search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வ.உ.சிதம்பரனார் நினைவு தினம்
    X

    முக்குலத்தூர் புலிப்படையின் சார்பில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டபோது எடுத்த படம்.

    வ.உ.சிதம்பரனார் நினைவு தினம்

    • வ.உ.சிதம்பரனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் அகில இந்திய வ.உ.சி. பேரவை சார்பில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 87-வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவாஸ்ரமம் மடத்தில் அவரது உருவ படத்திற்கு வாஸ்மரம் சுவாமி சிவானந்தம், ராஜ கிருஷ்ண மடம் குடில் சுவாமி பிரன வாணந்தா ஆகியோர் மலர் தூவி மாரியதை செலுத்தினர்.

    பின்னர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை வ.உ.சி பேரவை தலைவர் வேடராஜன் செய்திருந்தார். இதில் சரவணன், தவமணி, லதா, சேதுராமன், முருகன் உள் பட பலர் கலந்து கொண்ட னர்.

    இதேபோல் பரமக்குடி யில் நடந்த வ.உ.சிதம்பரனா ரின் 87-வது நினைவு தினத்தை யொட்டி முக் குலத்தோர் புலிப்படையின் தலைவர் சேது.கருணாஸ் ஆலோசனைப்படி மாநில செயலாளர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் தலை மையில் வ.உ.சிதம்பரனா ரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியன், கிழக்கு மாவட்ட செயலாளர் பசும் பொன் பாலாஜி, மேற்கு மாவட்ட துணை செய லாளர் பசும்பொன் சவுந் தர், மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சிவசங்கர மேத்தா, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் ஆகாஸ்சேதுபதி, பரமக்குடி நகர் பொருளாளர் அஜித், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரண், ஒன்றிய மாணவரணி செயலாளர் சோனை வீர ரகு, ராமநாத புரம் நகர் துணைச் செய லாளர் சிமியோன் பிரபா கரன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி அனைத்து வெள்ளாளர் மகா சபை சார்பில் தலைவர் குரு.சுப்பிர மணியன் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில் இருளப்பன் பிள்ளை, முனியாண்டி பிள்ளை, வின்சென்ட் ஜெய குமார், கோவிந்த ராஜ், அழகுசுந்தரம், மில்கா செந்தில், சூர்யா ஜெராக்ஸ் முருகேசன், குமார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து வ.உ.சி. பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு பள்ளி முதல்வர் உள்பட அனைத்து ஆசிரியர்கள், நிர்வாகிகள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.

    முடிவில் பள்ளியின் பொருளாளர் மகேஸ்வரன் பிள்ளை நன்றி கூறினார்.

    இதையடுத்து சோழ வந்தானில் தி.மு.க. சார்பில் நகர செயலாளர் வக்கீல் சத்திய பிரகாஷ் தலைமை யில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் வ.உ சி. சிலைக்கு மாலை அணி வித்தார். வ.உ.சி. அறக் கட்டளை சார்பில் அன்ன தானத்தை தொடங்கி வைத்தார். முள்ளிப்பள்ளம் ஒன்றிய கவுன்சிலர் கீர்த்திகா ஞானசேகரன், வடக்கு வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் சுகுமாரன், முன்னாள் தலைவர் சந்திர சேகரன், முன்னாள் பேரூ ராட்சி துணைத் தலைவர் ராஜ்குமார், வ.உ.சி. அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜசேகரன், சிங்கராஜ், விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×