search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமதாதபுரம் தொகுதி"

    • நான் ஒரு சாதாரண விவசாயி. இங்கு விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது.
    • தி.மு.க. அரசு கிராம மக்களின் அத்தியாவசிய தேவைகளைக்கூட நிறைவேற்றவில்லை.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் இரட்டை இலைக்கு வாக்குகள் கேட்டு சாயல்குடி பகுதியில் பூப்பாண்டியபுரம், பிள்ளையார்குளம், நோம்பகுளம், எஸ்.கீரந்தை, காணிக்கூர், கீழசெல்வனூர், பன்னந்தை மேல சிறு போது, இளஞ்செம்பூர் பூக்குளம், ஒருவானேந்தல், தேவர்குறிச்சி ஆகிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் பேசுகையில், நான் ஒரு சாதாரண விவசாயி. இங்கு விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. ஆனால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாததால் வானம் பார்த்த பூமியாக உள்ளது. கிராம மக்கள் குடிப்பதற்கே போதுமான குடிநீர் கிடைக்காத நிலை இருக்கிறது. வைகை தண்ணீரை கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் தாலுகா விவசாயத்திற்கு திறந்துவிட நடவடிக்கை மேற் கொள்ளப்படும். மழைநீர் கடலில் வீணாக கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தி.மு.க. அரசு கிராம மக்களின் அத்தியாவசிய தேவைகளைக்கூட நிறைவேற்றவில்லை. படித்த இளைஞர்களுக்கு கிராமங்களிலேயே தொழில் செய்ய தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கிராமங்களில் வேலை வாய்ப்பு இல்லை. வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கிராமங்களில் இரட்டை இலைக்கு அமோக வரவேற்பு உள்ளது. தாய்மார்களிடையேட இரட்ரை இலைக்கு அதிக மவுசு, இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்யுங்கள் என்று பேசினார்.

    அப்போது பெண்கள் குலவையிட்டு எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கே என கோஷமிட்டனர். அதிமுக வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, கடலாடி ஒன்றிய பெருந்தலைவர் முத்துலட்சுமி முனியசாமியாண்டியன், கடலாடி ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன், சாயல்குடி ஒன்றிய கழக செயலாளர் ஏ.எஸ்.அந்தோணிராஜ், தனிச்சியம் ராஜேந்திரன், சிக்கல் பிரவீன், தேமுதிக, மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

    • விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தாத ஆட்சியை தூக்கி எறிய இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.
    • விவசாய தொழிலாளர்களை முன்னேற்றவும், ஏழை தொழிலாளியின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவும்பாடு படுவேன்.

    ராமதாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாள் ஆர்.எஸ். மங்கலம், தொண்டி, சோழாந்தூர், வரவணி, சேத்திடல், ஆனந்தூர், செவ்வாய்பேட்டை, ஆய்ங்குடி, மேலப்பனையூர், சனவெளி, உப்பூர்சத்திரம், பாரனூர், திருப்பாலைக்குடி ஆகிய கிராமங்களில் வீடு வீடாக இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்து பேசியதாவது:-

    பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றும் தி.முகவுக்கு பாடம் புகட்ட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். இந்த நாடக ஆட்சியில் மக்கள் துயரங்களை அனுபவிக்கிறார்கள் விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தாத ஆட்சியை தூக்கி எறிய இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். விவசாயிகளின் அனைத்து கஷ்டங்களையும் உணர்ந்தவன். விவசாயியான என்னை அதிமுக வேட்பாளராக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    விவசாய தொழிலாளர்களை முன்னேற்றவும், ஏழை தொழிலாளியின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவும்பாடு படுவேன். கடந்த காலங்களில் மக்களின் ஓட்டுக்களைப்பெற்று பகட்டாக கோடிஸ்வரன்களாக வீதிகளில் வலம் வருபவர்களை ஒதுக்குங்கள். மக்களுக்காக பாடுபடுவர்களை நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன். மக்களுக்கு உதவவும், அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் குரல் கொடுப்பேன்.

    மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட கடலில் இறங்கியும் போராட தயங்க மாட்டேன். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கரத்தைவலுப்படுத்திட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றார். வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் கே.சி.ஆனிமுத்து, ஆர்.எஸ். மங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.ஜி.திருமலை, ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ராஜா, பழ.கருப்பையா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் ஷாஜ கான், பேரூராட்சி செயலாளர் எம்.ரஹ்மத்துல்லா உள்பட கூட்டணி கட்சியினர் சென்றனர்.

    ×