search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகா"

    • உங்களுடைய இயல்பான தன்மையை நீங்கள் உணருவதே யோகா.
    • நீங்கள் யோகா செய்யும்போது அதிகப்படியான எடை கண்டிப்பாக குறைந்துவிடும்.

    நீங்கள் விரும்பும்படி உங்கள் மனம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா அல்லது உங்கள் உடலையும், மனதையும் எப்போதுமே சுறுசுறுப்பாக, உற்சாகமாக, ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்று யோசிக்கிறீர்களா? யோகா மற்றும் தியானம் செய்ய தொடங்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்று எதுவும் தெரியாது. உடலையும் மனதையும் நமக்கு தேவையானபடி பயன்படுத்தும் இந்த யோக விஞ்ஞானம் எப்படி தொடங்கியது, நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றிய முழுமையான தொகுப்புதான் இந்த பதிவு.

    மூச்சைப்பிடித்துக் கொள்வது, தலைகீழாக நிற்பது இவையெல்லாம் யோகா அல்ல. எல்லாமே உங்கள் அனுபவத்தில் ஒன்றாகும். உங்களுடைய இயல்பான தன்மையை நீங்கள் உணருவதை யோகா என்று சொல்கிறோம். அந்த நிலையை அடைவதற்கு பல வழிமுறைகள் உள்ளன.

    ஒரு ஆசனம் என்பது உடல் இருக்கும் ஒரு நிலை. உங்களது உடல் எண்ணற்ற நிலைகளை எடுக்க முடியும். குறிப்பிட்ட நிலைகள், `யோகாசனங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. "யோகா" என்றால், உயர்நிலைப் பரிமாணங்களுக்கோ அல்லது வாழ்வின் உச்சபட்ச புரிதலை நோக்கியோ உங்களை அழைத்துச் செல்வது. எனவே ஒரு உயர்ந்த சாத்தியத்தை நோக்கி உங்களை வழி நடத்தக்கூடிய உடல் இருப்பு நிலை "யோகாசனம்" என்று அழைக்கப்படுகிறது.

    நீங்கள் யோகா செய்யும்போது, உங்களது அதிகப்படியான எடை கண்டிப்பாக குறைந்துவிடும். யோகா ஓர் உடற்பயிற்சியாக மட்டும் செயல்படுவதில்லை. அது உங்கள் உடல் அமைப்புகளுக்கு புத்துணர்ச்சி அளித்து, நீங்கள் அதிகமாக சாப்பிடாமல் இருக்கும் தன்மையை உங்களுக்குள் கொண்டுவந்து விடுகிறது. உங்கள் உடலுக்குள் ஓரளவு விழிப்புத்தன்மை வந்துவிட்டால், அதற்கு எது தேவையோ அதை மட்டும்தான் உடல் உண்ணும். அதற்கு மேல் எதையும் ஏற்றுக்கொள்ளாது.

    ஆனால் உடற்பயிற்சிகளையோ, நடைபயிற்சிகளையோ அல்லது உணவுத் திட்டங்களையோ கடைப்பிடித்தால், எப்போதும் உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சிப்பீர்கள். ஆனால் யோகா பயிற்சிகள் செய்து வரும்போது, உங்களை நீங்கள் கட்டுப்படுத்தி வைக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஏனென்றால் நீங்கள் பயிற்சிகளை மட்டும் செய்து வந்தால் போதும்.

    நீங்கள் அதிகமாக உணவுகளை எடுத்துக்கொள்ளத அளவுக்கு உங்கள் உடல் அமைப்புகளை யோகா கவனித்துக்கொள்கிறது. இதுதான் யோகாவில் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசமும் நன்மையும்.

    உடல், மனம், உணர்வு, சக்தி என உங்கள் வாழ்க்கையில் நான்கு உண்மைகள்தான் உள்ளன. எனவே உங்களுக்கு நீங்கள் என்ன செய்துகொள்ள வேண்டும் என்று கருதுகிறீர்களோ அவை இந்த நான்கு தளங்களில் மட்டுமே நிகழமுடியும். நீங்கள் செய்ய விரும்புவதை உங்கள் உடல் மூலமாகவும், உங்கள் மனம் மூலமாகவும், உங்கள் உணர்வுகள் மூலமாகவும், உங்கள் சக்திகள் மூலமாகத்தான் செய்ய முடியும். உணர்வுகளை பயன்படுத்தி உச்சநிலையை எட்டிவிட முடிந்தால் அதற்கு பக்திநிலை என்று பெயர்.

    • பொது மக்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சை முகாம் ராயகிரியில் நடைபெற்றது.
    • முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்றனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில் ராயகிரியில் பொது மக்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    முகாமை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ். தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி. முருகேசன் மற்றும் ராயகிரி பஞ்சாயத்து தலைவர் விவேகானந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்றனர். இதன் சிறப்பம்சமாக யோகா, அக்குபஞ்சர், பிசியோதெரபி போன்ற சிகிச்சைகள், வயது முதிர்வு சார்ந்த உபாதைகள், சீரான உணவு பழக்க வழக்கங்கள் குறித்த விழிப்புணர்வு, இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டது. டாக்டர் ஏ.வேடியப்பன், டாக்டர் நிலா மற்றும் பயிற்சி மருத்துவ மாணவர்கள் ஆகியோர் பங்குபெற்ற பொது மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி னார்கள். முகாமிற்கான ஏற்பாடுகளை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ ஆராய்ச்சி மைய ஆசிரியர்கள் மற்றும் அலு வலர்கள் செய்திருந்தனர்.

    • நீங்கள் வலிமை உடையவராகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பது அவசியம்.
    • பெண்கள் தினமும் யோகா பயிற்சி செய்வதால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய ஸ்ட்ரெஸ் குறையும்.

    அலுவலகத்தில் வேலை அதிகமாக இருந்தாலும் சரி, வீட்டு வேலையாக இருந்தாலும் சரி பெண்களுக்கு எப்போதும் வேலைகளுக்கு குறைவு இருக்காது. எப்போதும் ஏதாவது வேலை செய்துகொண்டே இருப்பார்கள். வயது முதிர்ந்தவர்களுக்கு போதிய ஓய்வு தேவை என்பதை வீட்டில் உள்ளவர்கள் முதலில் உணர வேண்டும்.

    குடும்பத்தில் உள்ள குழந்தைகள், முதியவர்களை சரிவர கவனிக்க வேண்டும். இதற்காகவே பெண்கள் முதலில் உடற்கூறு விஷயத்தில் வலிமை உடையவராக இருத்தல் அவசியம்.

    ஆண், பெண் இருவருக்குமே உடற்கூறு வலிமை மிக முக்கியம். 25 வயதிற்கு மேல் நாம் அனைவரும் குடும்பம், வேலை மற்ற விஷயங்களுக்காக நம் உடலை பராமரிப்பதை மறந்துவிடுகிறோம். எனவே நீங்கள் வலிமை உடையவராகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பது அவசியம். உடலை சீராக வைத்துக்கொள்ள பின்வருவனவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    நீங்கள் உறங்கும் படுக்கை விரிப்பு அல்லது மெத்தை மிகவும் கடினமாகவோ, மிகவும் லேசானதாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது முதுகு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சினை வராமல் தடுக்கும். சரியான அளவு தலையணையை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்றவற்றை தடுக்கலாம்.

    தூக்கம் மிகவும் முக்கியம். ஆண், பெண் இருவருமே வேலைப்பளு காரணமாக உடல் அசதி, சோர்வு ஏற்படும். சரியான அளவு தூங்கினால்தான் உங்கள் தசை, மூட்டு மற்றும் உடல் சீராகும்.

    பெண்கள் முடிந்தவரை நீண்டநேரம் நின்றுகொண்டு வேலை செய்வதை தவிர்க்கவும். நீண்ட நேரம் நிற்பதால் உங்கள் மூட்டில் தேய்மானம் ஏற்படுகிறது. இதனால் மூட்டு வலி வருவதை தவிர்க்கலாம். எத்தனை வேலைகள் செய்தாலும் அதற்கிடையே உங்கள் உடலுக்கான உடற்பயிற்சி செய்வதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும்.

    ஆண், பெண் இருவருமே ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடல் தசைகள், மூட்டு லகுவாகும். தசை இழுப்பு பயிற்சிகள் செய்வது மிகவும் அவசியம். தினமும் காலையில் எழுந்தவுடன் 10 நிமிடங்கள் செய்வது அவசியம்.

    பெண்கள் தினமும் யோகா பயிற்சி செய்வதால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய ஸ்ட்ரெஸ் குறையும். முதுகு, தசை பயிற்சி செய்வதால் முதுகுவலியை கட்டுப்படுத்தலாம்.

    சரியான காலணிகள் அணிவதன் மூலமும் முதுகு, மூட்டு மற்றும் குதிகால் வலிகளை தவிர்க்கலாம். வாரம் ஒருதடவையாவது உங்கள் தசை மற்றும் எலும்புகளை லகுவாக வைத்துக்கொள்ள மசாஜ் செய்வது அவசியம்.

    உடற்பயிற்சி தினமும் செய்வதால் உங்கள் தசை வலுப்பெறும். இதனால் எலும்புகள் வலுப்பெறும். உடல் வலிமை அதிகரிக்கும். எந்த அளவிற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை மருத்துவரின் ஆலோசனைபடி செய்வது உத்தமம்.

    உங்கள் மூட்டு, முதுகு, தோள்பட்டை, கழுத்து போன்றவை வலுவாக இருத்தல் அவசியம். இதற்கான உடற்பயிற்சி மிக அவசியம்.

    நீண்டநேரம் ஒரே இடத்தில் உட்காருவதை தவிர்க்க வேண்டும். இதனால் உங்கள் தசைகள் இறுகி முதுகு வலி, கால்வலி போன்றவை ஏற்படலாம்.

    கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது அதற்கான தனி நாற்காலியை பயன்படுத்தவும். இதனால் முதுகுவலி போன்றவற்றை தவிர்க்கலாம்.

    நீங்கள் உண்ணும் உணவில் புரதச்சத்து மிகவும் அவசியம். இதனால் தசைகள் வலுவாகும். மூட்டுவலி, முதுகுவலி போன்றவற்றை தவிர்க்கலாம்.

    பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் வைட்டமின் டி குறைபாட்டால் கால்ஷியம் குறைவு ஏற்படுகிறது. இதனால் மூட்டுவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் கால்ஷியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

    முடிந்த வரை உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள். எண்டார்ஃபின் எனும் ஹார்மோன் சுரந்து உங்களை மகிழ்ச்சியாக வைக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது சான்றோர் வாக்கு.

    • நரம்புகளுக்கு புத்துணர்வூட்டுகிறது.
    • மூளையை சுறுசுறுப்பாக்குகின்றன.

    செய்முறை

    முதலில் விரிப்பில் மேல் இரு கால்களையும் சேர்த்து வைத்தபடி நேராக நிற்கவும். பின் வலதுகாலை இடது காலில் இருந்து ஒரு இரண்டடி தூரம் இருக்கும்படி முன்னோக்கி நகர்த்தி வைக்கவும்.

    இரண்டு கைகளையும் முதுகுக்கு பின்னால் கொண்டுசென்று முழங்கைகளை மடக்கி கட்டிக்கொள்ளலாம் அல்லது இரு உள்ளங்கைகளையும் குவித்து கும்பிடுவது போல முதுகின் பின்னால் வைத்து கொள்ளலாம்.

    அதன் பின் மெதுவாக இடுப்பை முன்னோக்கி வளைத்து வலது முழங்காலில் உங்கள் முகம் படும்படி 30 விநாடிகள் நிற்கவும்.

    பின் மெதுவாக நிமிர்ந்து கால்களை மாற்றி செய்யவும். அதாவது வலது காலுக்கு பதிலாக இடது காலை முன்னோக்கி நகர்த்தி வைத்து இரண்டு கைகளையும் முதுகிற்கு பின்னால் கொண்டு சென்று முழங்கைகளை கட்டிக்கொண்டோ அல்லது இரு உள்ளங்கைகளையும் குவித்து கும்பிடுவது போல வைத்துககொண்டோ முன்போல மெதுவாக இடுப்பை முன்னோக்கி வளைத்து இடது முழங்காலில் உங்கள் முகம் படும்படி 30 விநாடிகள் இருக்கவும். இவ்வாறு இரு கால்களையும் மாற்றி மாற்றி 3 முதல் 5 முறை செய்யவும்.

    கழுத்து, முதுகுத்தண்டு, இடுப்பு, குடல் இறக்கம் உள்ளவர்கள் மற்றும் வயிற்றில் சிகிச்சை செய்து கொண்டவர்கள் இதை பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.

    பயன்கள்

    வயிறு, முதுகு, இடுப்பு சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குவதோடு அவைகளுக்கு வலுவையும் தருகின்றன. மேலும் நரம்புகளுக்கு புத்துணர்வூட்டி மூளையை சுறுசுறுப்பாக்குகின்றன. கழுத்து, தோள்பட்டை, முழங்கை, கால் முதலிய உறுப்புகளுக்கு வலிமை தருவதோடு பெண்களுக்கு வரும் மாதவிடாய் பிரச்சனைகளையும் போக்குகிறது.

    • அடி வயிற்றைப் பலப்படுத்துகிறது.
    • கால்களைப் பலப்படுத்தவும் செய்கிறது.

    இது அர்த்த மாலாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. உத்தித நமஸ்காராசனம் மூலாதார சக்கரத்தைத் தூண்டி அதன் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. மூலாதார சக்கரத்தின் சீரான இயக்கத்தால் நிலையான தன்மையும் பாதுகாப்பு உணர்வும் வளருகிறது.

    பலன்கள்

    இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது; இடுப்பைப் பலப்படுத்துகிறது. கால்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு கால்களைப் பலப்படுத்தவும் செய்கிறது. அடி வயிற்றைப் பலப்படுத்துகிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளைத் தூண்டுகிறது. ஜுரணத்தை செம்மையாக்குகிறது.

    செய்முறை

    விரிப்பில் நிற்கவும். வலது காலை இடது காலிலிருந்து சுமார் 4 அடி இடைவெளி விட்டு தரையில் வைக்கவும். இடது காலில் உடலின் எடையை கூடுதலாகத் தாங்குமாறு நிற்கவும்.

    மூச்சை வெளியேற்றியவாறே இடுப்பை கீழே இறக்கவும். இடது பாதம் தரையில் இருக்க வேண்டும். வலது கால் நன்றாக நீட்டியிருக்க வேண்டும். வலது குதிகால் தரையில் இருக்க வேண்டும்.

    இரண்டு கைகளையும் வணக்கம் சொல்லும் முறையில் இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக வைக்கவும். 10 முதல் 20 நொடிகள் இந்த நிலையில் இருந்தபின் நீட்டிய காலை மீண்டும் மாலாசன நிலைக்குக் கொண்டு வரவும். காலை மாற்றி இதைத் திரும்பச் செய்யவும்.

    தீவிர அடி முதுகு வலி மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும்.

    • வேலைப்பளுவின் காரணமாக நமது உடல்நலத்தை கவனித்துக்கொள்ள மறந்து விடுகிறோம்.
    • பலவகையான உடல் உபாதைகளை தினமும் எதிர்கொள்கிறோம்.

    அன்றாட வாழ்வில், தேவைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறோம். வேலைப்பளுவின் காரணமாக நமது உடல்நலத்தை கவனித்துக்கொள்ள மறந்து விடுகிறோம். இதனால் பலவகையான உடல் உபாதைகளை தினமும் எதிர்கொள்கிறோம். சில யோகா ஆசனங்களைப் பயிற்சி செய்வதன் மூலம் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்று பார்ப்போம்.

    உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம்: இந்த ஆசனம் செய்யும் முன்பு, உடலைத் தளர்வாக வைத்துக்கொள்ள சில ஸ்டிரெச்சிங் பயிற்சிகளை செய்வது நல்லது. விரிப்பில் நேராக நின்று, கைகள் இரண்டையும் இடுப்புப் பகுதியில் கைகளின் பெருவிரல் முதுகுத்தண்டை பற்றியவாறு இருக்கும்படி வைக்க வேண்டும். இப்போது வலது காலின் விரல்கள் தரையில் பதியும்படி வைத்து, மெதுவாக இடது முழங்காலை மடக்காமல், இடது காலை நேராக நீட்டவும். இந்த நிலையில் இடது கையால், இடது காலின் விரல்களைத் தொடும்படி நேராக நிற்க வேண்டும். இப்போது நம் உடலின் சமநிலையை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

    பின் இடுப்புப் பகுதி வரை காலை நேராகத் தூக்க வேண்டும். சில வினாடிகள் இந்த நிலையில் இருந்து, பின்னர் மெதுவாக இடது காலை, இடது பக்கவாட்டில் கொண்டு செல்ல வேண்டும். இந்த நிலையில் சில நொடிகள் இருந்து விட்டு பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரலாம். இதேபோல் வலது காலுக்கும் செய்ய வேண்டும். இவ்வாறு இடது, வலது சுழற்சி முறையில் தொடர்ந்து 5 முறை இப்பயிற்சியைச் செய்யலாம்.

    பலன்கள்: கை, கால் பகுதிகளில் ஏற்படும் தசைப் பிடிப்பை நீக்கும். இடுப்புப் பகுதிக்குக் கீழ் சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுக்கும்.

    அதோ முக ஸ்வனாசனம் : விரிப்பில் குப்புறப் படுக்கவும். இப்போது மார்புப் பகுதியின் பக்கவாட்டில் கைகளை ஊன்றி, கால்களைத் தரையில் பதித்து, இடுப்புப் பகுதியை மேல்நோக்கி உயர்த்த வேண்டும். மூச்சினை நன்றாக இழுத்து வெளியிட்டபடியே, இடது காலை மட்டும் தரையில் இருந்து முடிந்தவரை மேல்நோக்கி உயர்த்தவும். இந்த நிலையில் இடது முழங்கால் மடங்காது இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் சில நொடிகள் இருந்து விட்டு, பழைய நிலைக்குத் திரும்பலாம். இதேபோல் வலது காலுக்கும் செய்ய வேண்டும். இவ்வாறு இந்தப் பயிற்சியை தொடர்ந்து 3 முறை செய்யலாம்.

    பலன்கள்: முழு உடலையும் தளர்வாக வைத்துக்கொள்ள இந்த ஆசனம் உதவும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    • செரிமான அமைப்பை தூண்ட உதவுகிறது.
    • மன அழுத்தத்தை நீக்குகிறது.

    ஹேப்பி பேபி போஸ் (ஆனந்த பலாசனா என்றும் அழைக்கப்படுகிறது) ஒரு பொதுவான யோகா. அதன் குறிப்பிடத்தக்க பெயர் இருந்தபோதிலும், இந்த போஸ் முழு தளர்வை அடைய பல நன்மைகளை வழங்குகிறது.

    ஹேப்பி பேபி போஸ் அதன் மென்மையான, நிதானமான இயக்கம் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இந்த இரண்டு வகையான உடற்பயிற்சிகளிலும் இணைக்கப்பட்டுள்ளது.

    இது ஒரு மென்மையான மற்றும் நிதானமான போஸ் ஆகும், இது தளர்வு அதிகரிப்பதற்கும் உடலை நீட்டுவதற்கும் ஏற்றது. இந்த போஸ் பொதுவாக "மகிழ்ச்சியான குழந்தை" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த நிலையில், உங்கள் முதுகில் படுத்து, உங்கள் கால்களைப் பற்றிக் கொண்டால், உங்கள் முதுகில் மகிழ்ச்சியுடன் படுத்திருக்கும் குழந்தையைப் போல இருப்பீர்கள். நம்மில் பலர் போர்வையில் அல்லது தொட்டிலில் படுத்திருக்கும் போது இந்த நிலையில் ஒரு குழந்தையைக் கண்டிருக்கிறோம்.

    செய்முறை

    விரிப்பில் படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் தலையை விரிப்பில் வைத்து, உங்கள் முழங்கால்களை 90 டிகிரி கோணத்தில் உங்கள் மார்பை நோக்கி வளைக்கவும். உங்கள் கால்களின் அடிப்பகுதியை கூரையை நோக்கி வைக்கவும். உங்கள் முதுகெலும்பை நடுநிலையாக வைத்திருங்கள்.

    முன்னோக்கிச் சென்று, உங்கள் கால்களின் உட்புறம் அல்லது வெளிப்புறத்தைப் பிடித்துப் பிடிக்கவும். முழங்கால்களை பிரிக்கவும், அவற்றை அக்குள் நோக்கி நகர்த்தவும்.

    உங்கள் குதிகால்களை உங்கள் கையில் வளைத்து, பக்கத்திலிருந்து பக்கமாக மெதுவாக அசைக்கவும் (மகிழ்ச்சியான குழந்தையைப் போல). உங்கள் மூச்சை, ஆழமாக உள்ளிழுக்கவும் மற்றும் வெளியேற்றவும். இந்த ஆசனத்தில் 15 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முறை செய்யவும்.

    முதுகு தண்டு பிரச்சனை உள்ளவர்கள், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.

    ன்மைகள்

    ஹேப்பி பேபி போஸ் உங்கள் உள் தொடைகள், தொடை எலும்புகள் மற்றும் இடுப்பை நீட்டி, உங்கள் இடுப்பு மற்றும் முதுகை விடுவிக்கும், இதன் விளைவாக அதிக நெகிழ்வுத்தன்மை மற்றும் இயக்கம் கிடைக்கும்.

    செரிமான அமைப்பை தூண்ட உதவுகிறது.

    இது சிறுநீரகங்களைத் தூண்டுகிறது. இந்த ஆசனம் சிறுநீரகங்களை சரியான ஆரோக்கியத்துடன் வைத்திருக்க ஒரு சிறந்த நுட்பமாகும்.

    மன அழுத்தத்தை நீக்குகிறது. பதட்டத்தை நீக்கி மனதை புத்துயிர் பெறச் செய்கிறது.

    இது நவீன வாழ்க்கையின் சோதனைகளிலிருந்து மிகவும் தேவையான நிவாரணத்தை அளிக்கிறது மற்றும் முழு உயிரினத்திலும் பாயும் ஒரு குழந்தை போன்ற ஆற்றலையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

    தொடை எலும்புகள், இடுப்பு மற்றும் உள் தொடையை வலுவாக்கும்.

    • அர்த்த ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் முதுகுத்தண்டைப் பலப்படுத்துகிறது.
    • கால்களை நீட்சியடைய வைக்கிறது.

    வடமொழியில் 'அர்த்த' என்றால் 'பாதி', 'ஊர்த்துவ' என்றால் 'மேல் நோக்கும்', 'உபவிஸ்த' என்றால் 'அமர்ந்த' மற்றும் 'கோணா' என்றால் 'கோணம்' என்றும் பொருளாகும். இந்த ஆசனத்தில் அமர்ந்திருக்கும் நிலையில் ஒரு காலை உயர்த்துவதால் இந்த பெயர் பெற்றது.

    அர்த்த ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் முதுகுத்தண்டைப் பலப்படுத்துகிறது. தொடர்ந்து இவ்வாசனத்தைப் பயிலும் போது மனம் ஒருநிலைப்படுகிறது.

    பலன்கள்

    வயிற்று உள்உறுப்புகளின் செயல்பாடுகளைச் செம்மையாக்குகிறது.

    இடுப்புப் பகுதியை பலப்படுத்துகிறது.

    இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை (flexibility) அதிகரிக்கிறது.

    கால்களை பலப்படுத்துவதோடு நீட்சியடையவும் (stretch) வைக்கிறது.

    சையாடிக் வலியைப் போக்குகிறது.

    மன அழுத்தத்தைப் போக்குகிறது.

    செய்முறை

    விரிப்பில் அமர்ந்து இரு பாதங்களையும் ஒன்றோடு ஒன்று சேருமாறு வைக்கவும். மூச்சை உள்ளிழுத்து வலது கையால் வலது கால் பெரு விரலைப் பிடித்து காலைத் தரையிலிருந்து உயர்த்தவும். மூச்சை வெளியேற்றியவாறே வலது காலை முடிந்தவரை நன்றாக நீட்டவும். இதே நிலையில் 20 வினாடிகள் இருந்த பின் காலை மாற்றி 20 வினாடிகள் செய்யவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 10 விநாடிகள் என 3 முறை செய்ய வேண்டும்.

    தோள், இடுப்பு, முட்டி ஆகிய பகுதிகளில் தீவிர வலி உள்ளவர்கள் இந்த ஆசனம் பயில்வதைத் தவிர்க்க வேண்டும்.

    • தொட்டில் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளுவதால் ரத்த ஓட்டம் சீராகும்.
    • முதுகுவலி பிரச்சனை உள்ளவர்கள் இந்த யோகாவை செய்யலாம்.

    குழந்தையாக இருந்தபோது அம்மாவின் புடவையில் தொட்டில் கட்டி விளையாடி இருப்போம். காற்றில் அசையும் தொட்டிலோடு, நாமும் அசைந்து ஆடி மகிழ்ந்திருப்போம். தற்போது அதே தொட்டிலைகொண்டு யோகா பயிற்சி செய்து வருகிறார்கள். ஆங்கிலத்தில் ஆன்ட்டி கிராவிட்டி எனும் இந்த பயிற்சியை அழகு தமிழில் தொட்டில் யோகா என்கிறோம். தலை முதல் கால் வரை பல நன்மைகளை கொடுக்கக்கூடிய இந்த பயிற்சியை எளிதாகவும், சுலபமாகவும் செய்யலாம். யோகாவில் காலில் அழுத்தம் கொடுத்து செய்யும் பயிற்சிகள் சிரமமானது. அதனாலேயே யோகா கற்கும் பலரும் இந்த பயிற்சிகளை தொடருவது இல்லை.

    அவர்களுக்குக்கெல்லாம் வரப்பிரசாதமாக அமைந்திருப்பது தொட்டில் யோகா. தரையின் மீது செய்யும் அனைத்து யோகா பயிற்சிகளையும், தொட்டில் யோகா முறையில் செய்யலாம். சிரமமின்றி எளிதாக ரசித்தபடியே இந்த யோகாவை செய்வதால் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். தொட்டில் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளுவதால் ரத்த ஓட்டம் சீராகும். முதுகுவலி பிரச்சனை உள்ளவர்கள் இந்த யோகாவை செய்யலாம். இதனால் வலி குறையும். முதுகு பகுதியில் உள்ள முக்கியமாக தசைகள் வலுவடைவதால் முதுகொலும்பு, தோள் பட்டை போன்றவற்றின் நெகிழ்வுத்தன்மை மேம்படுத்த முடியும்.

    தொட்டில் யோகாவில் பலவித அசைவுகள் இருப்பதால், ஜீரண உறுப்புகள் சீராக செயல்படும். இதன் மூலம் ஜீரண கோளாறுகள் குணமாகும். மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இன்றைய காலக்கட்டத்தில் பலரும் ஒரே இடத்தில் உடல் அசையாமல் அமர்ந்து பல மணிநேரம் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கான சிறந்த பயிற்சியாக தொட்டில் யோகா அமைகிறது. இதில் பல அசைவுகள் நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் உடலின் வளைவுத்தன்மை அதிகரிக்கும். 16 வயது முதல் 55 வயது வரை உள்ள யார் வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். உயர் ரத்த அழுத்தம், இதயப்பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    கா்ப்பிணிப் பெண்கள், சமீபத்தில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவா்கள், இரத்த கொதிப்பு உள்ளவா்கள், கீழ்வாதம் உள்ளவா்கள், இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவா்கள் மற்றும் சில உடல் உறுப்பு குறைபாடு உள்ளவா்கள் தொட்டில் யோகாவை செய்யாமல் இருப்பது நல்லது.

    எந்த யோகா செய்வதாக இருந்தாலும் உடல் இலகுவாக இருக்க வேண்டும். தொட்டில் யோகாவிலும் இதே வழிமுறைதான் பின்பற்றப்படுகிறது. பயிற்சி செய்வதற்கு முன்பு திட உணவை சாப்பிடக்கூடாது. முடிந்தவரை பழச்சாறு, தண்ணீர் அருந்துவது சிறந்தது. அவசர கதியில் பயிற்சி செய்யாமல் நிதானமாக செய்தால் மனம் இலகுவாகும். தளர்வான ஆடைகள் அணியாமல் உடலுக்கு ஏற்ற சற்றே இறுக்கமான ஆடைகளை அணியலாம். தொட்டில் யோகாவை செய்வதற்கு முன் சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. இதன் அடிப்படைகளை தெரிந்து கொண்டால் வீட்டிலேயே பயிற்சி செய்யலாம்.

    • தினமும் அரை மணி நேரம் ஒதுக்கி யோகாசனம் செய்தால், பல உடல் சிக்கல்களிலிருந்து மீண்டு நலம் பெறலாம்.
    • பெண்கள், காலை முதல் மாலை வரை வேலைசூழ் உலகிலேயே வாழ வேண்டியிருக்கிறது.

    வேலைக்குச் செல்லும் பெண்கள், காலை முதல் மாலை வரை வேலைசூழ் உலகிலேயே வாழ வேண்டியிருக்கிறது. அலுவலகத்தில் உழைப்பதோடு, வீடுகளில் இல்லத்தரசியாகவும் தங்களின் கடமையை நிறைவேற்ற வேண்டியதுள்ளது. இதனால் மிக எளிதாக மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவற்றோடு உயர் ரத்தஅழுத்தம் முதலிய பல்வேறு உடல் சிக்கல்களுக்கும் ஆளாகின்றனர். இவற்றையெல்லாம் போக்க அவர்களுக்கு அருமருந்தாகத் திகழ்வது யோகா. தினமும் அரை மணி நேரம் ஒதுக்கி யோகாசனம் செய்தால், பல உடல் சிக்கல்களிலிருந்து மீண்டு நலம் பெறலாம்.

    அர்த்த மத்ஸ்யாசனம்

    `அர்த்த என்றால் `பாதி என்று பொருள். `மத்ஸ்ய என்றால் `மீன். மீனைப்போல வளைந்து முதுகுத் தண்டுவடத்தைத் திருப்புவதன்மூலம் உடல் முழுவதும் இறுக்கம் தளர்ந்து புத்துணர்ச்சி ஏற்படுவதை உணரலாம். இது யோக சூத்திரம் வலியுறுத்தும் மிக முக்கிய ஆசனமாகும்.

    இந்த ஆசனத்தைச் செய்வதால், முதுகுத் தண்டுவடம் சீராகச் செயல்படும்; செரிமானக் கோளாறுகள் நீங்கும். அத்துடன் மூச்சுக் குழாய் பிரச்னைகள் தீர்வதுடன் ரத்தத்தைச் சுத்திகரிக்க பெரிதும் உறுதுணையாக இருக்கும்.

    வீரபத்ராசனம்

    இந்த ஆசனத்தைச் செய்வதன் மூலம் போர் வீரர்களைப் போன்ற உறுதியான உடலமைப்பைப் பெற முடியும். பலமணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் அவசியம் இந்த ஆசனத்தைப் பயில வேண்டும். வீரபத்ராசனம் செய்வதால் தோள்பட்டை, தொடை, கால் உறுதியடையும். மன இறுக்கம், உடல் இறுக்கம் மிக எளிதாகச் தளர்ச்சியடையும்.

    சக்ராசனம்

    உடலை பின்பக்கமாக சக்கரம்போல் வளைப்பதே சக்ராசனம். இந்த ஆசனத்தைச் செய்வதால் மூச்சுக் குழாய் மற்றும் மார்பு விரிவடையும். வயிறு, வயிற்றின் பின்புறம் மற்றும் மணிக்கட்டுப் பகுதிகள் உறுதிபெறும். தைராய்டு பிரச்னைகள் சரியாகும்.

    விருட்சாசனம்

    `விருட்சம் என்றால் `மரம். இந்த ஆசனத்தைச் செய்தால் மரத்தைப்போன்று உறுதியான கால்களைப் பெறலாம். கண் மற்றும் செவிப்பறை சார்ந்த பிரச்னைகள் சரியாகும். இடுப்பு வலி குணமாகும்; முழங்கால்கள் வலுவடையும். அத்துடன் நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.

    நடராஜாசனம்

    நடராஜரைப்போல ஒரு காலை மட்டும் தூக்கிக்கொண்டு செய்யவதால் இதற்கு நடராஜாசனம் என்று பெயர். இந்த ஆசனத்தைச் செய்வதால், கால்கள் உறுதிபெறும். தோள், மார்பு, வயிறு, தொடைப்பகுதியின் இறுக்கம் தளரும். உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் செய்ய வேண்டிய உன்னதமான ஆசனம் இது.

    மாலாசனம்

    சம்மணமிட்டு அமர்வதற்கு மாறாக, அதேநிலையில் உடலை மேலே தூக்கி அமரும் நிலை. பலமணி நேரம் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிபவர்கள் அவசியம் செய்ய வேண்டிய ஆசனம் இது. இந்த ஆசனத்தைச் செய்வதால், மலம் எளிதாக வெளியேறும்; தொப்பை குறையும். தொடை மற்றும் பின்முதுகின் கீழ்புறம் சரிவர இயங்கும்.

    உஷ்ட்ராசனம்

    உஷ்ட்ர என்றால் `ஒட்டகம் என்று பொருள். ஒட்டகத்தின் உடலமைப்பைப் பிரதிபலிக்கும் ஆசனம் இது. ரத்த ஓட்டம், முதுகு வலி, நரம்புப் பிரச்னை உள்ளவர்கள் நிரந்தரமாக நிவாரணம் பெற இந்த ஆசனம் உதவும். `உஷ்ட்ராசனம் உஷ்ட்ராசனம் செய்தால் மூச்சுக்குழாய் பிரச்னைகள் சரியாகும். கழுத்து, தோள், அடிவயிற்றுக் கோளாறுகள் விலகும். பின்பக்கத் தசைகள் உறுதிபெறும். ஆஸ்துமா நோயாளிகள் அவசியம் செய்ய வேண்டிய ஆசனம் இது.

    பர்வதாசனம்

    இந்த ஆசனம் செய்யும்போது பக்கவாட்டிலிருந்து பார்க்கும்போது மலையைப்போன்று உடலமைப்பு தோற்றமளிப்பதால் இதற்கு பர்வதாசனம் என பெயர். `பர்வதாசனம் செய்தால், தொடை மற்றும் கால்கள் உறுதியடையும். முதுகுத் தண்டுவடத்துக்கு சீரான ரத்த ஓட்டம் கிடைக்கும். மூளைக்குச் செல்லும் ரத்தஓட்டம் சீராகும்.

    பதாங்குஷ்டாசனம்

    இந்த ஆசனம் செய்வதால், உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள தசைகள் வலுப்படும். மேலும் அப்போது உடலை பேலன்ஸ் செய்வதில் முழு கவனம் செலுத்த வேண்டும். `பதாங்குஷ்டாசனம் செய்தால் முழு உடலின் இறுக்கம் தளரும். மனக்கிளர்ச்சி மற்றும் ரத்தஅழுத்தம் கட்டுப்படும். கவனச்சிதறல் இல்லாமல் பணிபுரிய உதவும்.

    அர்த்த கபோடாசனம்

    இந்த ஆசனம் செய்யும்போது புறாவைப் போன்ற தோற்றம் இருக்கும். இந்த ஆசனத்தைச் செய்வதால் அந்தரங்க உறுப்புகள் வலுவடையும். அடிவயிறு, தொடை, முதுகுப் பகுதி தசைகள் இளகும்.

    • இந்த ஆசனம் செய்தால் வயிற்றில் தேவையற்ற சதை குறைகிறது.
    • அதிக முதுகு வலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்கலாம்.

    'அர்த்த' என்றால் பாதி. 'நவ' என்றால் படகு. படகு போல, ஆனால், பாதி அளவுக்கு வளைந்திருப்பதால் இப்பெயர்.

    செய்முறை

    விரிப்பில் கால்களை நீட்டி நிமிர்ந்து உட்காருங்கள். உடம்புக்கு அருகிலேயே கை தரையில் ஊன்றி இருக்கட்டும். மெதுவாக, முட்டி மடங்காமல் இடது காலை சுமார் அரை அடிக்கு உயர்த்துங்கள். 1-5 எண்ணுங்கள். இடது காலை மெதுவாக கீழே இறக்கிவிட்டு, வலது காலை அதேபோல உயர்த்தி, 1-5 எண்ணுங்கள். மெதுவாக கீழே இறக்குங்கள். 2 முறை நன்கு மூச்சை இழுத்து விடுங்கள். இப்போது, இரு கால்களையும் முட்டி மடங்காமல் உயர்த்துங்கள். கைகள் நன்கு தரையில் பதிந்திருக்கட்டும். 1-5 எண்ணி, மெதுவாக கால்களை கீழே இறக்குங்கள். சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.

    இனி, ஆசனத்துக்கு செல்வோம். கால் நீட்டி நிமிர்ந்து உட்காருங்கள். கால்கள் சேர்ந்திருக்கட்டும். முட்டி மடங்காமல் இரு கால்களையும் சற்று உயர்த்தவும். லேசாக பின்பக்கம் சாய்ந்து, இரு கைகளையும் உயர்த்தவும். கால் கட்டை விரல்கள் நம் கண்ணுக்கு நேராக இருக்கட்டும். கைகள், கால் விரல்களை நோக்கி இருக்கட்டும். 1-10 எண்ணவும். மெதுவாக கை, கால்களை கீழே இறக்கவும். நிதானமாக மூச்சை இழுத்து விடவும்.

    இந்த ஆசனத்தால் முதுகுத் தண்டு வலுவடைகிறது. கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை இயக்கம் சீராகிறது. வயிற்றில் தேவையற்ற சதை குறைகிறது. அதிக முதுகு வலி உள்ளவர்கள் தவிர்க்கலாம்.

    • கண் பார்வையைக் கூர்மையாக்குகிறது
    • இருதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

    ஆசனங்களின் அரசன் எனச் சொல்லப்படும் ஆசனம் சிரசாசனம். என்றும் இளமையான தோற்றத்தையும், சோம்பலை போக்கியும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் தரும் ஆற்றல் மிக்க ஆசனம்.

    மூளையைச் செம்மைப்படுத்தி, அறிவாற்றலை அதிகரித்து, உடலுக்கும், முகத்திற்கும் தெளிவையும் வலுவையும், வசிகரத்தையும் தரும் ஆசனமாகும். மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளை நலனைப் பாதுகாத்தல், சஹஸ்ராரம், குரு மற்றும் ஆக்ஞா சக்கரங்களைத் தூண்டுவதன் மூலம் மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் நரம்பு மண்டலத்தை பலப்படுத்துதல் ஆகியவை சிரசாசனத்தின் முக்கிய பலன்களில் சில.

    பெரும்பாலான யோகப்பயிற்சியாளர்களுக்கு சிரசாசனம் பயில்வதன் மூலமே ஆசனப் பயிற்சி முழுமையடைகிறது.

    மேலும் சில பலன்கள் :

    மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

    முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது

    முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது

    நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது

    நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்துகிறது

    ஹார்மோன்களின் இயக்கத்தை மேம்படுத்துகிறது

    தோள்களையும் கரங்களையும் பலப்படுத்துகிறது

    நுரையீரல் நலனைப் பாதுகாக்கிறது; ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளை சரி செய்கிறது

    ஆழ்ந்து சுவாசிக்க உதவுகிறது

    இருதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

    வயிற்றுத் தசைகளை உறுதியாக்குகிறது

    வயிற்று உள்ளுறுப்புகளின் இயக்கத்தை செம்மையாக்குகிறது

    சீரணத்தைப் பலப்படுத்துகிறது

    இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது

    மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது

    மறு உற்பத்தி உறுப்புகளின் இயக்கத்தை சீர் செய்கிறது

    உடல் முழுமைக்கும் ஆற்றல் அளிக்கிறது

    ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலிகளைப் போக்குகிறது

    தூக்கமின்மையைப் போக்குகிறது

    கண் பார்வையைக் கூர்மையாக்குகிறது

    கால்களை பலப்படுத்துகிறது; கால் வீக்கத்தைப் போக்குகிறது

    வெரிகோஸ் வெயின் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது

    கூந்தல் நலனைப் பாதுகாக்கிறது; நரைமுடி தோன்றுவதை ஒத்திப் போடுகிறது

    கவனத்தைக் கூர்மையாக்குகிறது

    நினைவாற்றலை மேம்படுத்துகிறது

    மன அழுத்தத்தைப் போக்குகிறது

    செய்முறை

    தவழும் நிலைக்கு வரவும். உங்கள் உள்ளங்கைகள் தோள்களுக்கு நேர் கீழாகவும், கால் முட்டி இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்க வேண்டும்.

    கைகளை மடித்து முன்கைகளைத் தரையில் வைக்கவும்.

    இரண்டு கைவிரல்களையும் பிணைத்து உள்ளங்கைகள் உங்களை நோக்கி இருக்குமாறு வைக்கவும்.உச்சந்தலையை இரண்டு உள்ளங்கைகளுக்கு இடையில் தரையில் வைக்கவும். இப்போது உங்கள் உள்ளங்கைகள் உங்கள் தலையின் பின்புறம் அணைத்தாற்போல் இருக்கும்.

    மூச்சை உள்ளிழுத்தவாறு கால் முட்டிகளைத் தரையிலிருந்து உயர்த்தவும்.

    மூச்சை வெளியேற்றியவாறு பாதங்களை உங்கள் கை முட்டி நோக்கிக் கொண்டு வரவும். இப்போது உங்கள் உடல் ஆங்கில எழுத்து 'V'-யைத் திருப்பிப் போட்டது போல் இருக்கும்.

    மெதுவாக மேலும் கால்களை கை நோக்கி, உங்கள் முதுகு நேராகும் வண்ணம் கொண்டு வரவும்.

    இப்போது தலையின் மீது உடல் எடையைப் போடாமல் உங்கள் முன்கைகள் பெரும்பாலும் உடல் எடையைத் தாங்குமாறு இருக்கவும்.

    மெதுவாக வலது காலைத் தரையிலிருந்து மடித்து இடுப்பு உயரத்திற்கு கொண்டு வரவும். பின் இடது காலையும் மடித்து வலது கால் அருகே கொண்டு வரவும். பின் இரண்டு கால்களையும் மேல் நோக்கி நேராக உயர்த்தவும்.

    துவக்கத்தில் சில வினாடிகள் இந்நிலையில் இருந்தால் போதுமானது. நாளடைவில் பயிலும் நேரத்தை அதிகரித்து சுமார் மூன்று முதல் 5 நிமிடங்கள் வரை சிரசாசனத்தில் இருக்கலாம்.

    ஆசன நிலையிலிருந்து வெளிவர மெதுவாக வலது காலை மடித்து இடுப்பு உயரத்திற்கு கொண்டு வந்து பின் இடது காலை வலது கால் அருகே கொண்டு வரவும். பின் வலது காலைத் தரையில் வைக்கவும்.

    பின் இடது காலை வலது கால் அருகே வைக்கவும்.

    மெதுவாக இடுப்பைக் கீழிறக்கி பாலாசனத்தில் சில வினாடிகள் ஓய்வெடுக்கவும்.

    குறிப்பு

    ஆரம்ப நிலைப் பயிற்சியாளர்களும் அதிக உடல் எடை உடையவர்களும் கண்டிப்பாக சிரசாசனத்தைத் தவிர்க்கவும்.

    தீவிர கழுத்துப் பிரச்சினை, முதுகுத்தண்டு கோளாறு, இடுப்புப் பிரச்சினை, மூட்டுப் பிரச்சினை, அதிக இரத்த அழுத்தம், இருதய கோளாறு, கண் அழுத்த நோய், குடலிறக்கம், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் சிரசாசனம் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

    ×