search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் ரூ. 2 கோடியில் பாலம் அடிக்கல் நாட்டு விழா-ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு
    X

    பாலம் அமைக்கும் பணியை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    சங்கரன்கோவிலில் ரூ. 2 கோடியில் பாலம் அடிக்கல் நாட்டு விழா-ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு

    • அடிக்கல் நாட்டு விழாவிற்கு மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் கீழநீலிதநல்லூர் முதல் மருதன்கிணறு வரை செல்லும் சாலையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி மதிப்பில் பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பாலம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இதில் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், ஊராட்சிமன்ற தலைவர் தங்கதுரை, ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன், முத்தரசு, மாரியப்பன், சுவாமிதாஸ், பாபு, பொறியாளர் அணி மாதவன், இளைஞர் அணி ரமேஷ், ஒப்பந்ததாரர் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×