என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Yoga camp"
- சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் விளையாட்டு அரங்கில் யோகாதினவிழா நடைபெற்றது.
- இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளும், 350-க்கும் மேற்பட்ட கோர்ட்டு ஊழியர்களும் கலந்து கொண்டனர்
திண்டுக்கல்:
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் யோகாசன சங்கம் சார்பில் விளையாட்டு அரங்கில் யோகாதினவிழா நடைபெற்றது.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜி.சுந்தர்ராஜன் இதனை தொடங்கி வைத்தார். துணை மேயர் ராஜப்பா, விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி, யோகாசனசங்க ஒருங்கிணை்பபாளர் ராஜகோபால், செயலாளர் நித்யாராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துக்கூறினர். இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விதவிதமான ஆசனங்களை செய்து காட்டினர்.
அவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதேபோல ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது.
உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நடந்த இந்த முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி லதா தலைமையில் நீதிபதிகள் மோகனா, சரவணன், ஜான்வினோ, விஜயகுமார், பாரதிராஜா மற்றும் நடுவர்கள், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் என 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பரபரப்பான பணிகளில் ஈடுபடும் கோர்ட்டு ஊழியர்கள் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டு மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
- வேடசந்தூரில் நீதிபதிகள், கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
- இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வேடசந்தூர் :
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அரசு ஆஸ்பத்திரியில் யோகா பயிற்சி நடைபெற்றது.
யோகா பயிற்சியாளர் கமலக்கண்ணன் தலைமையில், சார்பு நீதிபதி சரவணகுமார், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி வாஞ்சிநாதன், கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி சசிகலா, வேடசந்தூர் வக்கீல்கள் சங்க செயலாளர் தங்கவேல் முனியப்பன், செல்வகுமார், மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- இலவச யோகா முகாம் வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது.
- யோகா முகாமில் சிறப்பு விருந்தினராக அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கரன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
இலவச யோகா முகாம் வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது.
சர்வதேச யோகா தினத்தை யொட்டி ஹோலிஸ்டிக் வெல்னஸ் கேர் சென்டர், ஸ்வஸ்திக் அறக்கட்டளை மற்றும் சக்ஷம் புதுவை இணைந்து நடத்திய ஒரு வார இலவச யோகா முகாம் ஆத்திச்சூடி சிறப்பு பள்ளியில் நடைபெற்றது.
இந்த யோகா முகாமில் சிறப்பு விருந்தினராக அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கரன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் புதுவை சக்ஷம் தலைவர் மற்றும் சுவஸ்திக் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் சத்தியவண்ணன், துணைத்தலைவர் சதீஷ்குமார், செயலாளர் நடராஜன், துணை செயலாளர் இளங்கோ, பொருளாளர் திருமுருகன், ஹோலிஸ்டிக் வெல்னஸ் கேர் சென்டரின் இயக்குனர் டாக்டர் நவசக்தி, அரிச்சுவடி மனநல மையத்தின் இயக்குனர் டாக்டர் இளவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் யோகா பயிற்சியாளர் டாக்டர் நவசக்தி யோகா பயிற்சி அளித்தார். 50-க்கும் மேற்பட்ட பயனாளர்கள் பயிற்சி பெற்றனர். இந்த இலவச யோகா முகாமில் வருகிற 21-ந் தேதி வரை காலை 7 மணி முதல் 8 மணி வரை தினமும் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்