search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Highlights of Murugan Temple"

    • கையில் வில், அம்புடன் இருக்கும் முருகனை 'தனுக சுப்பிரமணியர் என்று அழைக்கின்றனர்.
    • குக்கே சுப்பிரமணியர் கோவிலில், முருகர் பாம்பு வடிவில் அருள்பாலிக்கிறார்.

    * மயிலாடுதுறை மாவட்டம் திருவிடைக்கழியில், முருகப்பெருமான் ஒரு கையில் வில்லுடனும், மறு கையில் வேலுடனும் காட்சி தருகிறார்.

    * சனி பகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்கும் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில், முருகப்பெருமான் கையில் மாம்பழத்துடன் காட்சி தருகிறார்.

    * ஈரோடு மாட்டம் சென்னிமலையில் இரண்டு திருமுகங்கள், எட்டு திருக்கரங்களுடன் கந்தன் காட்சி தருகிறார். இந்த கோவிலுக்கு மேல் காகங்கள் பறப்பதில்லை என்பது அதிசயமான ஒன்றாகும்.

    * வழக்கமாக அம்மனுக்குதான் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடித்திருக்கும். ஆனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முருகன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடித்திருக்கும் காட்சியை தரிசிக்கலாம்.

    * கும்பகோணம் வியாழ சோமேஸ்வரர் ஆலயத்தில், முருகப்பெருமான் தன்னுடைய காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி தருகிறார்.

    * திருவையாறு ஐயாறப்பர் சன்னிதி பிரகாரத்தில் கையில் வில், அம்புடன் இருக்கும் முருகப்பெருமானை 'தனுக சுப்பிரமணியர் என்று அழைக்கின்றனர்.

    * திருப்போரூரில் முத்துக்குமார சுவாமியாய் காட்சி தரும் முருகப்பெருமான், இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை மயில் மீது வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். இவர் தனது இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் ஏந்தியிருக்கிறார்.

    * நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி என்ற இடத்தில் முருகப்பெருமான், வேடன் வடிவில் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். சிக்கல் சிங்காரவேலவர் கோவிலைப்போலவே இந்த கோவிலில் உள்ள முருகன் சிலையிலும் வியர்வை துளிர்ப்பது அதிசய நிகழ்வாகும்.

    * மகாபலிபுரம் அருகே வளவன்தாங்கல் தலத்தில் உள்ள முருகன், கையில் தண்டம் ஏந்திய கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். அவர் கண்களில் நீர் வரும் காட்சி வியப்பான ஒன்றாகும்.

    * மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ளது. நெய்குப்பை என்ற ஊர். இங்குள்ள அம்மன் கையில் குழந்தையாக அமர்ந்தபடி முருகப்பெருமான் காட்சி தருகிறார்.

    * திருநனிப்பள்ளி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் முருகப்பெருமான் மூன்று கண்களுடனும், எட்டு திருக்கரங்களுடனும் காணப்படுகிறார்.

    * புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள ஒற்றைக் கண்ணனூர் திருத்தலத்தில் குருவின் தோற்றத்தில் முருகப்பெருமான அருள்கிறார். அவர் தனது ஒரு கையில் ஜெப மாலையும், மறு கையில் சின் முத்திரையும் தாங்கியிருக்கிறார்.

    * கர்நாடக மாநிலம் குக்கே சுப்பிரமணியர் கோவிலில், முருகப்பெருமான் பாம்பு வடிவில் அருள்பாலிக்கிறார்.

    * கனககிரி தலத்தில் முருகப்பெருமான் கையில் கிளியை ஏந்தி காட்சி தருகிறார்.

    * செம்பனார் கோவில் திருத்தலத்தில் அருளும் முருகப்பெருமான், தலையில் ஜடா மகுடம் தரித்து, இரண்டு கரங்களிலும் அக்கமாலை ஏந்தியபடி இருக்கிறார்.

    * கும்பகோணம் அருகில் உள்ள அழகாபுத்தூர் என்ற ஊரில் அருளும் முருகப்பெருமான், மகாவிஷ்ணுவைப் போல தன்னுடைய கையில் சங்கும், சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார்.

    * பூம்புகார் அருகே உள்ள திருச்சாய்க்காடு சாயாவ னேஸ்வரர் கோவிலில் பஞ்சலோகத்தால் ஆன முருகப்பெருமான் அருள்கிறார். இவர் தனது கையில் வில் மற்றும் அம்பு ஏந்தியுள்ளார்.

    * திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் ஜலகம் பாறை என்ற இடம் உள்ளது. இங்குள்ள முருகன் ஆலயத்தில், விக்கிரகம் கிடையாது. 7 அடி உயர வேல் வடிவத்தில் வேலவன் காட்சி தரும் வித்தியாசமான ஆலயம் இது.

    * பெரம்பலூர் அருகில் உள்ள செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் முருகன், மன்மதனைப் போல கரும்போடு காட்சி தருகிறார்.

    * நாகப்பட்டினம் மாவட்டம் விளத்தொட்டி என்ற இடத்தில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பாலமுருகனாக தொட்டிலில் தவழ்ந்து உறங்கும் கோலத்தில் முருகப்பெருமான் அருள்கிறார்.

    * திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் வில்வாரணி என்ற ஊரில் நட்சத்திரகிரி மலை இருக்கிறது. இங்கே சுயம்பு லிங்க வடிவில் நாகாபரணத்துடன் முருகப்பெருமான் காட்சி தருகிறார். சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒரே வடிவமாக அமர்ந்திருக்கும் கோலத்தை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.

    * சிவகங்கை மாவட்டம் திருமலையில் அமைந்துள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில், முருகப்பெருமான் சற்று சாய்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு எதிர் திசையில் இடப்புறம் ஆடும், வலப்புறம் மயிலும் உள்ளன.

    * ஈரோடு மாவட்டம் காங்கேயம்பாளையம் தலத்தில் உள்ள நட்டாற்றீஸ்வரர் ஆலயத்தில், பக்தர்களை நோக்கி அடியெடுத்து வைக்கும் கோலத்தில் முருகப் பெருமான் காட்சி தருகிறார்.

    ×