெரும்பாலும் சீனக்களிமண்ணால் செய்யப்பட்ட சிரிக்கும் புத்தர் சிலைகள் மகிழ்ச்சியின் வெளிப்பாடான சிரிப்பை காட்டுவதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். பார்ப்பவர்களது மனதில் அந்த சிலையானது மகிழ்ச்சியின் அலைகளை எதிரொலிக்கக்கூடிய மனோதத்துவத்தை உள்ளடக்கியதாக அதன் வடிவம் இருப்பதை நாம் உணர முடியும்.

     குபேரதிக்கு என்று சொல்லப்படும் வடக்கில் இந்த சிலைகளை வைக்க வேண்டும் என்பது முறையாகும். முற்றிலும் பொருளாதாரம் சார்பான கருத்தையும், அதன் வளர்ச்சியையும் குறியீடாக கொண்ட அடையாளமாக இந்த சிலை பார்க்கப்படுகிறது. வீடுகளில் இவை குபேரனின் அம்சம் என்ற கருத்துடன் வைத்து பராமரிக்கப்படுகிறது. படுக்கை அறைகளில் வைக்கப்படும் சிலைகளில் முக்கியத்துவம் பெற்றவையாக இவை உள்ளன.

    யானை அல்லது வாத்து சிலைகள் குடும்ப உறவுகளில் இருக்கும் கசப்பான உணர்வுகளை இனிமையாக மாற்றுவதற்கான மனோதத்துவ குறியீடுகளாக வைக்கப்படுகின்றன. பொதுவாக படுக்கை அறையில் வைக்கப்படும் அவை ஜோடிகளாக இருக்க வேண்டும்.

    சிலைகளாக அவற்றை வைக்க இயலாத நிலையில் அழகிய பிரேம்கள் பொருத்தப்பட்ட படங்களாகவும் படுக்கையறை சுவரில் மாட்டி வைக்கலாம் என்ற மாற்று முறையும் வாஸ்து வல்லுநர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    • உடைந்த கடிகாரங்களை வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல.
    • உடைந்த பாத்திரங்களை பயன்படுத்துவதும் கூடாது.

    பண்டிகை காலங்களில் வீட்டை சுத்தம் செய்து அலங்கரித்து அழகுபடுத்துவதற்கு பலரும் ஆர்வம் காட்டுவார்கள். இந்த சமயத்தில் வீட்டில் இருந்து ஒரு சில பொருட்களை அகற்ற வேண்டியது அவசியமானது. அத்தகைய எதிர்மறை பொருட்கள் வீட்டிற்குள் லட்சுமி தேவியின் வருகையைத் தடுக்கலாம். நிதி சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது. அப்படி அகற்ற வேண்டிய பொருட்களின் பட்டியல் இது.

    செயல் இழந்த கடிகாரம்:

    வாஸ்து சாஸ்திரத்தின் படி, செயலிழந்த அல்லது உடைந்த கடிகாரங்களை வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல. ஏனென்றால், கடிகாரங்கள் மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் சின்னங்களாக கருதப்படுகின்றன. அதனால் வீட்டில் ஓடாத, சேதமடைந்த கடிகாரங்கள் இருந்தால் அவற்றை அகற்றுவது நல்லது.

    காலணிகள்:

    பயன்பாட்டில் இல்லாத, சேதமடைந்த, தேய்ந்து போன காலணிகளை வீட்டில் வைக்கக் கூடாது. அவை எதிர்மறை ஆற்றல் மற்றும் துரதிருஷ்டத்தை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.

    உடைந்த கண்ணாடி:

    வாஸ்து சாஸ்திரத்தின்படி உடைந்த கண்ணாடி அல்லது கண்ணாடிப் பொருட்களை வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல. இவை வீட்டின் ஆற்றலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. அதேபோல் ஜன்னல்கள், கதவுகளில் கண்ணாடிகள் உடைந்திருந்தால் அதனை சரி செய்துவிட வேண்டும். கண்ணாடி பாத்திரங்கள் ஏதேனும் உடைந்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்திவிட வேண்டும்.

    உடைந்த பாத்திரங்கள்:

    உடைந்த பாத்திரங்களை பயன்படுத்துவதும் கூடாது. இத்தகைய பொருட்கள் குடும்பத்தில் வறுமை மற்றும் கஷ்டத்திற்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. அவற்றை சீரமைத்து பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் அப்புறப்படுத்திவிடுவதே சிறந்தது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, இதுபோன்ற பொருட்களை வைத்திருப்பது வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரிக்கும்.

    ×