search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜா எம்.எல்.ஏ."

    • குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை என கூறி திருமலாபுரம் பகுதி மக்கள் கோவிலில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • புதிய பைப் லைன் அமைப்பதற்காக 530 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தாலுகா மேலநீலிதநல்லூர் ஒன்றியம் பனவடலிசத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது திருமலாபுரம் கிராமம். இங்கு கடந்த ஒரு மாத காலமாக ஊருக்குள் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை என கூறி அப்பகுதி மக்கள் கோவிலில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராஜா எம்.எல்.ஏ.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை ஆகியோர் பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

    வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, பொதுமக்களிடம் நமது பகுதியில் 2006-ம் ஆண்டுக்கு முன்பாக போடப்பட்ட பைப் லைன்கள் அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. தற்போது மக்கள் தொகை பெருக்கத்தினாலும் புதிய பைப் லைன் போடுவதற்கு வேண்டியும் தமிழக முதல்-அமைச்சரிடம் இரண்டு முறை நேரில் மனு கொடுத்துதுள்ளேன். மானூர் மேலநீலிதநல்லூர் குருவிகுளம் புளியங்குடி பகுதிகளில் புதிய பைப் லைன் அமைப்பதற்காக 530 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

    புதிய பைப் லைன்

    புதிய பைப் லைன் ஆரம்பித்த பின்பு இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படும். ஏற்கனவே உள்ள குடிநீர் பைப் லைனில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரி செய்யப்பட்டு ஓரிரு நாட்களுக்குள் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    தொடர்ந்து அதிகாரிகளிடம் ஆலோசனை செய்த ராஜா எம்எல்ஏ போராட்டம் நடந்த மறுநாள் காலையிலேயே திருமலாபுரம் பொதுமக்கள் வைத்த கோரிக்கையான குடிநீர் பிரச்சனையை தீர்த்து திருமலாபுரம் கிராமத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும்படி செய்தார்.

    அதுமட்டுமல்ல தண்ணீர் மாசு படிந்ததாக வருகின்றது என மீண்டும் மக்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். உடனடியாக குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கனகராஜ் மற்றும் அதிகாரிகளிடம் பேசி சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். எம்.எல்.ஏ.வின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர்.

    • கீழநீலிதநல்லூர் கிராமத்தில் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி தலைவர் பாபு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழநீலிதநல்லூர் கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். கீழநீலிதநல்லூர் ஊராட்சி தலைவர் கோதை அம்மாள் பாபு முன்னிலை வகித்தார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி தலைவர் பாபு, மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு தலைவர் மரியலூயிஸ் பாண்டியன், மாவட்ட ஆதி திராவிடர் நல தலைவர் ராஜ் என்ற கருப்பசாமி, மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் தனசேகரன், மாவட்ட பிரதிநிதி சண்முக பாண்டியன், ஊராட்சி துணைத் தலைவர் ஜானகி, கிளை செயலாளர்கள் முத்துராமலிங்கம், ராஜேந்திரன், மைனர்சாமி, பரஞ்சோதி, தங்கத்துரை, இளைஞர் அணி சிவா, மாதவன், பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சாயச்சாலை கட்டிடத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
    • சங்கரன்கோவிலில் சாயச்சாலை தொடங்கப்பட்டதால் கைத்தறி தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட கைத்தறிதுறை சார்பில் விருது நகர் மாபெரும் கைத்தறி குழுமத்திட்டம் மற்றும் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் ரூ. 72.11 லட்சம் திட்ட மதிப்பீட்டில் சங்கரன்கோவி லில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட அளவிலான சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய சாயச்சாலை கட்டிடத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    தொழிலாளர்கள் மகிழ்ச்சி

    அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கைத்தறி உதவி இயக்குனர் சங்கரேஸ்வரி தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், கைத்தறி அலுவலர்கள் சுலோச்சனா, பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி அங்கு செய்யப்படும் பணிகள் குறித்து பேசினார். இந்த திட்டத்தின் மூலம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதி மட்டுமல்லாமல் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கைத்தறி உற்பத்தியாளர்களும் இதுவரை விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் சென்று சாய சாலைகளில் நூல்களை சாயம் போட்டு வந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் இந்த நிலையம் தொடங் கப்பட்டதால் கைத்தறி தொழி லாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதன் மூலம் தங்களது நேரம், செலவுகள் குறைவது மட்டுமல்லாமல், தமிழக அரசின் விலையில்லா வேட்டி சேலைகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர் ராஜா ஆறுமுகம், மாவட்ட விவசாய அணி தலைவர் பாலசுப்ரமணியன், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் மரியலூயிஸ் பாண்டியன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் செல்வராஜ், பொதுகுழு உறுப்பினர் மகேஸ்வரி, மாணவரணி துணை அமைப்பாளர் வீரமணி, மாவட்ட இளைஞ ரணி துணை அமைப்பாளர் கார்த்தி, நகர அவைத் தலைவர் முப்பிடாதி, நகர துணைச் செயலாளர் முத்துக் குமார், அஜய் மகேஷ் குமார் மற்றும் கைத்தறி அலுவ லர்கள், நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வண்டி எண்: 16327 வருகிற 27-ந் தேதி முதல் மதுரையில் மதியம் 11.20 மணிக்கு கிளம்பி அதிகாலை 2.10 மணிக்கு குருவாயூர் வரும்.
    • ரெயிலில் 11 முன்பதிவில்லா பெட்டிகள் உள்பட 14 பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.

    சங்கரன்கோவில்:

    கேரள மாநிலம் குருவாயூர் முதல் புனலூர் வரை செல்லும் ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என திருவனந்தபுரம் ரெயில்வே பயணிகள் சங்க ஆலோசனைக்குழு உறுப்பினரும், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான ராஜா எம்.எல்.ஏ. தென்னக ரெயில்வே மேலாளரை சந்தித்து மனு அளித்தார். அதன் அடிப்படையில் அந்த ரெயில் மதுரை வரை நீட்டிக்க ப்பட்டுள்ளது. வருகிற 27-ந் தேதி முதல் குருவாயூர்- மதுரை- குருவாயூர் விரைவு வண்டியாக இயங்கும் இந்த ரெயில் மதுரையில் இருந்து விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பு கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை வழியாக இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும் வண்டி எண்: 16327 வருகிற 27-ந் தேதி முதல் மதுரையில் மதியம் 11.20 மணிக்கு கிளம்பி அதிகாலை 2.10 மணிக்கு குருவாயூர் வரும் எனவும், வண்டி எண்: 16328 (குருவாயூர்-மதுரை) மறுநாள் 28-ந் தேதி குருவாயூரில் இருந்து காலை 5.50 மணிக்கு கிளம்பி இரவு 7.15 மணிக்கு மதுரைக்கு வந்து சேரும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த ரெயிலில் 11 முன்பதிவில்லா பெட்டிகள், 2 படுக்கை பெட்டிகள், 1 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி என மொத்தம் 14 பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் எனவும் தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இனி விருதுநகர் மேற்கு, நெல்லை மேற்கு மற்றும் தென்காசி மாவட்ட மக்கள் நேரடியாக குருவாயூர் செல்வதற்கு இது ஏதுவாக அமையும். மக்களின் ரெயில் கோரிக்கைகளை உரிய அதிகாரிகளிடம் எடுத்து சென்று தொடர்ந்து ரெயில்களையும், ரெயில் நிறுத்தங்களையும் பெற்று தந்த ராஜா எம்.எல்.ஏ.விற்கு தென் மாவட்ட ரெயில் பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    • நீட் தேர்வில் 572 மதிப்பெண்கள் பெற்ற முருகராஜிக்கு விருதுநகர் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
    • முருகராஜிக்கு முதற்கட்டமாக தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் நவநீதகிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான சண்முகச்சாமி-வள்ளியம்மாள் தம்பதியினரின் மகன் முருகராஜ் நீட் தேர்வில் 572 மதிப்பெண்கள் பெற்று விருதுநகர் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து முருகராஜிக்கு முதற்கட்டமாக தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

    தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கல்வி செலவுக்காக ரூ.10 ஆயிரமும், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை ரூ.10 ஆயிரமும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் காசிராஜன் ரூ.5 ஆயிரமும் வழங்கினர். மேலும் வரும் காலங்களிலும் கல்வி உதவித்தொகை அளிக்கப்படும் என்பதையும் ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்து மருத்துவ கல்லூரி மாணவர் முருகராஜை ஊக்கப்படுத்தினார்.

    • தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு 20 சார்பு அணிகளுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    • சார்பு அணிகள் கட்சி தலைமை அறிவித்துள்ள தீர்மானங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் மேலரதவீதியில் உள்ள கோகுலம் மண்டபத்தில் நடந்தது.

    நிர்வாகிகளுக்கு ஆலோசனை

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றி விஜயன் வரவேற்றார்.

    குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை, வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் அன்புமணி கணேசன் ஆகியோர் சார்பு அணி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இதில் கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. 20 சார்பு அணி நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசினார். அப்பொழுது அவர் பேசியதாவது:-

    40 தொகுதியிலும் வெற்றி

    தி.மு.க.வில் 23 சார்பு அணிகள் உள்ளன. தற்போது தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு 20 சார்பு அணிகளுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சார்பு அணி பதவி என்பது கட்சியின் வளர்ச்சிக்காக உழைப்பதற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ள பதவி ஆகும். சார்பு அணி நிர்வாகிகள் அந்தந்த பகுதி ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். அவர்கள் கூறும் ஆலோசனைகளை கேட்டு அதன்படி செயல்பட வேண்டும்.

    சார்பு அணி நிர்வாகிகள் மாதம் ஒருமுறை கூட்டம் நடத்தி அது குறித்து மாவட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். மேலும் சார்பு அணிகள் கட்சி தலைமை அறிவித்துள்ள தீர்மானங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். கட்சித்தலைவர் அறிவித்துள்ளது போல 100 பேச்சாளர்களை உருவாக்க வேண்டும். அந்தந்த அணி களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளை செய்து வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.

    இல்லம் தேடி கல்வி

    மேலும் தலைமைக் கழகம் மற்றும் மாவட்ட கழகம் அறிவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அனைத்து சார்பு பணி நிர்வாகிகளும் அந்தந்த பகுதியில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்களுடன் ஆலோசித்து இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை பணியை துரிதமாக செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளத்துரை, தேவா என்ற தேவதாஸ், பராசக்தி, வேல்சாமி பாண்டியன், மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், பெரியதுரை, ராமச்சந்திரன், மதிமாரிமுத்து, கிறிஸ்டோபர், சேர்மத்துரை, புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, பேரூர் கழகச் செயலாளர்கள் குருசாமி, ரூபி பாலசுப்பிரமணியன், மாரிமுத்து, நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமாமகேஸ்வரி சரவணன், புளியங்குடி விஜயா சவுந்தரபாண்டியன், வாசுதேவநல்லூர் லாவண்யா,

    மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் இளைஞர் அணி முகேஷ், மகளிர் அணி சிவசங்கரி, ஆதிதிராவிடர் நலக்குழு அணி கே.எஸ்.எஸ். மாரியப்பன், அயலக அணி அமைப்பாளர் அமிதாப், விளையாட்டு மேம்பாட்டு அணி காசிராஜன், துணை அமைப்பாளர் கேபிள் கணேசன், நெசவாளர் அணி சந்திரன், இலக்கிய அணி குரு வசந்த், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணன், ராஜ், செய்யது இப்ராஹிம், உதயா, நகரத் துணை செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

    • 2 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒன்றிய, நகர, பேரூர் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
    • கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ., பேசினார்.

    சங்கரன்கோவில்:

    தென்மண்டலத்துக்கு உட்பட்ட 19 மாவட்டங்களின் உள்ள தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டம் வருகிற 17-ந் தேதி ராமநாதபுரம் தேவிபட்டினம் சாலை பேராவூர் என்ற இடத்தில் நடைபெறுகிறது.

    ஆலோசனை கூட்டம்

    கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். தென்காசி வடக்கு மாவட்டத்தை சேர்ந்த சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் இந்த பயிற்சி பட்டறைக்கு கலந்து கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. இதில் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    2 சட்டமன்ற தொகுதியிலும் உள்ள வாக்குச்சாவடி முகவர்களை மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் அழைத்து வர வேண்டும். இது தொடர்பாக 2 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒன்றிய, நகர, பேரூர் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். நிர்வாகிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு தென்காசி வடக்கு மாவட்டத்தில் இருந்து அனைத்து வாக்குச்சாவடி முகவர்களும் பயிற்சி பாசறையில் கலந்து கொள்ள வேண்டும்.

    மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி விளையாட்டுப் போட்டிகள், கருத்தரங்கங்கள், கலைஞரின் சாதனை விளக்க கூட்டங்கள், ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் கட்சி கொடி ஏற்றுதல், கட்சி மூத்த முன்னோர்களுக்கு பொற்கிழி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யூ.எஸ்.டி. சீனிவாசன், பரமகுரு, மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜதுரை, புனிதா, ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், கடற்கரை, பொன் முத்தையா பாண்டியன், பூசை பாண்டியன், ராமச்சந்திரன், மதி மாரிமுத்து, கிறிஸ்டோபர், சேர்மத்துரை, வெற்றி விஜயன், பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமி பாண்டியன், சங்கரன்கோவில் மாரிச்சாமி, பராசக்தி, மகேஸ்வரி, வெள்ளத்துரை, நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி பேரூர் செயலாளர்கள் ரூபி பாலசுப்ரமணியன், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அடிக்கல் நாட்டு விழாவிற்கு மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் கீழநீலிதநல்லூர் முதல் மருதன்கிணறு வரை செல்லும் சாலையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி மதிப்பில் பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பாலம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இதில் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், ஊராட்சிமன்ற தலைவர் தங்கதுரை, ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன், முத்தரசு, மாரியப்பன், சுவாமிதாஸ், பாபு, பொறியாளர் அணி மாதவன், இளைஞர் அணி ரமேஷ், ஒப்பந்ததாரர் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பனவடலிசத்திரம் அருகே நாய் ஒன்று வெறிபிடித்து அப்பகுதியில் உள்ள மாடுகளை கடித்து குதறியது.
    • வெறிநாய்க்கடித்து காயம் அடைந்த 14 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வெறி நாய் அலைந்து திரிந்து 50-க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மாடுகளையும் கடித்துக் குதறியது. இதனால் இப்பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.

    பனவடலிசத்திரம் அருகே உள்ள சிவகாமியாபுரம் பகுதியை சேர்ந்த வெள்ளை நிற நாய் ஒன்று வெறிபிடித்து அப்பகுதியில் உள்ள மாடுகளை கடித்து குதறியது. அதன் பின் மருதங்கிணறு பகுதியில் 5 பேரை கடித்தது. ஆராய்ச்சிபட்டியில் 3 மாடுகளையும், ஆயாள்பட்டி பகுதியில் 16 மாடுகளையும் கடித்தது. அதன் பின் குருக்கள்பட்டிக்கு சென்றது. அப்போது அங்கு பால் வாங்குவதற்காக காத்துக் கொண்டிருந்த பலரைகடித்து குதறியது.

    இதில் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியை சேர்ந்த பாப்பா (45), தாயாத்தாள் (75), முத்தத்தாள் (75), தனலட்சுமி (35), அன்னத்தாய் (55), ராஜ்குமார் (52), வேலுச்சாமி (70), அய்யம்மாள் (42), வெள்ளத்துரை (57) மற்றும் 7 வயது சிறுமி, சின்னகோவிலான்குளத்தை சேர்ந்த மாணிக்கத்தாய் (50), தர்மத்தூரணியை சேர்ந்த மாரிச்சாமி (55), பார்வதி (50) மற்றும் 7 வயது சிறுவன் ஆகியோர்களை வெறிநாய் கடித்தது. வெறிநாய்க்கடித்து காயம் அடைந்த 14 பேரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து சென்ற தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அதிக பாதிப்படைந்தவர்கள் சிகிச்சைக்காக ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

    தொடர்ந்து அந்த வெறி நாயை உடனடியாக பிடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். மேலும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வெறிநாய் பிடிபடும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறினார். தொடர்ந்து சங்கரன்கோவில் தலைமை குடிமை மருத்துவர் டாக்டர் செந்தில் சேகரிடம் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மேல் சிகிச்சைதேவைப்படும் சூழ்நிலையில் எந்த உதவி தேவைப்பட்டாலும் தன்னை தொடர்பு கொள்ளுமாறு மருத்துவர்களிடம் வலியுறுத்தினார். அப்போது மேலநீலதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அரியநாயகிபுரம் இந்து நாடார் உறவின்முறை கமிட்டி பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் ஒன்றியம் அரியநாயகிபுரம் இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல் நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சங்கரன் கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார். பள்ளி செயலாளர் அருண கிரி சாமி வரவேற்று பேசினார். தொடர்ந்து வடக்கு மாவட்ட செய லாளர் ராஜா எம்.எல்.ஏ. மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் ஒன்றிய கவுன்சிலர் கணேச புஷ்பா, அரிய நாயகிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகவேல், ஊராட்சி மன்ற துணை தலைவர் காசி சிவகுருநாதன், கிளை செயலாளர் ராமகி ருஷ்ணன், மாவட்ட மாணவர் அணி அமைப்பா ளர் உதயகுமார், ஒன்றிய அவைத்தலைவர் நடராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலமுருகன், சின்னதுரை, கிளை செயலாளர் மதியழகன், முத்துசாமி, பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் செல்லையா நன்றி கூறினார்.

    • கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில, பூத் முகவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
    • நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்டம் மேலநீலிதநல்லூர் தெற்கு, கிழக்கு, மேற்கு, ஒன்றிய தி.மு.க. சார்பில் குருக்கள்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

    பாக முகவர்கள் கூட்டம்

    தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    மேலநீலிதநல்லூர் தெற்கு, கிழக்கு, மேற்கு, ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, வெற்றிவிஜயன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில், பூத் முகவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், புனிதா, ராஜதுரை, பொதுக்குழு உறுப்பினர்கள் மகேஸ்வரி, தேவா என்ற தேவதாஸ், சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் மதி மாரிமுத்து, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மேலநீலிதநல்லூர் ஒருங்கி ணைந்த ஒன்றிய தி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள், அவை தலைவர்கள், ஒன்றிய துணை செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் முகேஷ் தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தி.மு.க. இளைஞரணி உருவாக்கப்பட்டு 44-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் முகேஷ் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் சரவணன், ராஜ், கார்த்தி, ராஜராஜன், அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கினார். இதில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×