search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    19 வருடமாக அரசின் வாக்குறுதிகள் அப்படியே உள்ளது - கார்கில் போரில் மகனை இழந்த பெற்றோர்
    X

    19 வருடமாக அரசின் வாக்குறுதிகள் அப்படியே உள்ளது - கார்கில் போரில் மகனை இழந்த பெற்றோர்

    கார்கில் போரின் மகனை பறிகொடுத்து 19 ஆண்டுகளாகியும் இன்னும் நிவாரணம் வரவில்லை அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என பெற்றோர் உருக்கமாக தெரிவித்துள்ளனர். #KargilVijayDiwas
    டேராடூன்:

    கடந்த 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா கார்கில் பகுதியை மீட்டது. இந்த போரில் உயிர்தியாகம் செய்த வீரர்களில் உத்தரகாண்டை சேர்ந்த ராஜேஷ் கரங் என்பவரும் ஒருவர். கரங்கின் நினைவாக கிராமத்தில் அவரது சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    கார்கில் தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில் மகனின் சிலைக்கு மாலை அணிவித்த கரங்கின் பெற்றோர், “எங்களது மகனை இழந்து 19 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் நிவாரணம் எங்களது கைக்கு வந்து சேரவில்லை. இன்னொரு மகனுக்கு வேலை மற்றும் நிலம் வழங்கப்படும் என்ற அரசின் வாக்குறுதிகள் அப்படியே உள்ளது” என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×