search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bear movement"

    • கிராம மக்கள் அச்சம்
    • ஆடு மேய்ப்பவர்களிடம் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த மலையில் மான், மயில், கரடி, ஆமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது.

    இதில் கடந்த ஆண்டு ஏலகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பொன்னேரி கிராமத்தில் கரடி நடமாட்டம் காணப்பட்டது.

    அப்போது விறகு சேகரிக்கு சென்ற பெண் மற்றும் முதியவரை கரடி கடித்தது. காயமடைந்த வர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள மயில்பாறை கிராமத்தை சேர்ந்த சிலர் ஆடு மேய்ப்பதற்காக மலை அடிவாரத்திற்கு சென்றனர்.

    அப்போது முருகர் கோவில் அருகே திடீரென வந்த கரடி ஆடுகளை கடிக்க முயன்றது.

    இதனைப் பார்த்து அதிர்ச்சடைந்த ஆடு மேய்ப்பவர்கள், பதறி அடித்துக் கொண்டு ஊருக்குள் வந்து தகவலை தெரிவித்தனர்.

    இதனால் கிராம மக்கள் மிகவும் அச்ச மடைந்து ள்ளனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மத்தான் ஆடு மேய்ப்பவர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • கடையம் அருகே உள்ளது பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் அடிக்கடி கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் புகுந்து மனிதர்களை தாக்கி வருகிறது.
    • வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்தறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ளது பெத்தான்பிள்ளை குடியிருப்பு. இப்பகுதியில் அடிக்கடி கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் புகுந்து மனிதர்களை தாக்கி வருகிறது.

    கரடி தாக்கியது

    மேலும் ஆடுகள் மற்றும் விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது. கடந்த 6-ந்தேதி பெத்தான்பிள்ளை குடியிருப்பில் புகுந்த கரடி ஒன்று அவ்வழியாக சென்ற ஒரு வியாபாரியை தாக்கியது. அதனை தடுக்க சென்ற மேலும் 2 பேரையும் கடித்து தாக்கியது.

    பலத்த காயமடைந்த அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே மயக்க ஊசிகள் செலுத்தி பிடிக்கப்பட்ட கரடி களக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் அது நேற்று திடீரென இறந்தது. பின்னர் அது களக்காடு அடர்வனப்பகுதியான செங்கல்தேரியில் எரிக்கப்பட்டது.

    மீண்டும் நடமாட்டம்

    இந்நிலையில் பெத்தான்பிள்ளை குடியிருப்பை சேர்ந்த ஒருவர் நேற்று பணிக்கு சென்றுள்ளார். அப்போது கடந்த 6-ந்தேதி கரடி நின்ற அதே இடத்தில் மீண்டும் ஒரு கரடி நின்றுள்ளது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர் பொது மக்களிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்தறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதிர்ச்சி

    ஏற்கனவே 2 நாட்களுக்கு முன்பு 3 பேரை கரடி கடித்து குதறிய நிலையில் மீண்டும் கரடி நடமாட்டம் உள்ளதை அறிந்து அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    கருத்தபிள்ளையூர், சிவசைலம், பெத்தான் பிள்ளை குடியிருப்பு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மாணவ-மாணவிகள் ஆழ்வார்கு றிச்சி உள்ளிட்ட பகுதியில் படித்து வருகின்றனர்.

    மாணவர்கள் தயக்கம்

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கரடி புகுந்த சம்பவத்தால் அச்சம் காரணமாக கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு சில மாணவர்கள் செல்லாமல் இருந்தனர். இந்நிலையில் இன்று 3-வது நாளாக அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை.

    இது தொடர்பாக அப்பகு தியினர் கூறும்போது, எங்கள் பகுதியில் அடிக்கடி கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் நாங்கள் பதட்டத்துடனே வாழ்ந்து வருகிறோம். எனவே இதற்கு நிரந்த தீர்வு காண வேண்டும். எங்கள் பகுதியில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தி கரடியின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என கூறினர்.

    கரடி நடமாட்டம் குறித்து அம்பை வனக்கோட்ட துணை இயக்குனர் செண்பகப்பிரியா கூறு கையில், பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஒரு முதியவர் கரடியை பார்த்ததாக கூறுகிறார். இதனால் அந்த பகுதியில் கரடி வராமல் இருப்பதற்காக வாகன டயர்களை எரிக்க வனத்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

    மேலும் 24 மணி நேரமும் தலா 10 பேர் கொண்ட 2 குழுக்கள் அங்கு சுழற்சி முறையில் ரோந்து சென்று வருகின்றனர். கரடி நடமாட்டம் இருப்பது உறுதியானால் உடனடியாக அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தேவையான மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர் என்றார்.

    • இந்த செய்தியானது நேற்று மாலை மலர் இதழில் வெளியானது.
    • கரடி நடமாட்டம் இருந்தால் வனத்துறைக்கு தகவல் தெரியப்படுத்த வேண்டும்.

    குனியமுத்தூர்:

    கோவை ஈச்சனாரி விநாயகர் கோயில் பின்புறம் குரும்பபாளையம் பிரிவு செல்லும் சாலையில் குழந்தைவேல் நாச்சி அம்மாள் நகர் உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் உள்ளது.

    இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நள்ளிரவு நேரத்தில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். அப்பகுதி மக்கள் நள்ளிரவில் கரடி நடமாடுவது குறித்து மிகவும் அச்சம் அடைந்த நிலையில் உள்ளனர். இந்த செய்தியானது நேற்று மாலை மலர் இதழில் வெளியானது.

    இதனை கண்ட வனத்து றையினர் உடனே இன்று காலை அப்பகுதிக்குள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதி மக்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதி மக்கள் நேரில் பார்த்ததை கூறியதை அடுத்து கரடி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கரடியின் கால் தடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் கரடி எவ்வளவு தூரம் நடந்து சென்றது என்பதையும் சோதனை நடத்தினர். கரடியை கூண்டு வைத்து பிடிக்கலாமா அல்லது வேறு எந்த முறையில் பிடிக்கலாம் என்று தீவிர ஆய்வு செய்தனர்.

    பின்பு அப்பகுதி மக்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருட்டான இடங்களில் தெரு விளக்குகளை அதிகரிக்க செய்ய வேண்டும் என்று முறையிட்டனர். இனிவரும் காலங்களில் கரடி நடமாட்டம் இருந்தால் உடனே வனத்துறைக்கு தகவல் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

    ×