search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க.ஸ்டாலின் வருகை"

    • மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார்.

    திருமங்கலம்

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருமங்கலத்தில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அவை தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், சாமிநாதன், லதா அதியமான், நகரச் செயலாளர் ஸ்ரீதர், இளைஞரணி அமைப்பாளர் மதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாசபிரபு, நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், இளைஞரணி முத்துக்குமார், கவுன்சிலர்கள் திருக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழா மற்றும் கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் வளர்ச்சி திட்ட பணிகளை கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார்.

    அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது, விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்களை அனுப்புவது குறித்தும், நிர்வாகிகளிடம் ஆலோ சனை நடத்தினார்.

    விருதுநகர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கப்பலூர் சுங்கச்சாவடியில் வரவேற்பு அளிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

    கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசியதாவது:-

    தி.மு.க.விற்கு கொள்கை உண்டு. பா.ஜ.க.வுக்கு எந்த கொள்கையும் கிடையாது. நமது கட்சியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு எடுத்துக் கூறினாலே போதும், தொடர்ந்து 25 ஆண்டுகள் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தான் இருப்பார்.

    ஒவ்வொரு தொகுதிக்கும் 10 ஆயிரம் இளைஞர்கள் வீதம் 3 தொகுதிக்கு 30 ஆயிரம் உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்க்க வேண்டும். இதேபோல மகளிர் அணிகளும் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எந்த வேலையும் கிடையாது. அதனால் தான் அவர் தி.மு.க.வை விமர்சித்து வருகிறார். அவர் கூறுவதற்கு எல்லாம் பதில் கூற தேவையில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோவை ஈச்சனாரியில் நடக்கும் அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
    • அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பொள்ளாச்சி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் சுற்றுப்பயணமாக நாளை மறுநாள் (23-ந் தேதி) மாலை கோவைக்கு வருகிறார்.

    24-ந் தேதி காலை கோவை ஈச்சனாரி பகுதியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    அதனை தொடர்ந்து பொள்ளாச்சியில் ஒருங்கிணைந்த ேகாவை மாவட்ட தி.மு.க. சார்பில் மாற்றுகட்சியினர் 50 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார்.

    இந்த விழாவுக்காக கோவை-பொள்ளாச்சி சாலையில் ஆச்சிப்பட்டி பகுதியில் சுமார் 44 ஏக்கரில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அமர இருக்கைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான இருக்கைகளும் போடும் பணி வேகமாக நடந்து வருகிறது. ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அத்தியாவசிய அடிப்படை தேவைகளும் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகளிடம் விழா ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ஆலோசனைகளையும் வழங்கினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 23-ந் தேதி இரவு கோவை வருகிறார். 24-ந் தேதி ஈச்சனாரியில் 1 லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டக்கூடிய அரசு விழாவும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மாலையில் நடைபெறும் விழாவில் மாற்று கட்சியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின் போது கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராம கிருஷ்ணன், பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீ தகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • முன்னேற்பாடுகள் தீவிரம்
    • அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் 8 மற்றும் 9 தேதியில் வருகை தருவதை ஒட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்து ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் வருகின்ற 8 மற்றும் 9-ந் தேதிகளில் முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தர உள்ளார். அன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் கருணாநிதி சிலை திறப்பு விழாகளில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது திருவண்ணாமலையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ள இடம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ள இடங்களை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

    அப்போது கலெக்டர் முருகேஷ் வேலூர் வடக்கு மண்டல டி.ஐ.ஜி. ஆனி விஜயா,துணை சபாநாயகர் பிச்சாண்டி அண்ணாதுரை எம்பி, திமுக மருத்துவமனை மாநில துணைத்தலைவர் கம்பன் திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஈச்சனாரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், பொள்ளாச்சி பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார்
    • கோவையில் நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் பொள்ளாச்சி செல்கிறார்.

    பொள்ளாச்சி:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 14-ந் தேதி மாலை கோவை வருகிறார்.அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க.வினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதல்-அமைச்சர் இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் மறுநாள் 15-ந் தேதி காலை மலுமிச்சம்பட்டி அடுத்த ஈச்சனாரி பகுதியில் தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்கிறார். முன்னதாக மலுமிச்ச ம்பட்டி பகுதியில் மருதமலை சேனாதிபதி தலைமையில் தி.மு.க.வினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள்.

    பின்னர் விழா நடைபெறும் இடத்திற்கு செல்லும் அவர், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரையாற்றுகிறார்.

    கோவையில் நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் பொள்ளாச்சி செல்கிறார். அங்கு மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆேலாசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஈச்சனாரி பகுதியில் முதல்-அமைச்சர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் இடத்தினை மதுக்கரை தாசில்தார் பர்ஸானா, வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும். என்ன வசதிகள் செய்ய வேண்டும். இடையூறு இல்லாமல் நிகழ்ச்சியை நடத்துவது, எப்படி நிகழ்ச்சிக்கு வரும் வாகனங்களை எங்கு நிறுத்துவது என்பது குறித்து விரிவாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

    • சி.எம்.சி. சுரங்கப்பாதைக்கு கட்டாயம் இடம் தர வேண்டும்
    • வேலூரில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும்

    வேலூர்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வேலூர் கோட்டை மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மேடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனை அமைச்சர் எ.வ. வேலு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற 20 மற்றும் 21-ந் தேதியில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கு முதல்அமைச்சர் மு. க ஸ்டாலின் வருகிறார். 20-ந் தேதி மாலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரியை திறந்துவைக்கிறார். பின்னர் ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    21-ந் தேதி காலை திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா மற்றும் பல்வேறு கட்டிடங்களை திறப்பு விழா நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    21-ந்தேதி மாலை வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் கலந்து கொண்டு 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    2 நாள் நிகழ்ச்சியில் ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்தில் உள்ள மக்களை முதல்அமைச்சர் சந்திக்கிறார்.

    தமிழகத்தில் 35 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்தது. இதனால் பாலாற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மாதனூர், விரிஞ்சிபுரத்தில் கட்டப்பட்டிருந்த பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

    மாதனூர் பாலாற்றில் ரூ.30 கோடி, விரிஞ்சிபுரம் பாலாற்றில் ரூ. 27 கோடியில் மேம்பாலங்கள் கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் இந்த ஆண்டே பணிகள் தொடங்கப்படும்.

    வேலூர் ஆற்காடு சாலையில் சிஎம்சி ஆஸ்பத்திரி முன்பு சுரங்கப் பாதை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஎம்சி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    சிஎம்சி நிர்வாகத்தினர் தாங்களாகவே முன்வந்து நிலத்தை கொடுத்தால் உடனடியாக பணிகள் தொடங்கப்படும். அல்லது எங்களுக்கு உள்ள நில எடுப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இதற்கான தொகையை வழங்கி நிலத்தை எடுத்து கண்டிப்பாக சுரங்கப்பாதை அமைக்கப்படும்.

    சத்துவாச்சாரி காங்கேயநல்லூர் இடையே தரைப்பாலம் அமைப்பதற்கு நில எடுப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து உள்ளது.

    இதற்கான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு இந்த ஆண்டு அந்த இடத்திலும் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் ,கோவை, மதுரை, போல பழம்பெரும் நகரமான வேலூரில் பெரிய மேம்பாலங்கள் அதாவது மேலே செல்லும் சாலைகள் அமைக்க வேண்டுமென எம்‌.எல்‌ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

    வேலூரில் பெரிய மேம்பாலங்கள் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை துறை ரீதியாக ஆய்வு செய்து மேம்பாலங்கள் அதாவது மேலே செல்லும் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க‌. மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ×