search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈச்சனாரி"

    • கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிற 23-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • 24-ந் தேதி முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடத்தப்பட உள்ளது.

    குனியமுத்தூர்,

    கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஈச்சனாரி விநாயகர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிற 23-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான விழா இன்று காலை 8 மணிக்கு நன்மங்கள இசை, திருவிளக்கு வழிபாடு, திருமுறை பாராயணத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இறை ஆணை பெறுதல், தூய நீராக்கல், மூத்த பிள்ளையார் வழிபாடு, மண்ணெடுத்தல், காப்பணிவித்தல், திருக்குடங்களை வேள்விச்சாலைக்கு எடுத்து வருதல், மூத்த பிள்ளையாருக்கு முதல்கால வேள்வி நடத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் இன்று நடக்கின்றன.

    நாளை (21-ந் தேதி) நன்மங்கள இசை, திருமுறை பாராயணம், ஈச்சனாரி விநாயகருக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை, மூன்றாம் கால வேள்வி பூஜை உள்ளிட்டவை நடை பெறுகின்றன. வருகிற 22-ந் தேதி நன்மங்கள இசை, திருமுறை பாராயணம், நான்காம் கால வேள்வி பூஜை, 5-ம் கால வேள்வி பூஜை நடக்கிறது.

    23-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நன்மங்கள இசை, திருமுறை பாராயணம் நடத்தப்படுகிறது. காலை 5.45 மணிக்கு கலைகள் நாடிகளின் வழியாக மூலத்திருமேனியை அடைதல் நிகழ்வு நடத்தப்படுகிறது. காலை 6.45 மணி முதல் 7.45 மணிக்குள் ஈச்சனாரி விநாயகர், கோவில் விமானம் மற்றும் ராஜகோபுரத்துக்கு கும்பாபி ஷேக விழா நடத்தப்படுகிறது. அன்று மாலை 7 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

    24-ந் தேதி முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடத்தப்பட உள்ளது.

    • இந்த செய்தியானது நேற்று மாலை மலர் இதழில் வெளியானது.
    • கரடி நடமாட்டம் இருந்தால் வனத்துறைக்கு தகவல் தெரியப்படுத்த வேண்டும்.

    குனியமுத்தூர்:

    கோவை ஈச்சனாரி விநாயகர் கோயில் பின்புறம் குரும்பபாளையம் பிரிவு செல்லும் சாலையில் குழந்தைவேல் நாச்சி அம்மாள் நகர் உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் உள்ளது.

    இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நள்ளிரவு நேரத்தில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். அப்பகுதி மக்கள் நள்ளிரவில் கரடி நடமாடுவது குறித்து மிகவும் அச்சம் அடைந்த நிலையில் உள்ளனர். இந்த செய்தியானது நேற்று மாலை மலர் இதழில் வெளியானது.

    இதனை கண்ட வனத்து றையினர் உடனே இன்று காலை அப்பகுதிக்குள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதி மக்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதி மக்கள் நேரில் பார்த்ததை கூறியதை அடுத்து கரடி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கரடியின் கால் தடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் கரடி எவ்வளவு தூரம் நடந்து சென்றது என்பதையும் சோதனை நடத்தினர். கரடியை கூண்டு வைத்து பிடிக்கலாமா அல்லது வேறு எந்த முறையில் பிடிக்கலாம் என்று தீவிர ஆய்வு செய்தனர்.

    பின்பு அப்பகுதி மக்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருட்டான இடங்களில் தெரு விளக்குகளை அதிகரிக்க செய்ய வேண்டும் என்று முறையிட்டனர். இனிவரும் காலங்களில் கரடி நடமாட்டம் இருந்தால் உடனே வனத்துறைக்கு தகவல் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

    • பொதுமக்கள் பீதி
    • கரடி நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்

    குனியமுத்தூர்

    கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலுக்கு பின்புறம் குரும்ப பாளையம் பிரிவு செல்லும் சாலையில் குழந்தைவேல் நாச்சம்மாள் நகர் உள்ளது.

    அதன் சுற்றுப்பகுதி முழுவதும் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் 2000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த விவேகானந்தன் என்பவர், நேற்று நள்ளிரவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்றார்.

    அப்போது அங்கு அவர் கரடி நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தார். ஓடுவதை கண்டதும் கரடி விவேகானந்தனை துரத்தியது. ஆனால் அவர் உடனே வீட்டுக்குள் சென்று கதவை பூட்டி கொண்டு தப்பிதார்.

    கரடி அந்த பகுதியில் சிறிது நேரம் உலாவி கொண்டு, வன பகுதியை நோக்கி திரும்பி சென்றது. ஒரு ஆள் உயரத்திற்கு கரடி நிற்பதை கண்டு பயந்துபோனதாகவும், அதனால் காய்ச்சல் வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது,

    இந்த பகுதியை சுற்றிலும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். கரடி நடமாட்டம் எங்களுக்கு மிகுந்த பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    எந்த நேரத்திலும் கரடி வீட்டுக்குள் புகுந்து விடும் என்ற அச்சத்தில் இருக்கிறோம். இரவு மட்டுமல்லாமல், பகல் நேரங்களிலும் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்குள்ளேயே பதுங்கி உள்ளோம்.

    பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் வேலைக்கு செல்பவர்கள், வீடு திரும்பும்போதும், கரடி எதிரே வந்துவிடுமோ என்ற பயத்திலேயே வருகிறோம்.எனவே வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கரடியை பிடிக்க வேண்டும் என்றனர்.

    • ஈச்சனாரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், பொள்ளாச்சி பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார்
    • கோவையில் நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் பொள்ளாச்சி செல்கிறார்.

    பொள்ளாச்சி:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 14-ந் தேதி மாலை கோவை வருகிறார்.அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க.வினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதல்-அமைச்சர் இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் மறுநாள் 15-ந் தேதி காலை மலுமிச்சம்பட்டி அடுத்த ஈச்சனாரி பகுதியில் தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்கிறார். முன்னதாக மலுமிச்ச ம்பட்டி பகுதியில் மருதமலை சேனாதிபதி தலைமையில் தி.மு.க.வினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள்.

    பின்னர் விழா நடைபெறும் இடத்திற்கு செல்லும் அவர், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரையாற்றுகிறார்.

    கோவையில் நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் பொள்ளாச்சி செல்கிறார். அங்கு மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆேலாசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஈச்சனாரி பகுதியில் முதல்-அமைச்சர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் இடத்தினை மதுக்கரை தாசில்தார் பர்ஸானா, வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும். என்ன வசதிகள் செய்ய வேண்டும். இடையூறு இல்லாமல் நிகழ்ச்சியை நடத்துவது, எப்படி நிகழ்ச்சிக்கு வரும் வாகனங்களை எங்கு நிறுத்துவது என்பது குறித்து விரிவாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

    ×