search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட கொரியா"

    • உளவு செயற்கைக்கோளை ஏவும் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது
    • தோல்விக்கான காரணம் குறித்து அதிபர் ஆலோசனை நடத்தினார்

    உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா கடந்த சில ஆண்டுகளாகவே அணுஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. இவற்றிற்கு அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து ஒரு சில பதில் நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன.

    இந்நிலையில் கடந்த மே மாதம், தங்கள் நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோளை தாங்கிய ராக்கெட் ஒன்றை வட கொரியா செலுத்தியது. ஆனால் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே அந்த ராக்கெட் செயலிழந்தது.

    அமெரிக்காவையும், தென்கொரியாவையும் உளவு பார்க்கும் முயற்சியாக செயல்பட்ட இந்த ராணுவ நடவடிக்கை தோல்வியடைந்தத்து, வட கொரியாவிற்கு இது மிகவும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அந்நாட்டதிபரும், சர்வாதிகாரியாக செயல்பட்டு வரும் தலைவருமான கிம் ஜாங் உன் இதை மிகப்பெரிய தோல்வி நடவடிக்கையாக உணர்வதாகவும், இதனால் மிகவும் அதிருப்தியிலுள்ளார் எனவும் அங்கிருந்து வரும் செய்தி குறிப்பொன்று தெரிவிக்கிறது.

    இந்த செய்திகளிலிருந்து மேலும் சில விவரங்கள்:-

    அனைத்து உயரதிகாரிகளும் கலந்து கொண்ட ஆளும் கட்சியின் 3-நாள் சந்திப்பில், இந்த தோல்வி விரிவாக அலசப்பட்டிருக்கிறது. இதில் அதிபர் கிம் கலந்து கொண்டிருக்கிறார்.

    ராக்கெட் செலுத்துவதற்கான ஆயத்தப்பணிகளில் ஏற்பட்ட குறைபாடுகளுக்காக, இதற்கு காரணமான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிகவும் விமர்சிக்கப்பட்டுள்ளார்கள். தவறுகளுக்கான காரணங்களை கண்டறிந்து, தோல்வியிலிருந்து கற்க வேண்டிய பாடங்களையும் விரைவாக கற்று, மீண்டும் அடுத்த ஒரு ஏவுகணையை செலுத்தியாக வேண்டும் என அவர்கள் நிர்பந்தப்பட்டுள்ளார்கள் என தெரிகிறது.

    இருப்பினும் வடகொரியாவின் உளவுத்துறை, ராக்கெட் தோல்விக்கு காரணம் என்னவென்று கண்டறிவதற்கு சில வாரங்களுக்கு மேல் ஆகலாம் என தெரிவித்திருக்கிறது.

    அடுத்து ராக்கெட் எப்பொழுது விண்ணில் செலுத்தப்படும் என தெரியவில்லை. வட கொரியாவை கண்காணிக்கும் அமைப்புகள், இந்த தோல்விக்காக, எந்த அதிகாரியும் அல்லது விஞ்ஞானியும் பணி நீக்கமோ அல்லது தண்டனைக்குரிய நடவடிக்கைகளுக்கோ ஈடுபடுத்தப்படவில்லை என தெரிவிக்கின்றன.

    அமெரிக்க தலைமையிலான வட கொரிய விரோத வெறுப்பு நடவடிக்கைகளை சமாளிப்பதற்கான எதிர்வினையாக அதிபர் கிம், பல உயர் தொழில்நுட்ப ராணுவ சொத்துக்களை உருவாக்கவும், ஆயுதங்களை சேமித்து வைத்துக் கொள்ள போவதாக உறுதியளித்துள்ளார்.

    பலமுனை- ஏவுகணைகள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மற்றும் ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகமாக செல்லும், (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகள் ஆகியவை அவர் சேகரிக்க விரும்பும் மற்ற ஆயுத அமைப்புகளாகும்.

    2022-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, வடகொரியா, 100-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இவற்றில் சில, உளவு ஏவுகணை சம்பந்தமாகவும், கிம்மின் விருப்பப்பட்டியலில் உள்ள சக்திவாய்ந்த ஆயுதங்களை உருவாக்குவது தொடர்பாகவும் உருவாக்கப்பட்டவையாகும்.

    இந்த சந்திப்பின்போது, வடகொரிய அரசாங்கத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் வல்லமை கொண்ட பொலிட்பீரோ உறுப்பினர்கள், இந்த பிராந்தியத்தில் வட கொரியாவின் போட்டி நாடுகளின் பொறுப்பற்ற போர் நகர்வுகளால் தென்கொரிய- அமெரிக்க கூட்டு நடவடிக்கைகளை குறிப்பிட்டு மிகவும் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையை விரிவாக ஆய்வு செய்திருக்கின்றனர்.

    அமெரிக்க எதேச்சதிகாரத்தை எதிர்க்கும், வடகொரியாவின் நேச நாடுகளுடன் உள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் போலிட்பீரோ விவாதித்துள்ளது.

    வட கொரியாவின் அதிகரிக்கும் ராணுவ பலம் பெருக்கும் நடவடிக்கைகளுக்கும், அணுஆயுத பரிசோதனைகளையும் எச்சரிக்கும் விதமாக அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து எதிர்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், வட கொரியா அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டால், அது வட கொரியாவின் அழிவில் முடியும் என எச்சரித்துள்ளது.

    ரஷிய நாட்டுடன் உறவை வலுப்படுத்த வேண்டி, அந்நாடு உக்ரைனை ஆக்ரமித்ததையும் வட கொரியா ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வர்த்தகம், தொழில்நுட்பம், பிராந்திய முதலிடம் போன்ற விஷயங்களில் அமெரிக்காவோடு எதிர்ப்பை கடைபிடிக்கும் சீனாவோடும் வட கொரியா உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களாக விளங்கும் சீனாவும், ரஷியாவும் தங்கள் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, வட கொரியாவின் அணுஆயுத பரிசோதனைகளுக்காக அதன் மீது அமெரிக்கா கொண்டு வர நினைக்கும் தடை முயற்சிகளுக்கு முட்டுகட்டை போடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • கப்பல் மூலம் வட கொரிய அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்கும் கூட்டு திறனை மேம்படுத்தும்.
    • நீர்மூழ்கிக் கப்பல், சுமார் 150 டோமாஹாக் ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.

    உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.

    அவ்வகையில், வடகொரியா நேற்று தனது கிழக்கு கடற்கரையில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை கடலில் செலுத்தி சோதனை நடத்தியிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்கா- தென் கொரியாவுக்கு நேரடி எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வட கொரியா ஏவுகணைச் சோதனை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, தென் கொரியாவுக்கு சுமார் 150 டோமாஹாக் ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

    யுஎஸ்எஸ் மிச்சிகன் எனப்படும் இந்த போர்கப்பல் உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாகும். இது சுமார் 2,500 கிலோமீட்டர் வரம்பைக் கொண்டு ஏவுகனை ஏவலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த போர்க்கப்பல் அனுப்பியதன் மூலம், அமெரிக்கா மற்றும் தென் கொரிய கடற்படைகள் தங்களது சிறப்பு செயல்பட்டுத் திறனை மேம்படுத்தவும், வட கொரிய அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்கும் கூட்டு திறனை மேம்படுத்துவதற்காகவும் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தென்கிழக்கு துறைமுக நகரமான பூசானை வந்தடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த கப்பல் தென்கொரிய கடற்பரப்பில் எவ்வளவு காலம் இருக்கும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

    • அமெரிக்க படைகளுடன் இணைந்து தென் கொரியா போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
    • இதற்கு பதிலடி கொடுக்கும் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

    உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.

    அவ்வகையில், வடகொரியா இன்று கிழக்கு கடற்கரையில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை கடலில் செலுத்தி சோதனை நடத்தியிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. ஆனால், இது குறித்து விரிவான விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    அமெரிக்க படைகளுடன் இணைந்து தென் கொரியா போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இன்று வட கொரிய-தென் கொரிய எல்லைக்கு அருகே மிகப்பெரிய அளவில் போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

    • இரண்டாம் கட்ட நிலைகளில் பிரச்சினைகளை எதிர்கொண்ட ராக்கெட் நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடலில் விழுந்தது.
    • சியோலில், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டது.

    நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக வடகொரியா அறிவித்து இருக்கிறது. இது குறித்த தகவல்கள் கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

    அதில், உளவு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிலைகளில் பிரச்சினைகளை எதிர்கொண்டு நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் விழுந்தது.

    வடகொரியா தனது முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதால், ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

    வடகொரிய நாட்டின் வடமேற்கு பகுதியான டாங்சாங்-ரி-யில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் ஏவப்படுவதை அடுத்து தென் கொரிய தலைநகர் சியோலில், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், எதிர்பார்த்த சேதம் ஏற்படாததால், எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

    முன்னதாக வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் ஏவப்படும் தகவலுக்கு பதிலடி கொடுத்த ஜப்பான், தனது எல்லைக்குள் ராக்கெட் வந்தால் அதனை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தது.

    நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்து இருக்கிறது. இந்த தடையை மீறியே வடகொரியா தனது உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவ முயற்சி செய்து இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் ராஜதந்திர உறவு எதுவும் இல்லை.
    • வட கொரியாவில் 70,000 கிறிஸ்தவர்கள் உள்பட பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    வட கொரியாவில் பல்வேறு மதத்தினர் இருந்தாலும் வடகொரிய அரசு நாத்திக அரசாக உள்ளது. மத உரிமைகள், மதச் சடங்குகள் செய்யும் உரிமைகள் உள்ளன. ஆனால், வட கொரிய அரசு எந்த மதத்தையும் ஊக்குவிப்பதில்லை. அதேசமயம், மத தண்டனைகள் உள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

    இந்நிலையில், பைபிள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட பெற்றோருடன் அவர்களின் 2 வயது குழந்தைக்கும் வடகொரியா அரசு ஆயுள் தண்டனை விதித்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.

    சர்வதேச மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூறியிருப்பதாவது:-

    வட கொரியாவில் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் 70,000 கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறைக்கு அனுப்பப்பட்டவர்களில் இரண்டு வயது ஆண் குழந்தையும் இருந்தது. அவனது பெற்றோரிடம் பைபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

    மதப் பழக்கவழக்கங்கள் மற்றும் பைபிளை வைத்திருந்ததற்காக அந்தக் குடும்பம் கைது செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தை உட்பட ஒட்டுமொத்த குடும்பமும் 2009-ல் ஆயுள் தண்டனை பெற்று அரசியல் சிறை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் தாங்கள் மோசமான நிலையில் உள்ளதாகவும், பல்வேறு வகையான உடல் ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்ததாகவும் விவரித்துள்ளனர். ஷாமனிச ஆதரவாளர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 90 சதவீத ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம்தான் பொறுப்பு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் ராஜதந்திர உறவு எதுவும் இல்லை. வட கொரியாவில் நீண்ட காலமாக மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், அதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கடந்த டிசம்பர் மாதம் ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு மற்ற நாடுகளுடன் அமெரிக்காவும் ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த நவம்பர் மாதம் கிம் முதல் முறையாக தனது மகளை பொது வெளியில் அறிமுகப்படுத்தினார்.
    • பெயர் மாற்றம் தொடர்பாக அந்தந்த பகுதி அரசு நிர்வாகங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது

    உலகிலேயே அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த நாடு வடகொரியா. சிறிய குற்றங்களுக்கு கூட மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அங்கு நடக்கும் பல விஷயங்கள் வெளி உலகிற்கு தெரிவதில்லை. செய்திகள் கூட அரசின் தணிக்கைக்கு பிறகே வெளியிடப்படும். அங்குள்ள மக்கள் பெரும்பாலும் உலக தொழில்நுட்பத்தை அறியாத மக்களாக உள்ளனர்.

    இந்தநிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளின் பெயரை (ஜூ ஏ) வேறு யாருக்கும் வைக்கக்கூடாது என வினோத தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    கடந்த நவம்பர் மாதம் கிம் முதல் முறையாக தனது மகளை பொது வெளியில் அறிமுகப்படுத்தினார். கிம் மகளின் பெயரை வைத்திருக்கும் பெண்கள், ஒரு வாரத்தில் பெயரை மாற்றவேண்டும் என உத்தரவிட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக அந்தந்த பகுதி அரசு நிர்வாகங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக உள்ளூர் தகவல்களை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் வட கொரிய மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. பெயரை மாற்ற வேண்டிய சூழலில் லட்சக்கணக்கான வடகொரியர்கள் உள்ளனர்.

    வடகொரிய தலைவர் கிம்மின் மூன்று குழந்தைகளில் இந்த மகளை மட்டுமே அவர் பொதுவெளியில் காட்டியிருக்கிறார். கிம் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்தார் என்றும், அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்றும் தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    • கிம் ஜாங் இல்-ன் 11வது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது.
    • குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது,

    பியாங்யாங்:

    சர்வாதிகார சட்டங்கள் அமலில் உள்ள வடகொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் தடை விதித்து அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். அவரது தந்தையும் வடகொரியாவின் முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    கிம் ஜாங் இல்-ன் 11வது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. நினைவுதினத்தை முன்னிட்டு, 11 நாட்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த 11 நாள்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது, மெதுவாகவே அழவேண்டும்.

    இந்த தடையை மீறுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஒரு வேளை, இந்த 11 நாள்களுக்குள் யாரேனும் பிறந்திருந்தால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க தங்களது பிறந்தநாளைக் கூட கொண்டாட முடியாது என்று அந்நாட்டு ஊடகங்கள் மேற்கோள்காட்டியுள்ளன.

    • ஆயுத ஏற்றுமதி பற்றிய வதந்தியை அமெரிக்கா மற்றும் சில நாடுகள் பரப்பி வருவதாக வடகொரிய அதிகாரி தகவல்
    • ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் உரிமை வடகொரியாவுக்கு உள்ளது என்றும் கருத்து

    உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் ரஷியாவுக்கு வடகொரியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதனை வடகொரியா திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

    இதுதொடர்பாக வடகொரியா பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, வட கொரியா, ரஷியாவுக்கு ஆயுதங்களையோ, வெடி மருந்துகளையோ ஏற்றுமதி செய்ததில்லை. ஏற்றுமதி செய்வதற்கான திட்டம் எதுவும் இல்லை.

    ஆயுத ஏற்றுமதி பற்றிய வதந்தியை அமெரிக்கா மற்றும் சில நாடுகள் பரப்பி வருகின்றன. பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிப்பதை நிறுத்துமாறு அமெரிக்காவை எச்சரிக்கிறோம். அதே வேளையில் ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் உரிமை வடகொரியாவுக்கு உள்ளது என்றார்.

    • தென்கொரியா எல்லை அருகே பீரங்கி குண்டுகளை கடலில் வீசி வடகொரியா சோதனை.
    • எல்லையில் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டது.

    வடகொரியா நாடு இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதனை வடகொரியா கண்டுகொள்ளவில்லை.

    சமீபத்தில் வடகொரியா ஒரே நாளில் 8 ஏவுகணை சோதனை செய்தது. இந்தநிலையில் தென்கொரியா எல்லை அருகே பீரங்கி குண்டுகளை கடலில் வீசி வடகொரியா சோதனை செய்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தென்கொரியா ராணுவம் கூறும்போது, "எல்லையில் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டது. இது சில மணி நேரங்கள் நீடித்தது" என்று தெரிவித்தது.

    வடகொரியாவின் எல்லையில் இருந்து சுமார் 40 முதல் 50 கி.மீ. தொலைவில் உள்ள தென்கொரியாவின் நகர் பகுதிக்கு அருகே பீரங்கி குண்டு சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சமீபத்தில் வடகொரியா ஒரே நாளில் 8 ஏவுகணை சோதனை செய்தது.
    • தென்கொரியா எல்லை அருகே பீரங்கி குண்டுகளை கடலில் வீசி வடகொரியா சோதனை செய்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

    வடகொரியா நாடு இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதனை வடகொரியா கண்டுகொள்ளவில்லை.

    சமீபத்தில் வடகொரியா ஒரே நாளில் 8 ஏவுகணை சோதனை செய்தது. இந்த நிலையில் தென்கொரியா எல்லை அருகே பீரங்கி குண்டுகளை கடலில் வீசி வடகொரியா சோதனை செய்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தென்கொரியா ராணுவம் கூறும்போது, எல்லையில் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டது. இது சில மணி நேரங்கள் நீடித்தது என்று தெரிவித்தது. வடகொரியாவின் எல்லையில் இருந்து சுமார் 40 முதல் 50 கி.மீ. தொலைவில் உள்ள தென்கொரியாவின் நகர் பகுதிக்கு அருகே பீரங்கி குண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
    • வட கொரியா ஒரே நாளில் 8 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சியோல் :

    வட கொரியா ஒரே நாளில் 8 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும், தென்கொரியாவுடன் போர் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியமாகவும் இந்த சோதனைகள் அமைந்துள்ளன.

    இந்த ஏவுகணை சோதனைகளையொட்டி அதன் அண்டை நாடுகளான தென்கொரியாவும், ஜப்பானும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. இதனிடையே, வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா, 8 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதன்படி, இன்று அதிகாலை தென் கொரியாவும் அமெரிக்காவும் தென் கொரியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்து எட்டு நிலப்பரப்பு ஏவுகணைகளை ஏவியது என்று தென் கொரிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திங்கள்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு தொடங்கி சுமார் 10 நிமிடங்களுக்கு தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் ஏவுகணைகளை சோதனைகளை நடத்தினர்.

    சிங்கப்பூர் வெளியுறவு துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் இரண்டு நாள் பயணமாக நாளை வடகொரியா செல்லவுள்ளதாக அந்நாட்டு அரசு இன்று தெரிவித்துள்ளது. #TrumpKimSummit
    சிங்கப்பூர் :

    வட கொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் அன் அடிக்கடி மிரட்டி வந்தார். சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார்.

    வருகிற 12-ம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பின், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது.

    திட்டமிட்டபடி வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்தார். சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் இருக்கும் கேபெல்லா ஓட்டலில் டிரம்ப் - கிம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என வெள்ளை மாளிகை நேற்று உறுதி செய்தது.

    இந்நிலையில், கிம் - டிரம்ப் சந்திப்பை முன்னிட்டு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் நாளை இரண்டு நாள் பயணமாக வட கொரியா தலைநகர் பியோன்ங்யாங் செல்ல உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட கொரிய மற்றும் அமெரிக்க தலைவர்களின் சந்திப்பு தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கிம் ஜாங் அன்னுடன் விவியன் பாலகிருஷ்ணன் கலந்தாலோசிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    ×