search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வ.உ.சிதம்பரனார்"

    • வ.உ.சிதம்பரனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் அகில இந்திய வ.உ.சி. பேரவை சார்பில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 87-வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவாஸ்ரமம் மடத்தில் அவரது உருவ படத்திற்கு வாஸ்மரம் சுவாமி சிவானந்தம், ராஜ கிருஷ்ண மடம் குடில் சுவாமி பிரன வாணந்தா ஆகியோர் மலர் தூவி மாரியதை செலுத்தினர்.

    பின்னர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை வ.உ.சி பேரவை தலைவர் வேடராஜன் செய்திருந்தார். இதில் சரவணன், தவமணி, லதா, சேதுராமன், முருகன் உள் பட பலர் கலந்து கொண்ட னர்.

    இதேபோல் பரமக்குடி யில் நடந்த வ.உ.சிதம்பரனா ரின் 87-வது நினைவு தினத்தை யொட்டி முக் குலத்தோர் புலிப்படையின் தலைவர் சேது.கருணாஸ் ஆலோசனைப்படி மாநில செயலாளர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் தலை மையில் வ.உ.சிதம்பரனா ரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியன், கிழக்கு மாவட்ட செயலாளர் பசும் பொன் பாலாஜி, மேற்கு மாவட்ட துணை செய லாளர் பசும்பொன் சவுந் தர், மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சிவசங்கர மேத்தா, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் ஆகாஸ்சேதுபதி, பரமக்குடி நகர் பொருளாளர் அஜித், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரண், ஒன்றிய மாணவரணி செயலாளர் சோனை வீர ரகு, ராமநாத புரம் நகர் துணைச் செய லாளர் சிமியோன் பிரபா கரன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி அனைத்து வெள்ளாளர் மகா சபை சார்பில் தலைவர் குரு.சுப்பிர மணியன் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில் இருளப்பன் பிள்ளை, முனியாண்டி பிள்ளை, வின்சென்ட் ஜெய குமார், கோவிந்த ராஜ், அழகுசுந்தரம், மில்கா செந்தில், சூர்யா ஜெராக்ஸ் முருகேசன், குமார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து வ.உ.சி. பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு பள்ளி முதல்வர் உள்பட அனைத்து ஆசிரியர்கள், நிர்வாகிகள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.

    முடிவில் பள்ளியின் பொருளாளர் மகேஸ்வரன் பிள்ளை நன்றி கூறினார்.

    இதையடுத்து சோழ வந்தானில் தி.மு.க. சார்பில் நகர செயலாளர் வக்கீல் சத்திய பிரகாஷ் தலைமை யில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் வ.உ சி. சிலைக்கு மாலை அணி வித்தார். வ.உ.சி. அறக் கட்டளை சார்பில் அன்ன தானத்தை தொடங்கி வைத்தார். முள்ளிப்பள்ளம் ஒன்றிய கவுன்சிலர் கீர்த்திகா ஞானசேகரன், வடக்கு வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் சுகுமாரன், முன்னாள் தலைவர் சந்திர சேகரன், முன்னாள் பேரூ ராட்சி துணைத் தலைவர் ராஜ்குமார், வ.உ.சி. அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜசேகரன், சிங்கராஜ், விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆங்கிலேய அரசை தீரமுடன் எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடிய "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரனாரின் நினைவுதினம் இன்று.
    • வழக்கறிஞர், எழுத்தாளர், தொழிற்சங்கத் தலைவர், அரசியல்வாதி, சுதந்திர போராட்ட வீரர் என பல கோணங்களில் நாட்டிற்காக உழைத்த செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்.

    சென்னை:

    'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    "மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ" என மகாகவி பாரதி மனம் நொந்து பாடும் அளவுக்குக் கோவைச் சிறையில் கொடுமைக்குள்ளான வீரர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள்.

    தன் இளமை, சொத்து, பாரிஸ்டர் பட்டம் என அனைத்தையும் இழந்து வாழ்நாளெல்லாம் இந்திய விடுதலைக்காகப் போராடிய தனிப்பெரும் தியாகசீலராம் கப்பலோட்டிய தமிழரை நன்றிப்பெருக்குடன் நினைவுகூர்வோம்! அவரது பன்முகப்பட்ட வாழ்வையும் பணிகளையும் போற்றுவோம்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆங்கிலேய அரசை தீரமுடன் எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடிய "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரனாரின் நினைவுதினம் இன்று.
    • வழக்கறிஞர், எழுத்தாளர், தொழிற்சங்கத் தலைவர், அரசியல்வாதி, சுதந்திர போராட்ட வீரர் என பல கோணங்களில் நாட்டிற்காக உழைத்த செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    சுதேசி இயக்கத்தை தொடங்கி இந்திய மக்களிடையே சுதந்திர போராட்ட உணர்வை அதிகரிக்கச் செய்வதோடு ஆங்கிலேய அரசை தீரமுடன் எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடிய "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரனாரின் நினைவுதினம் இன்று.

    வழக்கறிஞர், எழுத்தாளர், தொழிற்சங்கத் தலைவர், அரசியல்வாதி, சுதந்திர போராட்ட வீரர் என பல கோணங்களில் நாட்டிற்காக உழைத்த செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தையும், கடின உழைப்பையும் என்றென்றும் நினைவில் வைத்து போற்றுவோம்.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

    • திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் ராஜா, மாவட்ட செயலாளர் ரகுநாத் ஆகியோர் தலைமையில் நடந்தது.
    • பெருந்திரளான வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ. உ .சிதம்பரம் பிள்ளையின் 86வதுகுருபூஜை விழா வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் ராஜா, மாவட்ட செயலாளர் ரகுநாத் ஆகியோர் தலைமையில் நடந்தது.

     திருப்பூர் மங்கலம் ரோடு,பாரப்பாளையம் நால்ரோடு சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ .உ . சிதம்பரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைதொடர்ந்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார். இதில் மத்தியமாவட்ட தலைவர் சுபிராஜ், முருகேசன், மத்தியமாவட்ட செயலாளர் பா.அன்பரசன்,மற்றும் பெருந்திரளான வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்றனர்.

    ×