search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guru Puja ceremony"

    • திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் ராஜா, மாவட்ட செயலாளர் ரகுநாத் ஆகியோர் தலைமையில் நடந்தது.
    • பெருந்திரளான வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ. உ .சிதம்பரம் பிள்ளையின் 86வதுகுருபூஜை விழா வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் ராஜா, மாவட்ட செயலாளர் ரகுநாத் ஆகியோர் தலைமையில் நடந்தது.

     திருப்பூர் மங்கலம் ரோடு,பாரப்பாளையம் நால்ரோடு சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ .உ . சிதம்பரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைதொடர்ந்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார். இதில் மத்தியமாவட்ட தலைவர் சுபிராஜ், முருகேசன், மத்தியமாவட்ட செயலாளர் பா.அன்பரசன்,மற்றும் பெருந்திரளான வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்றனர்.

    ×