search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து - கேரளாவை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது பெங்களூரு
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து - கேரளாவை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது பெங்களூரு

    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டரை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி பெங்களூரு எப்.சி. அணி வெற்றி பெற்றது. #ISL2018 #BengaluruFC #KeralaBlasters
    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் பெங்களூரு அணியை சேர்ந்த சுனில் சேத்ரி முதல் கோலை அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை சேர்ந்த ஸ்லாவியா ஸ்டோஜனோவிக் 30வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதன்பின் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1 - 1 என்ற கணக்கில் சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 80-வது நிமிடத்தில் பெங்களூரு அணியை சேர்ந்த நிகோலா கிரெம்விரிக் ஒரு கோல் அடித்தார். இதனால் பெங்களூரு அணி 2- 1 என முன்னிலை பெற்றது.

    இறுதியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெங்களூரு எப் சி அணி வெற்றி பெற்றது.
    பெங்களூரு அணிக்கு இது 4-வது வெற்றி என்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தையும் தக்கவைத்துள்ளது. #ISL2018 #BengaluruFC #KeralaBlasters
    Next Story
    ×