என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மு.க.ஸ்டாலின் விழாவில் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட பந்தல்
- கோவை ஈச்சனாரியில் நடக்கும் அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
- அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் சுற்றுப்பயணமாக நாளை மறுநாள் (23-ந் தேதி) மாலை கோவைக்கு வருகிறார்.
24-ந் தேதி காலை கோவை ஈச்சனாரி பகுதியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
அதனை தொடர்ந்து பொள்ளாச்சியில் ஒருங்கிணைந்த ேகாவை மாவட்ட தி.மு.க. சார்பில் மாற்றுகட்சியினர் 50 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார்.
இந்த விழாவுக்காக கோவை-பொள்ளாச்சி சாலையில் ஆச்சிப்பட்டி பகுதியில் சுமார் 44 ஏக்கரில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அமர இருக்கைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான இருக்கைகளும் போடும் பணி வேகமாக நடந்து வருகிறது. ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அத்தியாவசிய அடிப்படை தேவைகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகளிடம் விழா ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ஆலோசனைகளையும் வழங்கினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 23-ந் தேதி இரவு கோவை வருகிறார். 24-ந் தேதி ஈச்சனாரியில் 1 லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டக்கூடிய அரசு விழாவும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மாலையில் நடைபெறும் விழாவில் மாற்று கட்சியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின் போது கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராம கிருஷ்ணன், பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீ தகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்