search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிம் ஜாங் அன் - டிரம்ப் சந்திப்பை முன்னிட்டு சிங்கப்பூர் வெளியுறவு மந்திரி வடகொரியா பயணம்
    X

    கிம் ஜாங் அன் - டிரம்ப் சந்திப்பை முன்னிட்டு சிங்கப்பூர் வெளியுறவு மந்திரி வடகொரியா பயணம்

    சிங்கப்பூர் வெளியுறவு துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் இரண்டு நாள் பயணமாக நாளை வடகொரியா செல்லவுள்ளதாக அந்நாட்டு அரசு இன்று தெரிவித்துள்ளது. #TrumpKimSummit
    சிங்கப்பூர் :

    வட கொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் அன் அடிக்கடி மிரட்டி வந்தார். சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார்.

    வருகிற 12-ம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பின், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது.

    திட்டமிட்டபடி வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்தார். சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் இருக்கும் கேபெல்லா ஓட்டலில் டிரம்ப் - கிம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என வெள்ளை மாளிகை நேற்று உறுதி செய்தது.

    இந்நிலையில், கிம் - டிரம்ப் சந்திப்பை முன்னிட்டு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் நாளை இரண்டு நாள் பயணமாக வட கொரியா தலைநகர் பியோன்ங்யாங் செல்ல உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட கொரிய மற்றும் அமெரிக்க தலைவர்களின் சந்திப்பு தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கிம் ஜாங் அன்னுடன் விவியன் பாலகிருஷ்ணன் கலந்தாலோசிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    Next Story
    ×