search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கரன்கோவில்"

    • டி.எஸ்.பி. பால்சுதர் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.க்கள், தலையாரிகள் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    தமிழகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் விழிப்புணர்வு வார விழா நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை டி.எஸ்.பி. பால்சுதர் தலைமையில் சங்கரன் கோவில் தாசில்தார் அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் கடந்த 2-ந்தேதி நடைபெற்றது.

    இதில் சங்கரன்கோவில், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய வட்டங்களில் பணி புரியும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டி.எஸ்.பி. பால்சுதர் பேசியதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் குறிப்பாக சங்கரன்கோவில் பகுதியில் இருந்து வருவாய்த் துறை, நில அளவை துறை, மின்வாரியத்துறை ஆகிய துறைகளின் மீது லஞ்ச புகார் தெரிவித்து அதிகமான போன் கால்கள் வந்த வண்ணம் உள்ளது.

    என்னுடைய தனிப்பட்ட என்னை கண்டுபிடித்து புகார் கூறுகின்றனர்.அதனால் தான் சங்கரன் கோவிலில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்தோம். இதன் மூலம் 100 பேரில் 5 பேராவது மாறுவார்கள் என்கிற நோக்கம் மட்டும்தான் காரணம்.

    நீங்கள் பார்க்கிற துறையில் பல பிரச்சினைகள் உள்ளது. சட்டத்திற்கு உட்பட்டு நாம் சரியாக இருந்தால் போதும். முடியாது என்று சொன்னால் இடமாற்றம் செய்வார்கள். வேறு இடத்தில் போய் பணி செய்யுங்கள் அவ்வளவு தான்.

    அதற்காக வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்தில் ஏறி அலைய வேண்டுமா? உங்கள் குடும்பத்தை எண்ணி பாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. பால் சுதர், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ் பெக்டர் ரவி, தலைமை காவலர்கள் வேணுகோபால், கணேசன் ஆகியோர் சங்கரன்கோவில் பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பொதுமக்கள் மற்றும் டிரை வர்களிடம் 'லஞ்சம் கொடுப் பதும் குற்றம் லஞ்சம் வாங்குவதும் குற்றம்' என்ற துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    • பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ராஜா எம்.எல்.ஏ.கேட்டறிந்தார்.
    • முகாமில் பரிசோதனைகள் செய்யப்பட்டு பாதிப்புள்ள நபர்களுக்கு இலவசமாக மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி தி.மு.க. வடக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சங்கரன் கோவிலில் உள்ள 36 கிராம சேனை தலைவர் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

    ராஜா எம்.எல்.ஏ.

    தென்காசி வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மருத்துவரணி தலைவர் சுமதி முன்னிலை வகித்தார்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

    முகாமில் பொது மக்களுக்கு சர்க்கரை நோய், பொது மருத்துவம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், இருதய நோய்கள், முதுகு வலி, மூட்டு தேய்மானம், மகளிர் நல ஆலோசனை உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டு பாதிப்புள்ள நபர்களுக்கு இலவசமாக மாத்திரைகள் வழங்கப் பட்டது.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், , மாவட்ட விவசாய அணி தலைவர் வெள்ளைத்துரை, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ்.மாரியப்பன், மருத்துவரணி துணை தலைவர் பேச்சியம்மாள், துணை அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் வீமராஜ்,

    வக்கீல்கள் நேரு, ஜெயக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு சிவாஜி, கணேஷ், மானூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி முத்தமிழ், ஜெயகுமார், ஜான் மருத்துவர்கள் மணிகண்டன், சுமதி, சத்தியபாலன், செல்வமாரி, பேச்சியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

    • வண்டி எண்: 16327 வருகிற 27-ந் தேதி முதல் மதுரையில் மதியம் 11.20 மணிக்கு கிளம்பி அதிகாலை 2.10 மணிக்கு குருவாயூர் வரும்.
    • ரெயிலில் 11 முன்பதிவில்லா பெட்டிகள் உள்பட 14 பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.

    சங்கரன்கோவில்:

    கேரள மாநிலம் குருவாயூர் முதல் புனலூர் வரை செல்லும் ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என திருவனந்தபுரம் ரெயில்வே பயணிகள் சங்க ஆலோசனைக்குழு உறுப்பினரும், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான ராஜா எம்.எல்.ஏ. தென்னக ரெயில்வே மேலாளரை சந்தித்து மனு அளித்தார். அதன் அடிப்படையில் அந்த ரெயில் மதுரை வரை நீட்டிக்க ப்பட்டுள்ளது. வருகிற 27-ந் தேதி முதல் குருவாயூர்- மதுரை- குருவாயூர் விரைவு வண்டியாக இயங்கும் இந்த ரெயில் மதுரையில் இருந்து விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பு கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை வழியாக இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும் வண்டி எண்: 16327 வருகிற 27-ந் தேதி முதல் மதுரையில் மதியம் 11.20 மணிக்கு கிளம்பி அதிகாலை 2.10 மணிக்கு குருவாயூர் வரும் எனவும், வண்டி எண்: 16328 (குருவாயூர்-மதுரை) மறுநாள் 28-ந் தேதி குருவாயூரில் இருந்து காலை 5.50 மணிக்கு கிளம்பி இரவு 7.15 மணிக்கு மதுரைக்கு வந்து சேரும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த ரெயிலில் 11 முன்பதிவில்லா பெட்டிகள், 2 படுக்கை பெட்டிகள், 1 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி என மொத்தம் 14 பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் எனவும் தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இனி விருதுநகர் மேற்கு, நெல்லை மேற்கு மற்றும் தென்காசி மாவட்ட மக்கள் நேரடியாக குருவாயூர் செல்வதற்கு இது ஏதுவாக அமையும். மக்களின் ரெயில் கோரிக்கைகளை உரிய அதிகாரிகளிடம் எடுத்து சென்று தொடர்ந்து ரெயில்களையும், ரெயில் நிறுத்தங்களையும் பெற்று தந்த ராஜா எம்.எல்.ஏ.விற்கு தென் மாவட்ட ரெயில் பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    • கோவில்பட்டி முதல் பருவக்குடி வரை உள்ள சாலையில் நடுவப்பட்டி பகுதி வரை மட்டுமே சாலை விரிவாக்க பணிகள் செய்யப்பட்டுள்ளது.
    • அடைக்கலாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையை மேம்படுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    சங்கரன்கோவில்:

    நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலுவை சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மனு அளித்தார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

    கோவில்பட்டி முதல் பருவக்குடி வரை உள்ள சாலையில் நடுவப்பட்டி பகுதி வரை மட்டுமே சாலை விரிவாக்க பணிகள் செய்யப்பட்டுள்ளது. நடுவபட்டியில் இருந்து பருவக்குடி வரை சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும், குருவிகுளம் ஒன்றியம் குருவிகுளம், ராமலிங்கபுரம், அத்திப்பட்டி வழியாக கழுகுமலை செல்லும் சாலை பழுதடைந்து உள்ளதால் அதனை சரி செய்ய வேண்டும். திருவேங்கடம் முதல் ஆலங்குளம் வரை குருவிகுளம் வழியாக செல்லும் சாலையை விரிவுபடுத்த வேண்டும் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சங்கரன்கோவில் முதல் நெல்லை வரை செல்லும் சாலையில் இருந்து அடைக்கலாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையை மேம்படுத்த வேண்டும்.

    மேலும் சுமார் 60 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட சங்கரன்கோவில் நகர்ப்பகுதியில் வியாபார ரீதியாகவும், கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சங்கரன்கோவில் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புறவழிச்சாலை புளியம்பட்டியில் இருந்து களப்பாகுளம், நெடுங்குளம் வாயிலாக தெற்குத் சங்கரன்கோவில் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள சங்கரன் கோவில் புறவழிச்சாலை பணிகளை விரைவாக தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அஜித்குமார் சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகின்றார்.
    • மர்ம நபர் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள போனை திருடி சென்றது தெரியவந்தது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 28). இவர் சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று கடைக்கு செல்போன் வாங்க ஒருவர் வந்துள்ளார். பழைய செல்போன் வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது அவரது தந்தை செல்லத்துரை கடையில் இருந்துள்ளார்.

    அவர் செல்போன் வாங்க வந்தவரிடம் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை காண்பித்துள்ளார். அதற்குள் இன்னொரு வாடிக்கையாளர் வரவே அவரிடம் விற்பனை செய்து கொண்டிருக்கும் போது மர்ம நபர் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள போனை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து திருவேங்கடம் என்.ஜி.ஓ. காலனி என்ஜிஓ காலனியை சேர்ந்த முருகன் மகன் அருண்பாண்டியன் (19) என்பவரை கைது செய்தனர்.

    • கக்கனின் எளிமை, நேர்மை பற்றி முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மனோகரன் பேசினார்.
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாளை முன்னிட்டு நகர காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. சங்கரன்கோவில் தியேட்டர் சாலையில் அமைந்துள்ள அம்பேத்காரின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    நகர காங்கிரஸ் பொருளாளர் வைத்தியர் மனோகரன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் நிர்வாகி சித்திரைகண்ணு, அந்தோணி, ராஜேந்திரன், சங்கர மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மனோகரன் கக்கனின் எளிமை நேர்மை பற்றி பேசினார்.

    இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பீர்முகமது, சங்கரன் ஏட்டையா, ரஷீத், தங்கராஜ், கருப்பசாமி, முருகன், ஆறுமுகம், மாடகண்ணு, சமுதாய நாட்டாண்மை சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×