என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜா எம்.எல்.ஏ. குத்து விளக்கு ஏற்றி வைத்த காட்சி.
சங்கரன்கோவிலில் ரூ.72.11 லட்சம் மதிப்பில் புதிய சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்-காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
- சாயச்சாலை கட்டிடத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
- சங்கரன்கோவிலில் சாயச்சாலை தொடங்கப்பட்டதால் கைத்தறி தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்ட கைத்தறிதுறை சார்பில் விருது நகர் மாபெரும் கைத்தறி குழுமத்திட்டம் மற்றும் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் ரூ. 72.11 லட்சம் திட்ட மதிப்பீட்டில் சங்கரன்கோவி லில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட அளவிலான சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய சாயச்சாலை கட்டிடத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
தொழிலாளர்கள் மகிழ்ச்சி
அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கைத்தறி உதவி இயக்குனர் சங்கரேஸ்வரி தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், கைத்தறி அலுவலர்கள் சுலோச்சனா, பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி அங்கு செய்யப்படும் பணிகள் குறித்து பேசினார். இந்த திட்டத்தின் மூலம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதி மட்டுமல்லாமல் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கைத்தறி உற்பத்தியாளர்களும் இதுவரை விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் சென்று சாய சாலைகளில் நூல்களை சாயம் போட்டு வந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் இந்த நிலையம் தொடங் கப்பட்டதால் கைத்தறி தொழி லாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதன் மூலம் தங்களது நேரம், செலவுகள் குறைவது மட்டுமல்லாமல், தமிழக அரசின் விலையில்லா வேட்டி சேலைகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர் ராஜா ஆறுமுகம், மாவட்ட விவசாய அணி தலைவர் பாலசுப்ரமணியன், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் மரியலூயிஸ் பாண்டியன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் செல்வராஜ், பொதுகுழு உறுப்பினர் மகேஸ்வரி, மாணவரணி துணை அமைப்பாளர் வீரமணி, மாவட்ட இளைஞ ரணி துணை அமைப்பாளர் கார்த்தி, நகர அவைத் தலைவர் முப்பிடாதி, நகர துணைச் செயலாளர் முத்துக் குமார், அஜய் மகேஷ் குமார் மற்றும் கைத்தறி அலுவ லர்கள், நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






