search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Singapore Summit"

    கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட இந்தியாவின் உதவி அவசியம் என தென்கொரிய துணை வெளியுறவு மந்திரி இன்று புதுடெல்லியில் தெரிவித்துள்ளார். #SingaporeSummit #MoonJaein #PMModi
    புதுடெல்லி:

    சமீபத்தில் சிங்கப்பூரில் நிகழ்ந்த டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் சந்திப்பின் போது அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பிறகு கொரிய தீபகற்பத்தில் பல ஆண்டுகளாக நிலவிவந்த பதற்றமான சூழ்நிலை தற்போது ஓரளவு தணிந்துள்ளது.

    இந்நிலையில், அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள தென்கொரிய துணை வெளியுறவு மந்திரி என்னா பார்க், இன்று செய்தியாளர்களிடம் உரையாடினார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் அடுத்த மாத தொடக்கத்தில் இந்தியா வர உள்ளார். இந்த பயணத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக அவர் விவாதிக்க உள்ளார்.

    மேலும், கொரியா தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் தென்கொரியா ஈடுபட்டு வருகிறது, இது சாதாரணமான ஒன்றல்ல மிகவும் கடினமான ஒரு முயற்சியாகும். இதற்கு இந்தியாவின் உதவியும் தேவைப்படுகிறது.

    இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, சர்வேதேச நாடுகளிடையே இந்தியாவிற்கு என தனி செல்வாக்கு உள்ளது. அதை பயன்படுத்தி சிங்கப்பூர் சந்திப்பு ஒப்பந்தம் வெற்றி பெறவும், அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லாத அமைதியான கொரிய தீபகற்பத்தை உருவாக்கவும் இந்தியா முன்வர வேண்டும்.

    அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றும் வகையில் வடகொரியாவை இணங்கச்செய்ய இந்தியா முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  #SingaporeSummit #MoonJaein #PMModi
    அணு ஆயுதங்களை ஒழிக்க ஒப்புதல் அளித்துள்ள வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் இன்றும் நாளையும் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #KimJongUn #XiJinping #SingaporeSummit
    பியோங்யங் :

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இரண்டு நாள் பயணமாக இன்று சீனா செல்ல உள்ளதாக சீன அரசு செய்தி ஊடகமான சின்குவா  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. கிம் ஜாங் அன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே சந்திப்பு நடைபெற உள்ளதை தென்கொரிய அரசும் இன்று உறுதி செய்துள்ளது.

    கிம் ஜாங் அன் வடகொரியா அதிபராக பதவியேற்ற பின்னர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த மார்ச் மாதம் சீனா சென்றார். அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்த அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் விரிவான ஆலோசனைகளில் ஈடுபட்டார்.

    இதற்கிடையே, பல்வேறு அணு ஆயுத சோதனைகளில் வட கொரியா ஈடுபட்டு வந்த காரணத்தினால் கடந்த 18 மாதங்களாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஆகியோர் இடையே அசாதாரண உறவு நிலவி வந்தது. ஒருவழியாக தென்கொரியாவின் முயற்சியினால் உலகின் இரு துருவங்களாக கருதப்பட்ட கிம் ஜாங் அன்-னும் டொனால்ட் டிரம்ப்பும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட சம்மதித்தனர்.

    உலகமே உற்று நோக்கிய வடகொரியா மற்றும் அமெரிக்க தலைவர்களின் சந்திப்பு, சிங்கப்பூரில் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் இருநாட்டு தலைவர்களும் கையொப்பமிட்டனர்.

    இந்நிலையில், அமெரிக்காவுடன் வட கொரியா செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை வடகொரியா மீது விதித்துள்ள பொருளாதார தடைகள் குறித்து இன்று மற்றும் நாளை நடைபெற இருக்கும் வடகொரிய மற்றும் சீன தலைவர்களின் சந்திப்பின் போது விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #KimJongUn #XiJinping #SingaporeSummit
    வடகொரியாவிடம் இருந்து அமெரிக்காவுக்கு வந்த ஏவுகணை மிரட்டல்கள் இனி இருக்காது. நிம்மதியாக தூங்குங்கள் என கிம் ஜாங் அன் உடனான சந்திப்புக்கு பின்னர் நாடு திரும்பியதும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட்டியுள்ளார். #SingaporeSummit #Trump
    வாஷிங்டன்:

    எலியும் பூணையுமாக கடந்த பல ஆண்டுகளாக இருந்த அமெரிக்கா - வடகொரியா நேற்றைய சிங்கப்பூர் சந்திப்புக்கு பின்னர் நண்பர்களாக மாறியுள்ளது. ஏவுகணை மனிதர் என  டிரம்ப் ஆல் விமர்சிக்கப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், நேற்று டிரம்பை சந்தித்து பேசினார்.

    இரு தலைவர்கள் சந்திப்புக்கு பின்னர் சில ஒப்பந்தங்கள் இரு தரப்புக்கும் இடையே கையெழுத்தானது. அதில், வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக அழிப்பது, வடகொரியா மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீக்குவது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கும்.

    வரலாற்றில் எழுதக்கூடிய இந்த சந்திப்புக்கு உலக நாடுகள் அனைத்தும் வரவேற்பை தெரிவித்தன. ஈரான் உள்ளிட்ட அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் மட்டும் வடகொரியா இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விமர்சித்தன. நேற்று, சந்திப்பு முடிந்ததும் டிரம்ப் அமெரிக்காவுக்கு திரும்பினார்.



    இன்று மாலை வாஷிங்டனில் தரையிறங்கிய டிரம்ப், தனத் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-

    ஒரு நீண்ட பயணத்திற்கு பின்னர் சற்று நேரத்திற்கு முன்னதாக தரையிறங்கினேன். ஆனால், நான் பதவியேற்ற நாளை விட தற்போது அனைவரும் பாதுகாப்பை உணர்வார்கள். இனி வடகொரியாவிடம் இருந்து எந்த அணு ஆயுத அச்சுறுத்தல் இருக்காது. கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு சிறந்த அனுபவமாக இருந்தது. வடகொரியாவுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.

    நான் அதிபராக பதவியேற்பதற்கு முன் வடகொரியா உடன் அமெரிக்கா போர் புரியும் என மக்கள் நினைத்தனர். வடகொரியா நமது மிகப்பெரிய அச்சுறுத்தல் என ஒபாமா கூறியிருந்தார். இனி எதுவும் இல்லை. இன்று நன்றாக தூங்குங்கள். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளூர் நேரப்படி 8.30 மணிக்கு சிங்கப்பூர் வந்தடைந்தார். #Singaporesummit #DonaldTrump
    சிங்கப்பூர் :

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் வரும் 12-ம் தேதி காலை 9 மணியளவில் சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்ட்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

    உலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளூர் நேரப்படி 8.30 மணியளவில் சிங்கப்பூர் வந்தடைந்துள்ளார்.

    சிங்கப்பூர் நாட்டின், பய லேபார் விமான தளத்தற்கு வந்தடைந்த அவரை, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.



    அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிங்கப்பூர் போலீசார் வாகனங்கள் அணிவகுக்க தான் தங்கும் ஹோட்டலுக்கு டிரம்ப் சென்று சேர்ந்தார். டிரம்பின் கார் செல்வதை படம் பிடிப்பதற்காக சாலையின் இருபுறமும் ஏராளமான தொலைக்காட்சி மற்றும் நிரூபர்கள் போட்டிப்போட்டு காத்திருந்தனர். #Singaporesummit #DonaldTrump
    சிங்கப்பூர் பிரதமர் லீயை இன்று சந்தித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், ட்ரம்ப் உடனான பேச்சுவர்த்தைக்கு ஏற்பாடு செய்தமைக்காக நன்றி தெரிவித்தார். #KimJongUn #Singaporesummit #LeeHsienLoong
    சிங்கப்பூர் :

    அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர்  கிம் ஜாங் அன் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு வரும் செவ்வாய் அன்று நடைபெற உள்ள நிலையில், கிம் ஜாங் அன், சிஙகப்பூர் பிரதமர் லீ லூங்கை இன்று சந்தித்தார்.

    இந்த சந்திப்பின்போது, சிங்கப்பூர் பிரதமர் லீ லூங்குடன் பேசிய கிம் ஜாங் அன்,  ‘‘அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையிலான இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை உலக நாடுகள் உற்று நோக்கியுள்ளன. இந்த சந்திப்பிற்காக நீங்கள் எடுத்த முயற்சிகளுக்கு நன்றிகள்” என தெரிவித்தார்.  #KimJongUn #Singaporesummit #LeeHsienLoong
    அணு ஆயுத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று சிங்கப்பூர் வந்தடைந்தார். #Singaporesummit #TrumpKimSummit
    சிங்கப்பூர்:

    வருகிற 12-ந் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் சில கருத்து வேறுபாடி ஏற்பட்டது, இதனால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி வருகிற 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். 

    இதையடுத்து, அவர்கள் சந்திப்புக்கான நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அறிவித்தது. 12-ம் தேதி சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. 

    சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்ட்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    உலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தையை செய்தியாக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 2500 ஊடகவியலாளர்கள் சிங்கப்பூரில் திரள்கின்றனர். இவர்கள் செய்திகளை சேகரிக்க மெரினா பே பகுதியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    ஷாங்ரி-லா ஓட்டல் மற்றும் சென்ட்டோசா தீவுக்கு இடைப்பட்ட பகுதி மற்றும் யூனிவர்சல் ஸ்டுடியோ அமைந்திருக்கும் இடம் உள்ளிட்ட பல பகுதிகளை 14-ம் தேதிவரை உச்சகட்ட பாதுகாப்புக்குரிய பகுதியாக சிங்கப்பூர் அரசு அறிவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது. 

    சந்திப்பு நடைபெறும் பகுதியின் வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வழியாக செல்லும் பொது வாகனங்கள் மற்றும் தனிநபர்கள் கடுமையான சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், இப்பகுதிகளில் ஆயுதமேந்திய அரசு வாகனங்கள் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



    வெடிப்பொருட்கள், பெயின்ட், கொடிகள், பதாகைகள், ஒலிபெருக்கிகள் போன்றவற்றையும் இப்பகுதிகளில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் பியாங்யாங் நகரில் இருந்து இன்று சிங்கப்பூர் வந்தடைந்தார். வழக்கமாக அவர் பயணம் செய்யும் சிறப்பு விமானத்தை தவிர்த்துவிட்டு, சீன அரசுக்கு சொந்தமான ‘போயிங் 747’ ரக பயணிகள் விமானம் மூலம் அவர் இங்கு வந்துள்ளார்.

    சிங்கப்பூர் விமான நிலையத்தில் கிம் ஜாங் அன்-ஐ அந்நாட்டு வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

    இதேபோல், கனடா நாட்டின் கியூபெக் நகரில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சிங்கப்பூருக்கு புறப்பட்டுள்ளார். இன்னும், சில மணி நேரத்தில் அவர் இங்கு வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, கிம் ஜாங் அன்-னுடனான சந்திப்பை ஒருவேளைக்கான மருந்து என்று குறிப்பிட்ட டிரம்ப், ‘முதல் பேச்சிலேயே அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? இல்லையா? என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும். பின்னர், இதற்காக நேரத்தை வீணடிக்க மாட்டேன். சமரசம் ஏற்படும் சூழல் உருவானால் கிம் ஜாங் அன்-னை பிறகு வாஷிங்டனுக்கு அழைத்துப் பேசவும் தயங்க மாட்டேன்’ என்று குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.  #Singaporesummit #KimJongUn #DonaldTrump #TrumpKimSummit
    அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பின் போது தாம் கொல்லப்படலாம் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    பியாங்யோங்:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சிங்கப்பூரில் வரும் 12-ம் தேதி சந்தித்து பேசுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

    சிங்கப்பூரின் செண்டோசா ரிசார்ட்டில் இந்த சந்திப்பு நடக்கிறது. எனவே, சந்திப்புக்கு முன்னதாக கிம் நிர்ணயித்த அதிகாரிகள் அங்கு சென்று அதன் பாதுகாப்பு ஏற்பாட்டைக் கண்காணிக்க விருக்கிறார்கள்.

    இந்நிலையில், சிங்கப்பூரில் நடக்க உள்ள சந்திப்பின் போது தாம் கொலை செய்யப்படலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக கடந்த ஞாயி்றன்று தனது ராணுவ தளபதிகள் மூவரை திடீரென மாற்றினார்.

    மேலும், தென்கொரியாவிலும் சில நபர்கள் தன்னை கொல்ல தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாக கிம் ஜாங் அன்னுக்கு செய்தி கிடைத்துள்ளதும் அவரது உயிர் பயத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து, சந்திப்பு நிகழும் செண்டோசா ரிசார்ட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே, செண்டோசா ரிசார்ட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த இரண்டு தென்கொரிய நபர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    சிங்கப்பூர் வெளியுறவு துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் இரண்டு நாள் பயணமாக நாளை வடகொரியா செல்லவுள்ளதாக அந்நாட்டு அரசு இன்று தெரிவித்துள்ளது. #TrumpKimSummit
    சிங்கப்பூர் :

    வட கொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் அன் அடிக்கடி மிரட்டி வந்தார். சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார்.

    வருகிற 12-ம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பின், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது.

    திட்டமிட்டபடி வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்தார். சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் இருக்கும் கேபெல்லா ஓட்டலில் டிரம்ப் - கிம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என வெள்ளை மாளிகை நேற்று உறுதி செய்தது.

    இந்நிலையில், கிம் - டிரம்ப் சந்திப்பை முன்னிட்டு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் நாளை இரண்டு நாள் பயணமாக வட கொரியா தலைநகர் பியோன்ங்யாங் செல்ல உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட கொரிய மற்றும் அமெரிக்க தலைவர்களின் சந்திப்பு தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கிம் ஜாங் அன்னுடன் விவியன் பாலகிருஷ்ணன் கலந்தாலோசிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் வருகிற 12-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Singaporesummit #KimJongUn #DonaldTrump

    வாஷிங்டன்:

    அமெரிக்காவும், வட கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் அடிக்கடி மிரட்டி வந்தார். சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் உன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார்.

    வருகிற 12-ந் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் சில கருத்து வேறுபாடி ஏற்பட்டது, இதனால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி வருகிற 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். 

    இதையடுத்து அவர்கள் சந்திப்புக்கான நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. வருகிற 12-ம் தேதி சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Singaporesummit #KimJongUn #DonaldTrump
    வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் உடனான சந்திப்பு திட்டமிட்டபடி வருகிற 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். #Singaporesummit #KimJongUn #DonaldTrump

    வாஷிங்டன்:

    அமெரிக்காவும், வட கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் அடிக்கடி மிரட்டி வந்தார்.

    இந்த நிலையில் சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம்ஜாங் உன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார்.

    வருகிற 12-ந் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் சில கருத்து வேறுபாடி ஏற்பட்டது, இதனால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது.

    இந்நிலையில், இந்த சந்திப்பு சம்பந்தமான முன்னேற்பாடுகள் தொடர்பாக பேசுவதற்காக வடகொரிய அதிபரின் உதவியாளர் கிம் யாங் சோல் நேற்று அமெரிக்கா சென்றார். டிரம்பை சந்தித்த அவர், கிம் ஜாங் உன் சார்பில் ஒரு கடிதத்தையும் அவரிடம் கொடுத்தார்.



    இதையடுத்து, திட்டமிட்டபடி வருகிற 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் கூறியதாவது:-

    நாங்கள் ஜூன் 12-ம் தேதி அந்நாட்டு தலைவரை சந்திக்க உள்ளோம். இது ஒரு வெற்றிகரமான செயற்பாடாக இருக்கும். நான் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூர் பயணம் செய்கிறேன். இது ஒரு ஆரம்பமாக இருக்கும். ஒரு கூட்டத்தில் நல்லது நடக்கும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. இந்த ஒரு கூட்டத்தில் மிகவும் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என நினைக்கிறேன். இன்று நடந்த சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இது ஒரு பெரிய தொடக்கமாகும் என நினைக்கிறேன். நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி பேசினோம். ஜூன் 12 ம் தேதி சிங்கப்பூரில் பெரிய விஷயம் நடைபெறும். 

    இவ்வாறு டிரம்ப் கூறினார். #Singaporesummit #KimJongUn #DonaldTrump

    ×