search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜ்நாத்சிங்"

    • எல்லைப் பகுதிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
    • அரசின் முயற்சிகள் காரணமாக லடாக்கில் அமைதி மற்றும் முன்னேற்றத்தை காண முடிகிறது.

    நாட்டின் எல்லையில் உள்ள சாலைகளை மேம்படுத்தும் அமைப்பான பி.ஆர்.ஓ 75 உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கியுள்ளது. 45 பாலங்கள், 27 சாலைகள், 2 ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் உள்ளிட்ட 75 திட்டங்கள், அருணாச்சலப்பிரதேசம் உத்தராகண்ட், சிக்கிம், இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மற்றும் லடாக், ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன. 


    நிறைவு பெற்ற இந்த திட்டங்களை லடாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் பாதுகாப்பு தேவையை பூர்த்தி செய்ய எல்லைப்பகுதிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது.

    இந்த புதிய 75 திட்டங்கள் இதற்கு சான்றாக அமைந்துள்ளன. ஜம்மு காஷ்மீரில் சுதந்திரத்திற்கு பின்னர் பல ஆண்டுகளாக உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படவில்லை. அங்கு பயங்கரவாதம் அதிகரிக்க இதுதான் காரணம். இந்த இடையூறுகள் காரணமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்து லடாக் பாதிக்கப்பட்டது.

    இந்த பாதிப்பு நாடு முழுவதும் எதிரொலித்தது. இப்போது அரசின் முயற்சிகள் காரணமாக அமைதி மற்றும் முன்னேற்றத்துடன் கூடிய புதிய உதயத்தை இங்கு காண முடிகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சியை தொடர்வதே மத்திய அரசின் நோக்கம்.

    நாட்டின் அனைத்து தொலை தூரப்பகுதிகளையும் பிற பகுதிகளுடன் விரைவில் இணைப்பதன் மூலம் நாட்டுக்கு புதிய உச்சத்தையும், முன்னேற்றத்தையும் அளிக்க பாடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இரு நாடுகள் இடையேயான மோதலுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
    • கதிரியக்க ஆயுதங்களை பயன்படுத்துவது மனிதகுலத்திற்கு எதிரானது.

    ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்ஜி ஷோய்க்-குடன், மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது, இரு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, உக்ரைனில் தற்போதைய நிலைமை குறித்து இரு மந்திரிகளும் விவாதித்தனர்.

    அழிவை ஏற்படுத்தும் குண்டுகள் மூலம் ஆத்திரமூட்டும் செயல்களில் உக்ரைன் ஈடுபட்டு வருவதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை மந்திரி செர்ஜி ஷோய்க் அப்போது மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்தார். இரு நாடுகள் இடையேயான மோதலுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

    மேலும் போரில் கதிரியக்க ஆயுதங்களை பயன்படுத்துவது மனிதகுலத்திற்கு எதிரானது என்பதால், இரு நாடுகளும் அணு ஆயுதங்கள் உள்பட பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை பயன்படுத்த கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு மந்திரிகளும் தொடர்ந்து ஒத்துழைப்பில் இருக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    • பாதுகாப்பான எல்லைகள் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றும்.
    • 76 சதவீத உள்நாட்டு சாதனங்களைக் கொண்டு ஐ.என்.எஸ். விக்ராந்த் தயாரிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் கூறியுள்ளதாவது: நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைத் தயாரிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது. தற்சார்பு மற்றும் பாதுகாப்பான எல்லைகள் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றுவதற்கு முக்கியமாக உள்ளன.

    தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அதிநவீன ஆயுதங்கள், தளவாடங்களுடன் ஆயுதப் படைகளைத் தயார் படுத்துவதில் பாதுகாப்புத் துறை கவனம் செலுத்தி வருகிறது. 76 சதவீத உள்நாட்டு சாதனங்களைக் கொண்டு ஐ.என்.எஸ்.விக்ராந்த் தயாரிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த பத்து ஆண்டுகளில், விண்வெளி பாதுகாப்பு தளங்களை உற்பத்தி செய்யத் தொடங்கும்.அரசின் பார்வையில் மற்றொரு முக்கிய அம்சமாக இருப்பது எல்லைப் பகுதி மேம்பாடு. சவாலான சூழ்நிலையிலும் வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே உள்ள சிறப்பான ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது.

    பெரும்பாலான நாடுகள் இன்று பொருளாதார மந்த நிலையின் சிக்கலை எதிர் கொள்கின்றன. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைத்து மதிப்பிடப்பட்டாலும், அது இன்னும் 6.1 சதவீதமாகவே உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அமைதியை விரும்பும் இந்தியா, போருக்கு தயங்குவதாக தவறாக நினைக்கக் கூடாது.
    • தீங்கு விளைவிக்க விரும்புபவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும்.

    பதோலி:

    நாட்டுக்காக உயிர்நீத்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினரை இமாச்சலப் பிரதேசம், பதோலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நத்சிங் கவுரவித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    உயிர் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களின் குடும்பத்தினருக்கு நாடு என்றென்றும் கடன் பட்டுள்ளது. ஒழுக்கம், கடமையில் அர்ப்பணிப்பு, தேசபக்தி மற்றும் தியாகம் மூலம் மக்களுக்கு குறிப்பாக, இளைஞர்களுக்கு பாதுகாப்பு படையினர் எப்போதும் உந்து சக்தியாக திகழ்கின்றனர். 


    பின்னணியோ, மத நம்பிக்கையோ அவர்களுக்கு ஒரு பொருட்டு கிடையாது. நம்முடைய மதிப்பிற்குரிய மூவர்ணக் கொடி தொடர்ந்து உயரத்தில் பறக்கவேண்டும் என்பது முக்கியம். நமது ராணுவத்தின் துணிச்சல் உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

    உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஒரே நாடு இந்தியா. அமைதியை விரும்பும் இந்தியா, போருக்கு தயங்குவதாக எந்த நாடும் தவறாக நினைக்கக்கூடாது. எந்த ஒரு நாட்டையும், இந்தியா தாக்கவில்லை, ஒரு இஞ்ச் அன்னிய நாட்டு நிலத்தைக்கூட கைப்பற்றவில்லை. இந்தியாவின் நல்லிணக்கத்திற்கு யாராவது ஊறு விளைவித்தால், உரிய பதிலடி கொடுக்கப்படும்.

    வடக்கு எல்லைப்பகுதியில் சீனாவுடன் நமக்கு கருத்து வேறுபாடு உள்ளது. எந்தவொரு பெரிய சக்தியாக இருந்தாலும், அது பொருட்டல்ல என்பதை கல்வான் சம்பவம் மூலம் நமது தைரியமிக்க வீரர்கள் நிரூபித்தனர். நட்பு நாடுகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதிய இந்தியாவை மத்திய அரசு கட்டமைத்து வருகிறது. அதற்கு தீங்கு விளைவிக்க விரும்புபவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்தியா-எகிப்து இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை.
    • தமது பயணத்தின்போது எகிப்து அதிபரையும், சந்தித்து பேசுகிறார்.

    பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நாளை மறுநாள் 19ந் தேதி எகிப்து நாட்டிற்கு செல்கிறார். இந்த பயணத்தின் போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ஜெனரல் முகமது சாக்கியுடன் இருதரப்பு உறவுகள் பேச்சுவார்த்தை நடத்துவார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இரு நாட்டு ராணுவங்களுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான புதிய முன்முயற்சிகளை கண்டறிதல், இரு நாடுகளின் பாதுகாப்பு தொழில் துறைகளுக்கிடையே ஒத்துழைப்பில் கவனம் செலுத்துதல் ஆகியவை பற்றி இரு மந்திரிகளும் விவாதிக்கி உள்ளனர்.

    இந்தியா எகிப்து இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் அப்போது கையெழுத்திடப்படும் என கூறப்பட்டுள்ளது. எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசியையும் தமது பயணத்தின்போது ராஜ்நாத் சிங்கின் சந்தித்து பேசுகிறார்.

    • இந்தியா முழு திறனை எட்டுவதற்கு போதை பொருள் தடையாக உள்ளது.
    • அதிகமானோர் போதையின் பிடியில் உள்ளனர்.

    மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை சார்பில் தலைநகர் டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைபொருள் ஒழிப்பு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் காணொலி காட்சி வழியாக தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: 

    உலகின் அதிகார மையங்களில் ஒன்றாக இந்தியா திகழ்வதற்கான பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், சில தடைகள் நமது முழு திறனை தடுக்கின்றன, அதில் போதைக்கு அடிமையாதலும் ஒன்று. அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ள போதும் இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசையில் இணைய முடியவில்லை.

    அதிகமான மக்கள் குறிப்பாக இளைஞர்கள் போதையின் பிடியில் உள்ளனர். இளைஞர்களே இந்த தேசத்தின் எதிர்காலம். அவர்கள் போதைக்கு அடிமையாகி விட்டால் அவர்களது எதிர்காலம் வீணாகி விடும். எனவே, நமது சுதந்திரத்திற்காக நாம் மேற்கொண்ட போராட்டத்தை போதை ஒழிப்பிற்காக தற்போது கையிலெடுக்க வேண்டும்.

    இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் போராடி சுதந்திரத்தை பெற்றுத் தந்ததை போன்று, இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாதலை எதிர்த்து போராடி அதை ஒழிக்க வேண்டும். தேசிய மாணவர் படை மாணவர்கள் போதையால் பாதிக்கப்பட்டவர்களிடம் அதன் பாதிப்புகளை எடுத்துக் கூறி அவர்களை மீட்க வேண்டும்.

    ராணுவம் எல்லையில் பாதுகாப்பது போல, தேசிய மாணவர் படையினர், போதைக்கு அடிமையாதல் போன்ற கண்ணுக்கு புலப்படாத எதிரியிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை.
    • ஆறு வருட காலக் கெடுவின் கீழ் கொள்முதல் செய்யப்படும்.

    தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், பாதுகாப்புத்துறையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியத் தொழில்துறை அதிக பங்களிப்பை அளிக்கும் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விகாரங்கள் துறையில் 780 பொருட்களின் மூன்றாவது நேர்மறை உள்நாட்டு உற்பத்தி பட்டியலுக்கான முன்மொழிகளுக்கு பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

    டிசம்பர் 2023 முதல் டிசம்பர் 2028 வரையிலான காலக்கட்டத்தில், இந்த பொருட்களின் இறக்குமதி தடைக்கான குறிப்பிட்ட காலக்கெடுவை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

    இதனையடுத்து 3வது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் சுமார் ஆறு வருட காலக் கெடுவின் கீழ் இந்திய தொழில்துறையினரிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும்.

    டிசம்பர் 2021 மற்றும் மார்ச் 2022-இல் வெளியிடப்பட்ட இரண்டு உள்நாட்டு உற்பத்தி பட்டியல்களின் தொடர்ச்சியாக தற்போது இந்த 3வது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல்களின்படி, 2500 பொருட்கள் ஏற்கனவே உள்ளூர்மயமாக்கப் பட்டுள்ளன.

    458 பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் உள்ளூர் மயமாக்கப்படும். அவற்றிலும் இதுவரை 167 பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதாக மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ==

    • தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் களைய இந்தியா உறுதி பூண்டுள்ளது.
    • தாஷ்கண்டில் உள்ள லால் பகதூர் சாஸ்திரியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

    தாஷ்கண்ட்:

    உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாட்டில், பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு எதிராக தீவிரவாதம் மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் களைந்து பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நிலவச் செய்ய இந்தியா உறுதி பூண்டுள்ளது.

    தீவிரவாதிகளின் புகலிடமாக ஆஃப்கன் பிராந்தியத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது, ஆப்கானிஸ்தானில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ இந்தியா ஆதரவு அளிக்கிறது.பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தேசிய அளவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அனைத்து வழிகளிலும் தீவிரவாதத்தை ஒழிப்பதில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

    ரஷியா உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வுகாண இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற இந்தியா ஆதரவு அளிக்கிறது.அங்கு மனிதநேய உதவி அளிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐ நா பொதுச் செயலாளர், ஐ நா அமைப்புகள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றுக்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    முன்னதாக தாஷ்கண்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலைக்கு  ராஜ்நாத்சிங் மரியாதை செலுத்தினார். அவரது எளிமை மற்றும் நேர்மைக்காக, மறைவுக்கு பின்னர் அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். 

    • இந்த சாதனங்கள் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
    • நமது ராணுவ படைகளுக்கு எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும்.

    ராணுவத்திற்கு நவீன கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் நடவடிக்கைகளை மத்திய பாதுகாப்புத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. இதையடுத்து காலாட்படை சிப்பாய்க்கான பாதுகாப்பு சாதனம், கண்ணி வெடியை கண்டு பிடிக்கும் புதிய தலைமுறை சாதனம் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன.

    மேலும மேம்பட்ட திறன்கொண்ட தானியங்கி தகவல் தொடர்பு சாதனம், பீரங்கிகளுக்கான மேம்படுத்தப்பட்ட குறி வைக்கும் சாதனம் மற்றும் அதிநவீன தெர்மல் இமேஜர்கள் ஆகியவற்றை பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தார்.

    இந்த சாதனங்கள் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். நவீன தொழில்நுட்பத்திலான கட்டமைப்பு வசதி மேம்பாடு, நமது ராணுவ படைகளுக்கு எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    • பிராந்திய மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்ள இந்தியாவிற்கு இது உதவும்.
    • புதிய வகை ஆயுதங்கள் தயாரிப்பு தொடர்பான ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

    பாதுகாப்புத்துறையில் உற்பத்திக்கான இந்திய வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    மேலும் இந்திய கடற்படை, பாதுகாப்புத்துறை பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினரால் உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஆயுதங்கள் குறித்த கண்காட்சியையும் திறந்து வைத்த அவர், நவீன ஆயுதங்களை பார்வையிட்டார். 


    பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    இனி வரும் நவீன போர்க்காலங்களில் மேம்படுத்தப்பட்ட நவீன ஆயுதங்களே தேவை. பிராந்திய மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்ள இந்தியாவிற்கு இது உதவும்.ட்டின் பாதுகாப்பிற்கும், எதிர்கால சவால்களை ராணுவ வீரர்கள் எதிர்கொள்வதற்கு வலிமையான மற்றும் தற்சார்பு அடிப்படையிலான புதிய வகை ஆயுதங்களை தயாரிப்பது அவசியம்.

    இதற்காக ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தித் திறன் மற்றும் உள்நாட்டுத் திறன் ஆகியவற்றின் மீதான நமது நிலைப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். ஆயுத உற்பத்தி வளர்ச்சி நாட்டின் பாதுகாப்பிற்காக மட்டுமல்லாமல் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் அவசியமாகிறது.

    உலகில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக விளங்குகிறது. உள்நாட்டிலேயே பாதுகாப்பு தளவாடங்களை வடிவமைத்து உற்பத்தி செய்ய வேண்டும். பாதுகாப்புத் துறையில் தனியார் துறையின் பங்களிப்பு மூலம் அத்துறை வலுப்பெறும். இதை உணர்ந்து மத்திய அரசு இத்துறையில் தனியார் துறை பங்கேற்பதற்கான பல்வேறு தடைகள் நீக்கியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி தலைமையிலான அரசின் ஒரே நோக்கம் தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதே.
    • நேரடிப் போர்களில் தோல்வியை சுவைத்த பாகிஸ்தான், மறைமுகப் போரின் பாதைக்கு மாறியது.

    ஜம்முவில் நடந்த கார்கில் வெற்றி தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேச சேவையில் இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் ஆயுதப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ஒரே நோக்கம் தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதே. அனைத்து வகையான எதிர்காலப் போர்களிலும் போராட ஆயுதப் படைகளுக்கு ஆயுதங்கள், உபகரணங்களைத் தயாரிக்கும் தற்சார்பு சூழலை உருவாக்க தொடர் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

    இந்தியா ஒரு வலிமையான மற்றும் நம்பிக்கையான தேசமாக மாறியுள்ளது. புதிய இந்தியா, தீய நோக்கம் கொண்ட எவருக்கும் தகுந்த பதிலடி கொடுக்க தயாராக உள்ளது. இந்தியாவை உலக வல்லரசாக மாற்றுவதே எங்கள் நோக்கம்.

    வலிமையான, வளமான, தன்னம்பிக்கை மற்றும் வெற்றிகரமான இந்தியாவை உருவாக்குவதே, உயர்ந்த தியாகத்தைச் செய்த நமது மாவீரர்களுக்கு செய்யும் பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்.

    1965 மற்றும் 1971 நேரடிப் போர்களில் தோல்வியை சுவைத்த பாகிஸ்தான், மறைமுகப் போரின் பாதைக்கு மாறியது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அது இந்தியா மீது மறைமுக யுத்தத்தை மேற்கொண்டது.

    ஆனால், இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை யாராலும் சீர்குலைக்க முடியாது என்பதை மீண்டும் மீண்டும், நமது துணிச்சலான வீரர்கள் நிரூபித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ராணுவத்தில் வீரர்கள் தேர்வில் சாதி பார்க்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஒரு வதந்தி.
    • சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நடைமுறையே தற்போதும் தொடர்கிறது.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு வீரர்களை தேர்வு செய்யும்போது சாதி சான்றிதழ் கேட்கப்படுவதாக ஆம்ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய்சிங், ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்பி உபேந்திர குஷ்வாஹா மற்றும் பாஜக எம்பி வருண் காந்தி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான ஆவணத்தையும் அவர்கள் டுவிட்டர் பதிவில் வெளியிட்டனர்.

    இந்த பிரச்சினை பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்டது. ராணுவ ஆள்சேர்ப்பில் இடஒதுக்கீடு வழங்காத நிலையில் ஜாதிச் சான்றிதழ் தேவையா என ஐக்கிய ஜனதாதளம் எம்பி குஷ்வாஹா கேள்வி எழுப்பினார். ராணுவத்தின் விதிமுறைகளை மாற்றுவதன் மூலம் நமது தேசிய பாதுகாப்பில் ஏற்படும் பாதிப்பை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும், என்று அவர் கூறினார்.

    இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், ராணுவ வீரர்கள் தேர்வில் சாதி பார்க்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஒரு வதந்தி என்று கூறினார். சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நடைமுறையே தற்போதும் தொடர்கிறது என்றும், இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்து, ராணுவத்தை இழிவுபடுத்தி அவமதிப்பதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.

    2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ராணுவ ஆட்சேர்ப்பில் சாதி அல்லது மதத்திற்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும்,  இதற்கு பதிலளிக்கும் வகையில் ராணுவம் சார்பில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×