கம்பத்தில் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி

கம்பம் பள்ளியில் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.இதில் பல்வேறு வகையான ஆசனங்கள் செய்து ஆசிரியர்கள் பயனடைந்தனர்
ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது
ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது
Published on

கம்பம் :

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால், உடல் ரீதியாகவும், மனரீதியா கவும் சோர்வடைந்ததை போக்கவும், ஆசிரியர்கள் சுறுசுறுப்புடன் இருக்கும் வகையிலும்,உலக யோகா தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இருபால் ஆசிரியர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி வழங்கப்ப ட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் காந்தவாசன் தலைமை தாங்கினார்.

செயலாளர் சுகன்யா காந்தவாசன் முன்னிலை வகித்தார். யோகா பயிற்சியாளர்கள் ராஜேந்திரன், ரவிராம் யோகா பயிற்சியினை வழங்கினர்.இதில் அர்த்தசக்கராசனம், அர்த்த காதி சக்கராசனம், திரிகோணாசனம், உட்கட்டாசனம், உஷட்ராசனம் உள்ளிட்ட ஆசனங்கள் பயிற்சி அளிக்கப்பட்டன. பள்ளி முதல்வர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com