search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் சீசன் 2018"

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. #INDvWI #rohitsharma

    சென்னை:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.

    இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவில் நடந்த 2-வது ஆட்டத்திலும் 71 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.


    இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் ஆர்வத்தில் ரோகித் தலைமையிலான இந்திய அணி இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் அணி திகழ்கிறது.

    கடந்த போட்டியில் ரோகித் சர்மா அதிரடியான சதத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து படைத்தார். இதேபோல நாளையும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை ரசிகர்களை மகிழ்விப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    20 ஒவரில் 4 செஞ்சூரி அடித்து சாதனை படைத்த ரோகித் சர்மா அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை சேப்பாக்கத்தில் படைப்பாரா? என்று எதிர் நோக்கப்படுகிறது. அதற்கு அவருக்கு இன்னும் 69 ரன்னே தேவை.

    ரோகித்சர்மா 2271 ரன் (73 இன்னிங்ஸ்) எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் குப்தில் 2203 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

    இதேபோல பேட்டிங்கில் தவான், ராகுல், தினேஷ் கார்த்திக், கர்னல் பாண்ட்யா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    வேகப்பந்து வீரர்கள் உமேஷ்யாதவ், பும்ரா மற்றும் சுழற்பந்து வீரர் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு நாளைய போட்டியில் ஓய்வு கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக சித்தார்த் கஜல் மட்டும் அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதுவரை நடந்த 2 போட்டியிலும் ஆடாத வீரர்களுக்கு சென்னையில் வாய்ப்பு கிடைக்கலாம்.

    பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி ஆட்டத்திலாவது வென்று ஆறுதல் அடையும் வேட்கையில் உள்ளது. இதனால் அந்த அணி வீரர்கள் கடுமையாக போராடுவார்கள்.

    பிராத்வெயிட், ஹெட் மயர், பிராவோ போல்லார்ட் போன்ற சிறந்த வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் உள்ளனர். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அந்த அணி மேம்பாடு அடைவது அவசியமாகும்.

    இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் தூர்தர்சனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #INDvWI #rohitsharma

    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் புனேவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னையின் எப்.சி. அணி. #ISL2018 #FCPuneCity #ChennaiyinFC
    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி மற்றும் எப்.சி புனே சிட்டி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் புனே அணியை சேர்ந்த ஆஷ் குர்னியன் முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சென்னை அணியை சேர்ந்த மாலிசன் ஆல்வ்ஸ் 54-வது நிமிடத்திலும், கிரிகோரி நெல்சன் 56-வது நிமிடத்திலும், இனிகோ கால்டெரின் 69-வது நிமிடத்திலும், தோய் சிங் 72வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வலு சேர்த்தனர்.

    ஆட்டத்தின் இறுதியில் புனே அணியை சேர்ந்த ஜோனாதன் 90-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இதன்மூலம், சென்னையின் எப்.சி அணி 4- 2 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. #ISL2018 #FCPuneCity #ChennaiyinFC
    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டரை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி பெங்களூரு எப்.சி. அணி வெற்றி பெற்றது. #ISL2018 #BengaluruFC #KeralaBlasters
    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் பெங்களூரு அணியை சேர்ந்த சுனில் சேத்ரி முதல் கோலை அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை சேர்ந்த ஸ்லாவியா ஸ்டோஜனோவிக் 30வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதன்பின் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1 - 1 என்ற கணக்கில் சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 80-வது நிமிடத்தில் பெங்களூரு அணியை சேர்ந்த நிகோலா கிரெம்விரிக் ஒரு கோல் அடித்தார். இதனால் பெங்களூரு அணி 2- 1 என முன்னிலை பெற்றது.

    இறுதியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெங்களூரு எப் சி அணி வெற்றி பெற்றது.
    பெங்களூரு அணிக்கு இது 4-வது வெற்றி என்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தையும் தக்கவைத்துள்ளது. #ISL2018 #BengaluruFC #KeralaBlasters
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் பந்து வீச்சாளர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். #indvwi #rohitsharma

    கொல்கத்தா:

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்தான் எடுக்க முடிந்தது.

    ஆலன் அதிகபட்சமாக 27 ரன் எடுத்தார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், கலீல் அகமது, பும்ரா, குருணால் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய இந்திய அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 110 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தினேஷ் கார்த்திக் 34 பந்தில் 31 ரன்னும் ( 3 பவுண்டரி, 1 சிக்சர்), குருணால் பாண்டியா 9 பந்தில் 21 ரன்னும் (3 பவுண்டரி) எடுத்தனர். ஒஷானே தாமஸ், பிராத் வெயிட் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    பந்துவீச்சுக்கு நேர்த்தியான இந்த ஆடுகளத்தில் பவுலர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த பிட்சில் ரன் சேஸ் செய்வது சவாலனதே. ஆனாலும் பேட்ஸ்மேன்கள் சில பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் புதுமுக வீரர் தாமஸ் அபாரமாக பந்து வீசினார். அவரது திறமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று.


    குருணால் பாண்டியா மிகவும் அற்புதமான திறமை வாய்ந்தவர். மும்பை இந்தியன்ஸ் அணியில் நான் அவரை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். இக்கட்டான நேரத்தில் அணி நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறதோ அதை செயல்படுத்தக்கூடியவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி லக்னோவில் நாளை நடக்கிறது. இதில் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. #indvwi #rohitsharma 

    டெல்லியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் டெல்லி டைனமோஸ் மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகளுக்கு எதிரான போட்டி சமனில் முடிந்தது. #ISL2018 #DelhiDynamos #JamshedpurFC
    புதுடெல்லி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் டெல்லி டைனமோஸ் மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூரை சேர்ந்த செர்ஜியோ சிடோன்சா முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதையடுத்து, முதல் பாதி முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.

    இதேபோல், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், டெல்லி அணியின் லாலியன்ஜுவாலா சாங்கே 55-வது நிடத்திலும், அட்னா கமோனா 58-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினர்.

    இதற்கு பதிலடியாக, ஜாம்ஷெட்பூர் அணியின் ஜோஸ் லூயிஸ் 72வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், டெல்லி டைனமோஸ் மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2 - 2  என்ற கோல் கணக்கில் சமனிலை பெற்றது. இந்த ஆட்டத்தின் முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி புள்ளிப் பட்டியலில் ஜாம்ஷெட்பூர் அணி முதலிடம் பிடித்துள்ளது. #ISL2018 #DelhiDynamos #JamshedpurF
    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. #WIvIND #INDvWI

    சென்னை:

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் வருகிற 11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது.

    டிக்கெட் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் நள்ளிரவில் இருந்தே ஸ்டேடியம் முன்பு திரண்டு இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டுகளை வாங்கினர்.

    குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை ரூ.1,200 ஆகும். சி மற்றும் டி ஸ்டாண்டின் கீழ் பகுதி இருக்கைக்கான இந்த டிக்கெட்டுகள் 6 நம்பர் கவுண்டரில் விற்பனை செய்யப்பட்டது.

     


    குறைந்த பட்ச விலையான ரூ.1,200-க்கான டிக்கெட்டுகளை வாங்குவற்குதான் ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அவர்கள் நீண்ட கியூவில் நின்றனர். டிக்கெட் கிடைத்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

    அதிகபட்ச டிக்கெட்டின் விலை ரூ.12 ஆயிரம் (‘ஜி’ ஹாஸ்பிட்டாலிட்டி குளிர்சாதன வசதி பாக்ஸ்) ஆகும்.

    ரூ.2,400 (இ ஸ்டான்டின் மேல்பகுதி), ரூ.4 ஆயிரம் (அண்ணா பெவிலியன்), ரூ.4,800 (சி, டி மற்றும் இ ஸ்டாண்டின் ஹாஸ் பிட்டாலிட்டி ஏ.சி. பாக்ஸ், ‘எச்‘ ஸ்டாண்டின் கீழ் பகுதி ஏ.சி. பாக்ஸ்) ரூ.8 ஆயிரம் (பெவிலியன் டெரஸ், ‘எச்‘ ஹாஸ்பிட்டா லிட்டி ஏ.சி. பாக்ஸ்) ஆகிய விலையிலும் டிக்கெட்டுகள் விற்பனையானது.

    ஆன்லைன் மூலமும் டிக்கெட் வாங்க வசதி செய்யப்பட்டுள்ளது. www.paytm.com என்ற இணைய தளம் மூலம் டிக்கெட் பெறலாம். #WIvIND #INDvWI

    சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணியை 1- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது. #ISL2018 #MumbaiCityFC #ChennaiyinFC
    சென்னை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி அணியும், மும்பை சிட்டி எப்.சி அணியும் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் 20-வது நிமிடத்தில் மும்பை சிட்டி எப்.சி அணியின் மடாவ் சுகோவ் முதல் கோலை அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். முதல் பாதி முடிவில் மும்பை சிட்டி எப்.சி. அணி 1- 0 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், சென்னையின் எப்.சி அணியை 1- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மும்பை சிட்டி எப்.சி. அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை சிட்டி எப்.சி. அணி மூன்றாவது வெற்றி பெற்றது. #ISL2018 #MumbaiCityFC #ChennaiyinFC
    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை (4-ந்தேதி) நடக்கிறது. #T20cricket #indvswi #kohli #rohitsharma

    கொல்கத்தா:

    வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கிலும், 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை (4-ந்தேதி) நடக்கிறது.

    டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றது போல் 20 ஓவர் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்துடன் இந்தியா இருக்கிறது. இதனால் இந்திய அணியின் அதிரடி நாளையும் தொடருமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    கேப்டன் வீராட்கோலிக்கு 20 ஓவர் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித்சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    20 ஓவர் போட்டிக்கான அணியில் இருந்து முன்னாள் கேப்டனும், அணியின் சீனியர் வீரருமான டோனி நீக்கப்பட்டுள்ளார். இது நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


    அதே நேரத்தில் தேர்வு குழுவினர் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக விளக்கம் அளித்தது. இளம் வீரர் ரிசப்பண்டுக்கு வழி விடும் வகையில் டோனியே 20 ஓவர் ஆட்டங்களில் இருந்து விலகுவதாக முடிவு செய்தார் என்று வீராட்கோலி தெரிவித்து இருந்தார்.

    கேப்டன் ரோகித்சர்மா, தவான், ராகுல், ஷிரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிசப்பண்ட் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், குல்தீப் யாதவ், பும்ரா, யசுவேந்திர சாஹல் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

    தமிழகத்தை சேர்ந்த தினேஷ்கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணியில் உள்ளனர்.

    டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவர் தொடரையாவது வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது.

    டெஸ்டில் மோசமாக விளையாடிய அந்த அணி ஒருநாள் தொடரில் 3 ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாட கூடியது.

    இதனால் இந்திய அணிக்கு சவால் காத்திருக்கிறது. அந்த அணியில் கேப்டன் பிராத் வெயிட், ஹெட்மயா, லீவிஸ், ரஸ்சல், டாரன் பிராவோ, போல்லார்ட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #T20cricket #indvswi #kohli #rohitsharma

    புனேவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் புனே சிட்டி அணிகளுக்கு எதிரான போட்டி சமனில் முடிந்தது. #ISL2018 #KeralaBlasters #FCPunecity
    புனே:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் புனேவில் நேற்று நடைபெற்ற போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் எப்.சி. புனே சிட்டி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் புனே அணியின் மார்கோ ஸ்டன்கோவிக் முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதையடுத்து, முதல் பாதி முடிவில் புனே அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.

    இதேபோல், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் நிகோலா கிரெம்வரிக் ஒரு கோல் அடித்து 1-1 என ஆட்டத்தை சமனிலைப்படுத்தினார். 

    இறுதியில், எப்.சி. புனே சிட்டி அணி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1- 1 என்ற கோல் கணக்கில் சமனிலை பெற்றது. இந்த ஆட்டத்தின் முடிவில் புள்ளிப் பட்டியலில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. #ISL2018 #KeralaBlasters #FCPunecity
    ரஞ்சி டிராபி தொடரில் மணிப்பூர் அணிக்கெதிரான ஆட்டத்திரல் சிக்கிம் வீரர் 261 ரன்கள் விளாச, அந்த அணி 372 ரன்கள் குவித்தது. #RanjiTrophy
    இந்தியாவின் முன்னணி முதல்தர தொடரான ரஞ்சி டிராபி நேற்று தொடங்கியது. ஒரு ஆட்டத்தில் பிளேட் பிரிவில் இடம்பிடித்துள்ள சிக்கிம் - மணிப்பூர் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற மணிப்பூர் பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி சிக்கிம் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் சி டமாங்க் (0), பைசான் கான் (1), லமிச்சானே (8), பி டமாங்க் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதனால் 13 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஐந்தாவது நபராக மிலிண்ட் குமார் களம் இறங்கினார். 27 வயதான மிலிண்ட் குமார் டெல்லி அணிக்காக விளையாடி வந்தார். டெல்லி அணியில் இடம்கிடைக்காததால் சிக்கிம் அணிக்கு மாறினார்.

    அனுபவம் இல்லாத மணிப்பூர் அணியின் பந்து வீச்சை அபாரமாக எதிர்கொண்டு இரட்டை சதம் விளாசினார். அத்துடன் 261 ரன்கள் குவித்து வெளியேறினார். இவர் இரட்டை சதம் அடிக்க சிக்கிம் 372 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடக்கிய மணிப்பூர் 79 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.
    ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #JamshedpurFC #FCGoa
    ஜாம்ஷெட்பூர்:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர் எப்.சி, கோவா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மைக்கேல் சூசைராஜ் முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

    இதையடுத்து, கோவா அணியின் சார்பில் மூர்ததா பால் 33வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதன் பின்னர், முதல் பாதி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமனிலை வகித்தன.

    இரண்டாவது பாதியில், மைக்கேல் சூசைராஜ் மீண்டும் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து, மெமோ 77-வது நிமிடத்திலும், சுமித் பாசி 78-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர்.

    இறுதியில், ஜாம்ஷெட்பூர் அணி 4- 1 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த  வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. #ISL2018 #JamshedpurFC #FCGoa
    கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #BengaluruFC #ATK
    கொல்கத்தா:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு எப்.சி, கொல்கத்தா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் கோமல் தடால் முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

    முதல் பாதியின் முடிவில் பெங்களூரு அணியின் மிக்கு ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, முதல் பாதி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எரிக் பர்தாலு 47-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 2-1 என்ற பெங்களூரு அணி முன்னிலை பெற்றது. அதன்பின்னர் ஆட்டம் முடியும்வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், பெங்களூரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இது பெங்களூரு அணி பெற்ற மூன்றாவது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. #ISL2018 #BengaluruFC #ATK
    ×