search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகா பயிற்சி"

    • இளைஞர் வல்லமையும் என்ற பண்பாட்டுக் கல்வி ஒரு வருட கல்வியாக அளிக்கப்பட்டது.
    • பள்ளியின் நிறுவனர் டாக்டர் ஜி.மோகன் தலைமை தாங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் நெருப்பெரிச்சல் திருமுருகன் மெட்ரிக் பள்ளியில்வேதாத்திரி மகரிஷியின் யோகமும் இளைஞர் வல்லமையும் என்ற பண்பாட்டுக் கல்வி ஒரு வருட கல்வியாக அளிக்கப்பட்டது. இதில் 416 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் மாணவர்களின் அனுபவ உரை செயல்பாட்டு அறிக்கை சிறப்பாக செய்த மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் பள்ளியின் நிறுவனர் டாக்டர் ஜி .மோகன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் சுதா மோகன் வரவேற்று பேசினார். வாவிபாளையம் அறக்கட்டளை நிர்வாகிகள் பொருளாளர் அசோக்குமார் மற்றும் யோகமும் இளைஞர் வல்லமையும் தலைவர் சுந்தரமுத்து ஆகியோர் பயிற்சி முடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் யோகா ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மனவளக்கலை மன்றத்தின் சார்பில் பிரம்ம ஞான யோகா பயிற்சி நடைபெற்றது.
    • மனதை ஒருநிலைப்படுத்துதல் உடல்நிலையில் நோய் நொடியின்றி வாழவும் யோகாவானது உதவுகிறது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தம்மணம்பட்டி கிராமத்தில் சிவன் கோவில் மடத்தில் பாரதிபுரம் வாழ்க வளமுடன் மனவளக்கலை மன்றத்தின் சார்பில் பிரம்ம ஞான யோகா பயிற்சி நடைபெற்றது.

    இந்த பயிற்சியின் மூலம் மன அமைதி மனதை ஒருநிலைப்படுத்துதல் உடல்நிலையில் நோய் நொடியின்றி வாழவும் யோகாவானது உதவுகிறது. தம்மணம்பட்டி கிராமத்தில் வசித்து தற்போது சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் சிங்கப்பூர் ராமசாமி என்பவர் இந்த கிராமத்தில் வாழ்க வளமுடன் மனவளக்கலை யோகா பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்று சொல்லி தன்னுடைய சொந்த பணத்தை ரூபாய் 3 லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கி உள்ளார்.

    ஆகையால் இந்த கிராமத்தில் யோகா பயிற்சி மையமானது அமைக்கப்பட்டு கிராம மக்கள் அமைதியுடன் நோய்நொடி இல்லாமல் வாழ வேண்டும் என இந்த நிதியை அளித்துள்ளார். மேலும் இந்த யோக பயிற்சியில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தியானம் செய்தனர். அதனை தொடர்ந்து யோகா பயிற்சியை பாரதிபுரம் வாழ்க வளமுடன் தலைவர் மாதலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது.

    பேராசிரியர் அய்யாதுரை, பூங்கொடி, சுமதி, சிவலிங்கம், சாந்தா, ராணி, மல்லிகா, செந்தில்குமார் ஆகியோர் யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 100 பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்களுக்கு இன்று பிரமாண்ட யோகா பயிற்சி சிற்பி திட்டத்தின்கீழ் நடத்தப்பட்டது.
    • சிற்பி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் பல்வேறு பள்ளிகளில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தனர்.

    சென்னை:

    சென்னையில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் 'சிற்பி' என்கிற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.

    சென்னை காவல்துறையின் சிறப்பு திட்டமான இந்த திட்டத்தின் கீழ் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை தேர்வு செய்து அவர்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    இது தொடர்பாக மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 100 பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்களுக்கு இன்று பிரமாண்ட யோகா பயிற்சி சிற்பி திட்டத்தின்கீழ் நடத்தப்பட்டது. இதற்காக சிற்பி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் பல்வேறு பள்ளிகளில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தனர். மைதானத்தில் அவர்கள் யோகா செய்வதற்கு வசதியாக தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் யோகா பயிற்சியை தொடங்கி வைத்தனர்.

    யோகாவில் நன்கு நிபுணத்துவம் பெற்ற யோகா பயிற்சியாளர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    சென்னை காவல்துறையால் கடந்த 5 மாதங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த சிற்பி திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பில் இருந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை மாநகரில் சிறார் குற்றங்களை தடுக்கும் வகையிலேயே சிற்பி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் மாணவர்களை நல்வழிப்படுத்தி சமுதாயத்தில் நல்ல நிலைக்கு கொண்டுவர போலீசார் முயற்சித்து வருகிறார்கள்.

    இதன்படி மாணவர்கள் என்.எஸ்.எஸ். படை பிரிவிலும் சேர்த்து விடப்படுகிறார்கள். சுற்றுலா தலங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லுதல் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருதல் போன்ற பணிகளும் இத்திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார் ஹேமஸ்ரீ
    • சாதனை படைத்த மாணவி ஹேமஸ்ரீயை கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அருகே நாகராஜகண்டிகை கிராமத்தை சேர்ந்த பிரபு - வினோதினி தம்பதியரின் மகள் பி.ஹேமஸ்ரீ (வயது 7). அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.

    கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பள்ளியில், மூன்று ஆண்டுகளாக யோகாசன பயிற்சி பெற்று வரும் ஹேமஸ்ரீ, பூர்ண கபோடாசனம் எனும் ஆசனத்தில், ஒரு நிமிடத்தில் 78 முறை கழுத்துடன் இரு கால்களை இணைத்து புதிய உலக சாதனை படைத்தார்.

    இவரது சாதனை, ‛வேல்ட்வைட் புக் ஆப் ரெக்கார்ட்', ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்', ‛அசிஸ்ட் உலக சாதனை', ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது. சாதனை படைத்த மாணவி ஹேமஸ்ரீ, யோகா பயிற்சியாளர் சந்தியா ஆகியோரை, நாகராஜகண்டிகை கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    • மதுரை மாநகராட்சி எக்கோ பார்க்கில் உள்ள யோகா பயிற்சி மையம் சூறையாக்கப்பட்டது.
    • தினமும் 100-க்கும் மேற்பட்டோர் இலவசமாக யோகா பயிற்சி பெற்று வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பா.ஜனதா பொருளாதார பிரிவு தலைவர் முத்துக்குமார் தலைமையில் வக்கீல்கள் மனோகரன், அமிர்தராஜ், அர்ச்சனாதேவி, காயத்ரி, சமூக ஆர்வலர் அனுஅப்சரா ஆகியோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

    அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பிரதமரின் வேண்டு கோளுக்கு இணங்க மதுரை மாநகராட்சி எக்கோ பார்க்கில் "யோகா பயிற்சி மையம்" அமைக்கப்பட்டது. தினமும் 100-க்கும் மேற்பட்டோர் இலவசமாக யோகா பயிற்சி பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே சமூக விரோதிகள் யோகா பயிற்சி மையத்திற்குள் அத்துமீறி புகுந்து சூறையாடி விட்டு தப்பி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், இது குறித்த நடவடிக்கைக்காக மாநகர போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    • மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், சிறு சிறு குழப் பயிற்சியும், வீர தீர தற்காப்புக்கலைப் பயிற்சியும், வாழ்விக்கும் யோகப்பயிற்சியும் நடந்தது.
    • தடகள போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற வயோலா அணியைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவன் மிதுன் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தாமரை பன்னாட்டுப்பள்ளியில் 13- வது தொடக்கநிலை வகுப்பிற்கான விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளித் தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் நிர்மலா வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், தொடக்கநிலை முதல்வர் ஏஞ்சலின் வில்லியம்ஸ், கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளியின் முதல்வர் விஜயா ஸ்ரீதர், இடைநிலை ஒருங்கிணைப்பாளர் சர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி கலந்து கொண்டு விளையாட்டு விழாவைத் தொடங்கி வைத்தார். மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், சிறு சிறு குழப் பயிற்சியும், வீர தீர தற்காப்புக்கலைப் பயிற்சியும், வாழ்விக்கும் யோகப்பயிற்சியும் நால்வண்ண மாணவர்களின் வண்ணமயமான அணிவகுப்பு மரியாதையினையும் சிறப்பு விருந்தினர் ஏற்றுக்கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

    தடகளப் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற வயோலா அணியைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவன் மிதுன் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார். டியூலிப் அணியைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவன் சக்திபாலா இரண்டாம் இடத்தைப் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவர்களை அனைவரும் பாராட்டினர்.

    • நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பல விதமான யோகப்பயிற்சிகள் வேதாந்திரி மகரிஷி யோகா குழுவினரால் பயிற்றுவிக்கப்பட்டது.
    • மனதை அடக்கப் பழகிக் கொள்வதன் மூலம் மாணவர்கள் தங்களது குறிக்கோள்களையும் லட்சியங்களையும் எளிதில் அடையலாம் என்று கூறினார்.

    உடன்குடி:

    உடன்குடி தேரியூர் ஸ்ரீராம கிருஷ்ண சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேசயோகா தினத்தை முன்னிட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காலன் குடியிருப்பு அரசு மருத்துவமனை ஆகியன இணைந்து நடத்திய சித்த மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

    பள்ளி தலைமை ஆசிரியர் லிங்கேஸ்வரன் தலைமை தாங்கி பதினெண்சித்தர் திருவுருவச் சிலைகளுக்கு குத்துவிளக்கு ஏற்றி விழா வினை தொடங்கி வைத்தார்.

    இதில் சித்தர்களின் வரலாறு பற்றியும், பெருமை பற்றியும் பாரம்பரிய உணவு பற்றியும் விரிவாக பேசப்பட்டது. சாத்தான்குளம் அரசு சித்த மருத்துவர் வைகுண்ரமணி பேசியதாவது:-

    யோகா கலை காயகற்ப மருந்துகளில் ஒன்று. காயகல்ப மருந்து என்பது உடம்பை கல்போல் ஆக்கி நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு நீக்கி மனிதனை வாழச் செய்யும்ஓர்அற்புத மருந்து.மனதை ஒரு நிலைப்படுத்தி, அமைதிப்படுத்தி உடலுக்கும் மனதுக்கும் ஒரு புத்துணர்வைத் தருகிறது. இன்றைய மாணவர்களுக்கு யோகா சனத்தின் தேவை காலத்தின் கட்டாயமாகும்.பயம், பதட்டம், மன உளைச்சல், மன அழுத்தத்தினால் மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் உருவாகிறது அல்லது அவர்களின் மனதிலே வன்முறை எண்ணங்கள் எழுகின்றது.

    யோகாசனம் மாணவர்களிடம் ஏற்படும் வன்முறை உணர்வுகளைப் போக்கி, தற்கொலை எண்ணங்கள் அவர்களிடம் எழாதவாறு அவர்களின் மனதை அமைதிப்படுத்தி, தூய்மைப்படுத்தி தன்னம்பிக்கை உணர்வை ஏற்படுத்தி நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கு கிறது. மாணவர்களின் நினைவாற்றல், ஞாபகசக்தி, புத்திக்கூர்மை அதிகரிக்க திருமூலர் அட்டாங்க யோகத்தில் கூறிய பிராணயாம மூச்சுப் பயிற்சி மாணவர்கள் தினந்தோறும் செய்ய வேண்டும். மூச்சை அடக்க பழகுவதன் மூலம் மனதையும் அடக்கலாம்.மனதை அடக்கப் பழகிக் கொள்வதன் மூலம் மாணவர்கள் தங்களது குறிக்கோள்களையும் லட்சியங்களையும் எளிதில் அடையலாம் என்று கூறினார்.

    நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பல விதமான யோகப்பயிற்சிகள் வேதாந்திரி மகரிஷி யோகா குழுவினரால் பயிற்றுவிக்கப்பட்டது. மேலும் முகாமில் மூலிகைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்மூலிகைக் கண்காட்சி, பாரம்பரிய உணவு முறைகள், சிறுவர்களின் புரதச் சத்துக் குறைபாட்டைப் போக்கும் பஞ்சமுட்டி கஞ்சி, நவதானியங்கள், அஞ்சறைப்பெட்டி வைத்தியம், உணவில் திரிதோட சமனப் பொருட்கள், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மூலிகைகள், உணவுப் பொருட்கள், ரத்தசோகை நோயை போக்கும் உணவுகள், மருந்துகள், எண்ணெய் தேய்த்துக் குளித்தலினால் ஏற்படும் பயன்கள், நலுங்கு மாவு குளியல் பொடி சித்தர்களின் நாள், கால ஒழுக்கம் போன்ற சித்த மருத்துவ விழிப்புணர்வுப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

    மாணவர்களுக்கு கடலை மிட்டாய், எள்ளுருண்டை, பேரிச்சம் பழம் மற்றும் நில வேம்பு குடிநீர், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி க்கான ஏற்பாட்டினை காலன் குடியிருப்பு அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மருந்தாளுநர் முருகேசன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் மெஞ்ஞானபுரம் சித்தா மருந்தாளுனர் ஆறுமுகம், ஐ.சி.டி.சி. கவுன்சிலர் சங்கர், பார்த்திபன், பள்ளி ஆசிரியர்கள் ராஜ திலகவதி, ராமலிங்கம், சிவசுப்பிரமணியன், அஜய் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் அய்யங்கண்ணு, அஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மதுரை ஜெயிலில் கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
    • குற்ற சம்பவங்களில் இருந்து விலகி, நல்வாழ்க்கை நடத்த வழிவகை செய்யும் என்று ஜெயில் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    மதுரை

    சர்வதேச யோகாதினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. மதுரை மத்திய ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் வழங்குவது என்று சிறை நிர்வாகம் முடிவு செய்தது.

    மதுரை மத்திய சிறையில் 680 தண்டனை கைதிகள், 842 விசாரணை கைதிகள், 166 நீதிமன்ற விசாரணை கைதிகள், 299 தடுப்புக்காவல் கைதிகள் உள்பட மொத்தம் 1987 சிறைவாசிகள் உள்ளனர்.

    இவர்களுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி நேற்று தொடங்கியது.

    நிகழ்ச்சியில் மதுரை மத்திய சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு வசந்த கண்ணன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை மத்திய ஜெயில் கைதிகளுக்கு யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவர்கள் ஜெயிலில் இருந்து ஆனபிறகு குற்ற சம்பவங்களில் இருந்து விலகி, நல்வாழ்க்கை நடத்த வழிவகை செய்யும்" என்று ஜெயில் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • கம்பம் பள்ளியில் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
    • இதில் பல்வேறு வகையான ஆசனங்கள் செய்து ஆசிரியர்கள் பயனடைந்தனர்

    கம்பம் :

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால், உடல் ரீதியாகவும், மனரீதியா கவும் சோர்வடைந்ததை போக்கவும், ஆசிரியர்கள் சுறுசுறுப்புடன் இருக்கும் வகையிலும்,உலக யோகா தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இருபால் ஆசிரியர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி வழங்கப்ப ட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் காந்தவாசன் தலைமை தாங்கினார்.

    செயலாளர் சுகன்யா காந்தவாசன் முன்னிலை வகித்தார். யோகா பயிற்சியாளர்கள் ராஜேந்திரன், ரவிராம் யோகா பயிற்சியினை வழங்கினர்.இதில் அர்த்தசக்கராசனம், அர்த்த காதி சக்கராசனம், திரிகோணாசனம், உட்கட்டாசனம், உஷட்ராசனம் உள்ளிட்ட ஆசனங்கள் பயிற்சி அளிக்கப்பட்டன. பள்ளி முதல்வர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.

    • பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • பள்ளி மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டுயோகா கொண்டாட்டம் பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமையில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் வாலண்டினா

    லெஸ்லி முன்னிலை வகித்தார் தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

    • சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனர்.
    • மூச்சு பயிற்சி, நாடிசுத்தி, சூரிய நமஸ்காரம், சர்வங்காசனம், சிரசாசனம், புஜங்காசனம், தனுராசனம், சலபாசனம், பிரணாயாமம், தியானம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனம் பயிற்றுவிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ் கண்ணா தலைமையில் யோகா மாஸ்டர் நிமல் முன்னிலையில் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் இன்று யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனர். முதலில் மூச்சு பயிற்சி, நாடிசுத்தி, சூரிய நமஸ்காரம், சர்வங்காசனம், சிரசாசனம், புஜங்காசனம், தனுராசனம், சலபாசனம், பிரணாயாமம், தியானம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனம் பயிற்றுவிக்கப்பட்டது.

    • வேடசந்தூரில் நீதிபதிகள், கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
    • இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வேடசந்தூர் :

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அரசு ஆஸ்பத்திரியில் யோகா பயிற்சி நடைபெற்றது.

    யோகா பயிற்சியாளர் கமலக்கண்ணன் தலைமையில், சார்பு நீதிபதி சரவணகுமார், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி வாஞ்சிநாதன், கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி சசிகலா, வேடசந்தூர் வக்கீல்கள் சங்க செயலாளர் தங்கவேல் முனியப்பன், செல்வகுமார், மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×