search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயில் கைதி"

    • உணவு முறை மற்றும் உணவு அளவினை ஆண்டுக்கு ரூ.26 கோடி கூடுதல் செலவினத்தில் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இந்த புதிய உணவு திட்டத்தை புழல் சிறையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

    தமிழகத்தில் 9 மத்திய சிறை, 3 பெண்கள் தனிச்சிறை மற்றும் மாவட்ட சிறைகள், கிளை சிறைகள் என 138 சிறைகள் உள்ளன.

    சிறைகளில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறைகளில் உள்ள கைதிகள் இதுவரை ஏ பிரிவு கைதிகள், பி பிரிவு கைதிகள் என பிரிக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    கைதிகளுக்கு வாரத்தில் ஒரு நாள் சிக்கன் கறி வழங்கப்பட்டு வந்தது. முட்டையும், காய்கறி உணவுகளுடன், காலையில் பொங்கல், உப்புமா, கஞ்சி சட்னியும் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது சிறைவாசிகள் நலனுக்காக நிபுணர் குழுவினர் அறிக்கையின் படி உணவு முறை மற்றும் உணவு அளவினை ஆண்டுக்கு ரூ.26 கோடி கூடுதல் செலவினத்தில் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உணவுக்கு ஒரு நபருக்கு ரூ.96-ல் இருந்து ரூ.135 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது

    இதைத்தொடர்ந்து முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இந்த புதிய உணவு திட்டத்தை புழல் சிறையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

    இதில் சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின் படி றைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள்:-



    • திருவண்ணாமலையை சேர்ந்தவர்
    • திடீரென வலிப்பு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டார்

    வேலூர்:

    திருவண்ணாமலையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 47) சாராய விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நேற்று இரவு கிருஷ்ணனுக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு ஜெயில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கைதி திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மதுரை ஜெயிலில் கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
    • குற்ற சம்பவங்களில் இருந்து விலகி, நல்வாழ்க்கை நடத்த வழிவகை செய்யும் என்று ஜெயில் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    மதுரை

    சர்வதேச யோகாதினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. மதுரை மத்திய ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் வழங்குவது என்று சிறை நிர்வாகம் முடிவு செய்தது.

    மதுரை மத்திய சிறையில் 680 தண்டனை கைதிகள், 842 விசாரணை கைதிகள், 166 நீதிமன்ற விசாரணை கைதிகள், 299 தடுப்புக்காவல் கைதிகள் உள்பட மொத்தம் 1987 சிறைவாசிகள் உள்ளனர்.

    இவர்களுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி நேற்று தொடங்கியது.

    நிகழ்ச்சியில் மதுரை மத்திய சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு வசந்த கண்ணன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை மத்திய ஜெயில் கைதிகளுக்கு யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவர்கள் ஜெயிலில் இருந்து ஆனபிறகு குற்ற சம்பவங்களில் இருந்து விலகி, நல்வாழ்க்கை நடத்த வழிவகை செய்யும்" என்று ஜெயில் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    ×