search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்-ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்
    X

    அரியநாயகிபுரத்தில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை ராஜா எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி. 

    சங்கரன்கோவில் அருகே பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்-ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்

    • அரியநாயகிபுரம் இந்து நாடார் உறவின்முறை கமிட்டி பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் ஒன்றியம் அரியநாயகிபுரம் இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல் நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சங்கரன் கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார். பள்ளி செயலாளர் அருண கிரி சாமி வரவேற்று பேசினார். தொடர்ந்து வடக்கு மாவட்ட செய லாளர் ராஜா எம்.எல்.ஏ. மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் ஒன்றிய கவுன்சிலர் கணேச புஷ்பா, அரிய நாயகிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகவேல், ஊராட்சி மன்ற துணை தலைவர் காசி சிவகுருநாதன், கிளை செயலாளர் ராமகி ருஷ்ணன், மாவட்ட மாணவர் அணி அமைப்பா ளர் உதயகுமார், ஒன்றிய அவைத்தலைவர் நடராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலமுருகன், சின்னதுரை, கிளை செயலாளர் மதியழகன், முத்துசாமி, பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் செல்லையா நன்றி கூறினார்.

    Next Story
    ×