search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந் தேதி கோவை வருகை
    X

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந் தேதி கோவை வருகை

    • ஈச்சனாரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், பொள்ளாச்சி பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார்
    • கோவையில் நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் பொள்ளாச்சி செல்கிறார்.

    பொள்ளாச்சி:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 14-ந் தேதி மாலை கோவை வருகிறார்.அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க.வினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதல்-அமைச்சர் இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் மறுநாள் 15-ந் தேதி காலை மலுமிச்சம்பட்டி அடுத்த ஈச்சனாரி பகுதியில் தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்கிறார். முன்னதாக மலுமிச்ச ம்பட்டி பகுதியில் மருதமலை சேனாதிபதி தலைமையில் தி.மு.க.வினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள்.

    பின்னர் விழா நடைபெறும் இடத்திற்கு செல்லும் அவர், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரையாற்றுகிறார்.

    கோவையில் நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் பொள்ளாச்சி செல்கிறார். அங்கு மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆேலாசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஈச்சனாரி பகுதியில் முதல்-அமைச்சர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் இடத்தினை மதுக்கரை தாசில்தார் பர்ஸானா, வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும். என்ன வசதிகள் செய்ய வேண்டும். இடையூறு இல்லாமல் நிகழ்ச்சியை நடத்துவது, எப்படி நிகழ்ச்சிக்கு வரும் வாகனங்களை எங்கு நிறுத்துவது என்பது குறித்து விரிவாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

    Next Story
    ×