search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமது சமி"

    • சமியின் மனைவி தனக்கும், தனது மகளுக்கும் ஜீவனாம்சம் கோரி குடும்ப நல நீதிமனத்தில் வழக்கு தொடர்ந்தார்.
    • ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி இந்த ஜீவனாம்சம் தொகையை கொடுக்க வேண்டும்

    இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி முக்கிய பங்கு வகிக்கிறார். கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் முகமது சமியின் திருமண வாழ்க்கை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் பல அடுக்கடுக்கான புகார்களை கூறி வந்தார்.

    இந்த புகார்கள் அனைத்திற்கும் சமி மறுப்பு தெரிவித்து வந்தார். இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு முகமது சமி மற்றும் ஹாசின் ஜஹான் விவாகரத்து வழக்கு கொல்கத்தா குடும்ப நல நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஹசின் ஜஹான் தனது சொந்த செலவுக்கு ரூ.7 லட்சம் மற்றும் மகளின் பராமரிப்பிற்காக ரூ.3 லட்சம் என்று மொத்தமாக ரூ.10 லட்சம் வேண்டும் என்று கேட்டு இருந்தார்.

    கடந்த 2020 மற்றும் 2021-ம் நிதியாண்டிற்கான சமியின் வருமான வரி கணக்கின்படி, சமியின் ஆண்டு வருமானம் ரூ.7 கோடிக்கு அதிகமாக இருந்ததாகவும், இதன் காரணமாக ஜீவனாம்சமாக மகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.3 லட்சம் என்றும், ஹசின் ஜஹானின் செலவுக்கு ரூ.7 லட்சம் என்றும் மொத்தமாக ரூ.10 லட்சம் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம் என்று ஹசின் ஜஹானின் வழக்கறிஞர் குடும்ப நல நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    இதையடுத்து, கொல்கத்தா நீத்மன்றம் ஹசின் ஜஹான் மற்றும் அவரது மகளின் பராமரிப்பு செலவுக்கு என்று ரூ.1.30 லட்சம் வழங்க உத்தரவிட்டது. அதில், ஜஹானின் தனிப்பட்ட செலவிற்கு என்று ரூ.50 ஆயிரமும், மீதமுள்ள ரூ.80 ஆயிரம் அவரது மகளின் பராமரிப்பு செலவுக்கு என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இது குறித்து, சமியின் வழக்கறிஞர் சலீம் ரஹ்மான் கூறியிருப்பதாவது: சமியின் மனைவி தனக்கும், தனது மகளுக்கும் ஜீவனாம்சம் கோரி குடும்ப நல நீதிமனத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    ஆனால், சமியோ கடந்த 2018-ம் ஆண்டு முதல் தனது மகளுக்காக மாதந்தோறும் ரூ.80 ஆயிரம் கொடுத்து வருகிறார். ஹசின் ஜஹான் தனது சொந்த செலவுக்கு என்று ரூ.7 லட்சம் வேண்டும் என்றும், மகளுக்கு ரூ.3 லட்சம் வேண்டும் என்று கேட்டு இருந்தார். தற்போது நீமன்றம் ஹசின் ஜஹானுக்கான சொந்த செலவுக்கு ரூ.50 ஆயிரமும், மகளின் பராமரிப்பு செலவுக்கு என்றும் ரூ.80 ஆயிரமும் கொடுக்க உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி இந்த ஜீவனாம்சம் தொகையை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வங்கதேசக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக முகமது சமி விலகி உள்ளார்.
    • இந்திய அணி கடைசியாக 2015 ஆண்டு அந்த நாட்டில் ஆடிய போது 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது.

    மிர்பூர்:

    இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இந்தியா -வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    நியூசிலாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா , முன்னாள் கேப்டன் விராட் கோலி , லோகேஷ் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இஷான் கிஷன், முகமது சிராஜ், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி , குல்தீப் சென் உள்ளிட்டோரும் இந்த தொடரில் ஆடுகிறார்கள்.

    நியூசிலாந்து தொடரில் ஆடிய சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், சாஹல் உள்ளிட்டோர் வங்காளதேச தொடரில் இடம் பெறவில்லை. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏனென்றால் வங்காளதேச அணி அதன் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடக்கூடியது. இந்திய அணி கடைசியாக 2015 ஆண்டு அந்த நாட்டில் ஆடிய போது 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது. இதனால் இந்திய வீரர்கள் மிகவும் கவனத்துடனும் , திறமையுடனும் விளையாட வேண்டும்.

    இந்நிலையில், வேகப்பந்து வீரர் முகமது சமி இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். இந்நிலையில், காயம் அடைந்த முகமது சமிக்கு பதிலாக இந்திய வேகப்பந்து வீச்சு புயல் உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 4-ந்தேதி மிர்புரில் நடக்கிறது.
    • பயிற்சியின்போது ஷமி காயம் அடைந்ததால் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    மிர்பூர்:

    இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது.

    இந்தியா -வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. நியூசிலாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா , முன்னாள் கேப்டன் விராட் கோலி , லோகேஷ் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இஷான் கிஷன், முகமது சிராஜ், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி , குல்தீப் சென் உள்ளிட்டோரும் இந்த தொடரில் ஆடுகிறார்கள்.

    நியூசிலாந்து தொடரில் ஆடிய சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா , சஞ்சு சாம்சன் , சாஹல், உம்ரான் மாலிக் உள்ளிட்டோர் வங்காளதேச தொடரில் இடம் பெறவில்லை.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் வங்காளதேச அணி அதன் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடக்கூடியது.

    இந்திய அணி கடைசியாக 2015 ஆண்டு அந்த நாட்டில் ஆடிய போது 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது. இதனால் இந்திய வீரர்கள் மிகவும் கவனத்துடனும் , திறமையுடனும் விளையாட வேண்டும்.

    வேகப்பந்து வீரர் முகமது ஷமி இந்த தொடரில் இடம் பெற்று இருந்தார். அவர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். டெஸ்ட் தொடரிலும் அவர் ஆடுவது சந்தேகமே.

    வங்காளதேச அணியின் வழக்கமான கேப்டன் தமீம் இக்பாலும் காயம் காரணமாக இடம் பெறவில்லை. இதனால் லிட்டன் தாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 37-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 36 ஆட்டங்களில் இந்தியா 30-ல், வங்காளதேசம் 5-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு இல்லை.

    கடைசியாக 2019-ல் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் இரு அணிகளும் மோதின. இதில் இந்தியா 28 ரன்னில் வங்காளதேசத்தை தோற்கடித்து இருந்தது.

    இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரை 0-1 என்ற கணக்கில் இழந்தது. வங்காளதேசம் ஜிம்பாப்வேக்கு எதிராக 1-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • அனைத்து வெறுப்பையும் முடிவுக்குக் கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும்.
    • இதுபோன்ற செயல்களை நாமே செய்ய ஆரம்பித்தால், சாமானிய மக்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும்.

    பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்தர் வெளியிட்ட டுவீட்டை சமி கிண்டல் செய்து இருந்தார். கராச்சி, மெல்போர்ன் மைதானத்தில் நேற்று உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து 137 ரன்களே அடித்தது.

    பின்னர், 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தான் தோல்வியடைந்ததும், அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இதயம் உடைந்தது போன்ற எமோஜி படத்தை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.

    அதற்கு ரி-டுவீட் செய்திருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ''மன்னிக்கவும் சகோதரரே, இது தான் கர்மா'' எனப் பதில் அளித்திருந்தார். அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்த இருந்த அக்தர், பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும் தகுதி இந்தியாவுக்கு இல்லை என்று கூறி இருந்தார்.பாகிஸ்தான் இறுதி போட்டியில் வீழ்ந்ததால் அதனை கிண்டல் செய்யும் வகையில் முகமது ஷமி ஒரே வார்த்தையால் நீங்கள் செய்தது உங்களுக்கே வந்துவிட்டது என்ற பொருள்படும் வகையில் கூறி உள்ளார்.

    இந்த நிலையில் சமியின் இந்த பதில் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி, இந்நாள் மட்டும் முன்னாள் வீரர்கள் இதுபோன்ற கருத்துக்களால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களிடையே வெறுப்பை வளர்க்க வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், " நாம் கிரிக்கெட் வீரர்கள். இந்த விளையாட்டின் முன்மாதிரிகளாகவும், தூதர்களாகவும் இருக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அனைத்து வெறுப்பையும் முடிவுக்குக் கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும். மாறாக வெறுப்பை வளர்க்கும் செயல்களை நாம் செய்யக்கூடாது.

    இதுபோன்ற செயல்களை நாமே செய்ய ஆரம்பித்தால், சாமானிய மக்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும். விளையாட்டின் மூலம் தான் இந்தியா- பாகிஸ்தான் உறவுகள் மேம்படும். பாகிஸ்தான் அணி அவர்களுடன் விளையாடுவதை காண விரும்புகிறோம். அதே போல் இந்திய அணியும் பாகிஸ்தானில் விளையாடுவதைப் பார்க்க வேண்டும்" என்றார்.

    • இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட்டில் தோல்வியடைந்தது.
    • முதலில் பேட்டிங் செய்த அந்த அணியால் 137 ரன்களே அடிக்க முடிந்தது.

    மெல்போர்ன் மைதானத்தில் நேற்று உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து 137 ரன்களே அடித்தது. பின்னர், 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸின் (52 நாட்அவுட்) சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் தோல்வியடைந்ததும், அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இதயம் உடைந்தது போன்ற எமோஜி படத்தை வெளியிட்டிருந்தார்.

    அதற்கு ரி-டுவீட் செய்திருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ''இது கர்மா (It's call (sic) karma) என்று அழைக்கப்படும்'' எனப் பதில் அளித்திருந்தார்.

    இதுகுறித்து சற்றும் எதிர்பார்க்காத சோயிப் அக்தர் ''இதை நீங்கள் உணர்வுப்பூர்வமான ட்வீட் என அழைக்கிறீர்கள்'' என அக்தர் பதில் அளித்துள்ளார்.

    கிரிக்கெட் விமர்சகரான ஹர்சா போக்லே ''பாகிஸ்தான் அணிக்கு பாராட்டு. அவர்கள் செயல்பட்ட விதத்தில் சில அணிகள் 137 ரன்னுக்குள் எதிரணியை கட்டுப்படுத்தும். சிறந்த பந்து வீச்சு அணி'' என ட்வீட் செய்திருந்தார்.

    • நீண்ட காலமாக விளையாடாமல் இருந்து திடீரென்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வந்ததும் கம்பேக் கொடுப்பது கடினமாகும்.
    • பும்ராவுக்கு பதிலாக சிராஜை தேர்வு செய்யலாம் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16-ந் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது. இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக உலகின் நம்பர் ஒன் டி20 அணியான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்பட 16 அணிகள் களமிறங்குகின்றன.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயத்தால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக தீபர் சாஹர் அல்லது முகமது சமி இடம் பெறலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தீபக் சாஹர் காயம் காரணமாக விலகி உள்ளார். இதனால் முகமது சமி ஆடும் லெவனில் இடம் பெறுவதும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

    இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் பும்ராவுக்கு பதிலாக சமியை தேர்வு செய்வதற்கு மாற்றாக சிராஜை தேர்வு செய்யலாம் என்று சுனில் கவாஸ்கர் காரணத்துடன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் பும்ராவுக்கு பதிலாக சிராஜை தேர்வு செய்வேன். ஏனெனில் அவர் சிறப்பாக பந்து வீசுகிறார். சமி நீண்ட காலமாக விளையாடாமல் இருக்கிறார். அப்படிப்பட்ட அவர் ஒருசில பயிற்சி போட்டிகளில் மட்டும் விளையாடி விட்டு நேரடியாக உலக கோப்பையில் விளையாடுவது நிச்சயம் சரியான வழியல்ல.

    இருப்பினும் தற்சமயத்தில் 15ஆவது வீரராக யாரும் தேர்வு செய்யப்படாத நிலையில் சமி ஆஸ்திரேலியாவுக்கு செல்வாரா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் அவர் எந்த டி20 கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை என்பதே பிரச்சனையாகும்.

    அவரிடம் தரமும் திறமையும் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீண்ட காலமாக விளையாடாமல் இருந்து திடீரென்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வந்ததும் கம்பேக் கொடுப்பது கடினமாகும்.

    இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறினார்.

    • பும்ராவுக்கு மாற்றாக யார் இடம் பெறுவார் என்பதை ஆலோசித்து வருகிறோம்.
    • அவருடைய அறிக்கை கிடைத்தவுடன் எதை எவ்வாறு முன்னெடுத்து செல்வது பற்றி ஆலோசிப்போம்.

    இந்தூர்:

    20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந்தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றில் விளையாடும்.

    வெஸ்ட் இண்டீஸ், இலங்கை உள்பட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் 23-ந்தேதி பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவரான பும்ரா காயம் காரணமாக ஆடவில்லை. அவர் உலகக்கோப்பை போட்டியில் இருந்து விலகி உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பும்ரா இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாகும்.

    அவரது இடத்தில் மாற்று வீரர்களான முகமது ஷமி, தீபக் சாஹர் ஆகியோரில் ஒருவர் இடம் பெறலாம்.

    இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பையில் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி இடம் பெறுவாரா? என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் கேட்ட போது அவர் பதில் அளித்தார். இது தொடர்பாக டிராவிட் கூறியதாவது:-


    பும்ராவுக்கு மாற்றாக யார் இடம் பெறுவார் என்பதை ஆலோசித்து வருகிறோம். அக்டோபர் 15 வரை எங்களுக்கு நேரம் உள்ளது. முகமது ஷமி மாற்று வீரர்கள் பட்டியலில் உள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரில் அவர் ஆடவில்லை.

    அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகடாமியின் கண்காணிப்பில் இருக்கிறார். அவர் எப்படி குணமடைந்து வருகிறார் என்பதை அறிக்கை மூலம் தான் தெரியவரும். கொரோனா பாதிப்பு 15 நாட்களுக்கு பிறகு அறிக்கை கிடைக்கும்.

    நாங்கள் ஒரு அழைப்பை விடுப்போம். அவருடைய அறிக்கை கிடைத்தவுடன் எதை எவ்வாறு முன்னெடுத்து செல்வது பற்றி ஆலோசிப்போம்.

    இவ்வாறு ராகுல் டிராவிட் கூறினார். 

    ×