search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருகனின் சிறப்புகள்"

    • கையில் வில், அம்புடன் இருக்கும் முருகனை 'தனுக சுப்பிரமணியர் என்று அழைக்கின்றனர்.
    • குக்கே சுப்பிரமணியர் கோவிலில், முருகர் பாம்பு வடிவில் அருள்பாலிக்கிறார்.

    * மயிலாடுதுறை மாவட்டம் திருவிடைக்கழியில், முருகப்பெருமான் ஒரு கையில் வில்லுடனும், மறு கையில் வேலுடனும் காட்சி தருகிறார்.

    * சனி பகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்கும் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில், முருகப்பெருமான் கையில் மாம்பழத்துடன் காட்சி தருகிறார்.

    * ஈரோடு மாட்டம் சென்னிமலையில் இரண்டு திருமுகங்கள், எட்டு திருக்கரங்களுடன் கந்தன் காட்சி தருகிறார். இந்த கோவிலுக்கு மேல் காகங்கள் பறப்பதில்லை என்பது அதிசயமான ஒன்றாகும்.

    * வழக்கமாக அம்மனுக்குதான் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடித்திருக்கும். ஆனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முருகன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடித்திருக்கும் காட்சியை தரிசிக்கலாம்.

    * கும்பகோணம் வியாழ சோமேஸ்வரர் ஆலயத்தில், முருகப்பெருமான் தன்னுடைய காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி தருகிறார்.

    * திருவையாறு ஐயாறப்பர் சன்னிதி பிரகாரத்தில் கையில் வில், அம்புடன் இருக்கும் முருகப்பெருமானை 'தனுக சுப்பிரமணியர் என்று அழைக்கின்றனர்.

    * திருப்போரூரில் முத்துக்குமார சுவாமியாய் காட்சி தரும் முருகப்பெருமான், இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை மயில் மீது வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். இவர் தனது இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் ஏந்தியிருக்கிறார்.

    * நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி என்ற இடத்தில் முருகப்பெருமான், வேடன் வடிவில் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். சிக்கல் சிங்காரவேலவர் கோவிலைப்போலவே இந்த கோவிலில் உள்ள முருகன் சிலையிலும் வியர்வை துளிர்ப்பது அதிசய நிகழ்வாகும்.

    * மகாபலிபுரம் அருகே வளவன்தாங்கல் தலத்தில் உள்ள முருகன், கையில் தண்டம் ஏந்திய கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். அவர் கண்களில் நீர் வரும் காட்சி வியப்பான ஒன்றாகும்.

    * மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ளது. நெய்குப்பை என்ற ஊர். இங்குள்ள அம்மன் கையில் குழந்தையாக அமர்ந்தபடி முருகப்பெருமான் காட்சி தருகிறார்.

    * திருநனிப்பள்ளி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் முருகப்பெருமான் மூன்று கண்களுடனும், எட்டு திருக்கரங்களுடனும் காணப்படுகிறார்.

    * புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள ஒற்றைக் கண்ணனூர் திருத்தலத்தில் குருவின் தோற்றத்தில் முருகப்பெருமான அருள்கிறார். அவர் தனது ஒரு கையில் ஜெப மாலையும், மறு கையில் சின் முத்திரையும் தாங்கியிருக்கிறார்.

    * கர்நாடக மாநிலம் குக்கே சுப்பிரமணியர் கோவிலில், முருகப்பெருமான் பாம்பு வடிவில் அருள்பாலிக்கிறார்.

    * கனககிரி தலத்தில் முருகப்பெருமான் கையில் கிளியை ஏந்தி காட்சி தருகிறார்.

    * செம்பனார் கோவில் திருத்தலத்தில் அருளும் முருகப்பெருமான், தலையில் ஜடா மகுடம் தரித்து, இரண்டு கரங்களிலும் அக்கமாலை ஏந்தியபடி இருக்கிறார்.

    * கும்பகோணம் அருகில் உள்ள அழகாபுத்தூர் என்ற ஊரில் அருளும் முருகப்பெருமான், மகாவிஷ்ணுவைப் போல தன்னுடைய கையில் சங்கும், சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார்.

    * பூம்புகார் அருகே உள்ள திருச்சாய்க்காடு சாயாவ னேஸ்வரர் கோவிலில் பஞ்சலோகத்தால் ஆன முருகப்பெருமான் அருள்கிறார். இவர் தனது கையில் வில் மற்றும் அம்பு ஏந்தியுள்ளார்.

    * திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் ஜலகம் பாறை என்ற இடம் உள்ளது. இங்குள்ள முருகன் ஆலயத்தில், விக்கிரகம் கிடையாது. 7 அடி உயர வேல் வடிவத்தில் வேலவன் காட்சி தரும் வித்தியாசமான ஆலயம் இது.

    * பெரம்பலூர் அருகில் உள்ள செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் முருகன், மன்மதனைப் போல கரும்போடு காட்சி தருகிறார்.

    * நாகப்பட்டினம் மாவட்டம் விளத்தொட்டி என்ற இடத்தில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பாலமுருகனாக தொட்டிலில் தவழ்ந்து உறங்கும் கோலத்தில் முருகப்பெருமான் அருள்கிறார்.

    * திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் வில்வாரணி என்ற ஊரில் நட்சத்திரகிரி மலை இருக்கிறது. இங்கே சுயம்பு லிங்க வடிவில் நாகாபரணத்துடன் முருகப்பெருமான் காட்சி தருகிறார். சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒரே வடிவமாக அமர்ந்திருக்கும் கோலத்தை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.

    * சிவகங்கை மாவட்டம் திருமலையில் அமைந்துள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில், முருகப்பெருமான் சற்று சாய்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு எதிர் திசையில் இடப்புறம் ஆடும், வலப்புறம் மயிலும் உள்ளன.

    * ஈரோடு மாவட்டம் காங்கேயம்பாளையம் தலத்தில் உள்ள நட்டாற்றீஸ்வரர் ஆலயத்தில், பக்தர்களை நோக்கி அடியெடுத்து வைக்கும் கோலத்தில் முருகப் பெருமான் காட்சி தருகிறார்.

    • குமரனுக்கு `சிலம்பன்’ என்ற பெயரும் உண்டு.
    • சேவல் கொடிக்கு `குக்குடம்’ என்ற பெயர் உண்டு.

    * 'முருகா' என்று ஒருமுறை சொல்கிற பொழுது, மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் அருளும் கிடைக்கப்பெறும். 'மு' என்றால் 'முகுந்தன்' என்று அழைக்கப்படும் திருமாலைக் குறிக்கும். 'ரு' என்றால் 'ருத்ரன்' என்றழைக்கப்படும் சிவனைக் குறிக்கும். 'க' என்றால் கமலத்தில் அமர்ந்திருக்கும் கமலனான பிரம்மாவைக் குறிக்கும். மும்மூர்த்திகளுக்கும் உள்ள முதல் எழுத்துக்களை இணைத்தால் 'முருக' என்று வருவதால், முருகனைக் கும்பிட்டால் மும்மூர்த்திகளும் அருள்வார்கள் என்பது ஐதீகம்.

    * மலைகளில் குடிகொண்டுள்ள குமரனுக்கு `சிலம்பன்' என்ற பெயரும் உண்டு. அதே போல் முருகனுக்கு 'விசாகன்' என்ற பெயரும் வழங்கப்படுகிறது. 'விசாகன்' என்பதற்கு 'மயிலில் சஞ்சரிப்பவன்' என்பது பொருளாகும்.

    * முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், சேவல்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

    * முருகனின் சேவல் கொடிக்கு `குக்குடம்' என்ற பெயர் உண்டு. இந்த சேவலே, வைகறைப் பொழுதில் ஓம்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

    * கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரத்தை, தினமும் அதிகாலையில் படிப்பவர்களது பாவங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.

    * முருகப்பெருமானுக்கு உகந்த மலர்கள், முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும். முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும். முருகப்பெருமானை வணங்க சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகியவை உகந்த நாட்கள்.

    * முருகன் கங்கையால் தாங்கப்பட்டதனால், 'காங்கேயன்' என்றும், சரவணப் பொய்கையில் வாயு பகவானால் விடப்பட்டதால் 'சரவணபவன்' என்றும் அழைக்கப்படுகிறாா். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர் என்பதால் 'கார்த்திகேயன்' என்பர். பார்வதி தேவயால் ஆறு உருவமாக இருந்த முருகப்பெருமான் ஒரே உருவமாக மாற்றப்பட்டதால் 'கந்தன்' எனப்பட்டார்.

    * தமிழகத்தில் முருகனுக்கு குடவரைக் கோவில்கள் பல உள்ளன. அவற்றில், கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோவில், மாமல்லபுரம் போன்றவை முக்கியமானவை.

    * முருகப்பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர் திருக்கோவில் என்று சொல்லப்படுகிறது. முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டியுள்ளான். இந்தக் கோவிலில் முருகனுக்கு, யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகையில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

    * கந்தனுக்குரிய விரதங்கள்:- வார விரதம் எனப்படும் செவ்வாய்க்கிழமை விரதம், நட்சத்திர விரதம் எனப்படும் கிருத்திகை விரதம், திதி விரதம் எனப்படும் சஷ்டி விரதம். முருகனின் மூலமந்திரம் `ஓம் சரவணபவாய நமஹ' என்பதாகும்.

    * செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்து தூய்மையான உள்ளத்துடன், `ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டகம்' ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

    * முருகன் சிறிது காலம் நான்முகனுக்கு பதிலாக படைப்புத் தொழிலையும் செய்திருப்பதை புராணங்களின் வாயிலாக அறியலாம். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து 7 மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுடன் அருளும் முருகப்பெருமானை தரிசிக்க முடியும்.

    * முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்று. அவற்றில் சூரபத்மனை அழித்த இடம் திருச்செந்தூர். தாரகாசுரனை வதம் செய்த இடம், திருப்பரங்குன்றம். சிங்கமுகாசுரனை அழித்த இடம் திருப்போரூா்.

    ×