search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குறுதிகள்"

    • மகாராஷ்டிராவில் காங்கிரஸ் சார்பில் மகளிர் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
    • அப்போது பெண்களுக்கான 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கியது.

    மும்பை:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் கவனத்தை ஈர்க்க பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகின்றன. அதன்படி, காங்கிரஸ் கட்சியும் பொதுக்கூட்டங்கள் வாயிலாக வாக்குறுதிகளை வழங்கி வருகிறது.

    இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

    மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் இன்று நடந்த மகளிர் பொதுக்கூட்டத்தில் பெண்களுக்கான 5 வாக்குறுதிகளை அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வழங்கினார். அதன் விவரம் வருமாறு:

    ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

    அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும்.

    ஆஷா, அங்கன்வாடி மற்றும் மதிய உணவு திட்ட பெண் ஊழியர்களுக்காக, மத்திய பட்ஜெட்டில் நிதி இரு மடங்காக உயர்த்தப்படும்.

    பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் வழக்குகளை எதிர்த்து போராடுவது குறித்து வழிகாட்டுவதற்கு ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கான விடுதிகள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

    • தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது.
    • தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தல்களில் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் எங்கள் கட்சி முக்கிய பங்கு வகிக்கும்.

    அதில் நாங்கள் அணில் போல் செயல்பட்டு வருகிறோம்.

    தேசிய கட்சி ஒன்றுடன் அ.ம.மு.க. கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம்.

    எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து செயல்பட மாட்டோம் என்று பலமுறை கூறி வருகிறோம்.

    ஜெயலலிதாவை நேசிக்கிறவர்கள் ஒன்றிணைந்து, இதர கட்சியுடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்தால் தான் தி.மு.க.வை வீழ்த்த முடியும்‌.

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகின்றது.

    இதனால் மக்கள் அதிருப்தியுடனும், வேதனையுடனும் உள்ளனர்.

    இது வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.

    அதற்கான முயற்சியில் ஆளுநர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வரும் நிலையில் இதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது துணை பொதுச்செயலாளர் ெரங்கசாமி, திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர்

    மா. சேகர், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன், தேர்தல் பிரிவு இணைச்செயலாளர் மலர்வேந்தன், அம்மா தொழிற்சங்க பேரவை மாநில இணைச் செயலாளர் சத்தியமூர்த்தி, நகரக் செயலாளர், ஒன்றிய செயலாளர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பி னர்கள் உடன் இருந்தனர்.

    கார்கில் போரின் மகனை பறிகொடுத்து 19 ஆண்டுகளாகியும் இன்னும் நிவாரணம் வரவில்லை அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என பெற்றோர் உருக்கமாக தெரிவித்துள்ளனர். #KargilVijayDiwas
    டேராடூன்:

    கடந்த 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா கார்கில் பகுதியை மீட்டது. இந்த போரில் உயிர்தியாகம் செய்த வீரர்களில் உத்தரகாண்டை சேர்ந்த ராஜேஷ் கரங் என்பவரும் ஒருவர். கரங்கின் நினைவாக கிராமத்தில் அவரது சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    கார்கில் தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில் மகனின் சிலைக்கு மாலை அணிவித்த கரங்கின் பெற்றோர், “எங்களது மகனை இழந்து 19 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் நிவாரணம் எங்களது கைக்கு வந்து சேரவில்லை. இன்னொரு மகனுக்கு வேலை மற்றும் நிலம் வழங்கப்படும் என்ற அரசின் வாக்குறுதிகள் அப்படியே உள்ளது” என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
    ×