search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர் பலி"

    • தூத்துக்குடியில் இருந்து 45 கடல் மைல் தூரத்தில் படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
    • நேற்று இரவு செல்வா மயக்கமான நிலையில் மீட்கப்பட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் செல்வா (வயது48). மீனவர். செல்வா சக மீனவர்கள் 4 பேருடன் நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.

    அவர்கள் தூத்துக்குடியில் இருந்து 45 கடல் மைல் தூரத்தில் படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது படகில் இருந்த செல்வா திடீரென கடலில் தவறி விழுந்தார்.

    உடனடியாக சக மீனவர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து கடலோர காவல் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நேற்று இரவு செல்வா மயக்கமான நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பாக கடலோர காவல்படை சப்-இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை நடத்தி வருகிறார்.

    வீராணம் ஏரியில் மீன் பிடித்த மீனவர் இடி தாக்கி பலி ஆனார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சிட்டமல்லி கிராமத்தை சேர்ந்தவர் கோபி (வயது 66). மீனவர். இவர் நேற்று மாலை வீரா ணம் ஏரியில் படகு மூலம் வலைவீசி மீன் பிடித்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென பலத்த மழை பெய்தது. அந்த நேரத்தில் திடீரென இடி தாக்கியது. இதில் மீனவர் கோபி சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார்.

    தகவல் அறிந்த காட்டு–மன்னார்கோவில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று உடலை மீட்டனர். இதுகுறித்து சோழத்தரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி குபேந்திரன் சாயு தண்ணீரில் மூழ்கினார்.
    • குபேந்திரன் சாயு உடல் பிணமாக கரை ஒதுங்கியது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த சின்ன மாங்காடு குப்பம் பகுதியை சேர்ந்தவர் துல்லா குட்டி (வயது 65). இவர் 12 பேருடன் படகில் சென்று பழவேற்காடு ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது வலையை இழுக்கும்போது சேற்றில் சிக்கி துல்லா குட்டி மூழ்கினார். அவரை மற்ற மீனவர்கள் மீட்டபோது அவர் ஏற்கனவே இறந்து இருப்பது தெரிந்தது.

    நேபாள நாட்டை சேர்ந்தவர் குபேந்திரன் சாயு (வயது22). செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் பகுதியில உள்ள ஹாலோ பிளாக் (சிமெண்ட் செங்கல் தயாரிப்பு) கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று மதியம் சாயு உடன் வேலை செய்யும் நண்பர்களுடன் மாமல்லபுரம் சுற்றுலா வந்தார்.

    கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி குபேந்திரன் சாயு தண்ணீரில் மூழ்கினார். நண்பர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அதே பகுதியில் குபேந்திரன் சாயு உடல் பிணமாக கரை ஒதுங்கியது. இதையடுத்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி ஆனார்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே கீழ்அனுவம்பட்டு பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (35) இவர் நஞ்சைமகத்து வாழ்க்கை அருகே படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு உள்ள தண்ணீர் திறந்து விடும் ஷட்டர் அருகே மீன்பிடிக்கும் போது எதிர்பாராவிதமாக படகு நீரில் கவிழ்ந்ததில் ரங்கநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதனையடுத்து இவரது மனைவி ராஜேஸ்வரி கிள்ளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    • நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது மீனவர் திடீரென நிலைதடுமாறி படகில் இருந்து கடலில் தவறி விழுந்தார்.
    • தண்ணீரில் தத்தளித்த மீனவர் சிறிது நேரத்தில் மூழ்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை நம்பியார் நகரை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 40) மீனவர். இவர் கடந்த 21-ந்தேதி இரவு பைபர் படகில் 5 மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டார்.

    அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அய்யாசாமி திடீரென நிலைதடுமாறி படகில் இருந்து கடலில் தவறி விழுந்தார். தண்ணீரில் தத்தளித்த அவர் சிறிது நேரத்தில் மூழ்கினார்.

    அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் உடனடியாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் சக மீனவர்கள் அய்யாசாமியை தேடி வந்தனர்.

    இந்நிலையில் இன்று நம்பியார் நகர் துறைமுகத்திற்கு கிழக்கே 18 கிலோமீட்டர் தூரத்தில் அய்யாசாமியின் உடல் பிணமாக கரை ஒதுங்கியது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமன் திடீரென கடலில் தவறி விழுந்தார்.
    • மீனவர்கள் கடலில் குதித்து அவரை மீட்டு கரைக்கு தூக்கி சென்று பார்த்தனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு சாத்தான் குப்பத்தை சேர்ந்தவர் ராமன் (36). இவர் அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் சேர்ந்து படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். திடீரென ராமன் கடலில் தவறி விழுந்தார். அவருடன் சென்ற மீனவர்கள் கடலில் குதித்து அவரை மீட்டு கரைக்கு தூக்கி சென்று பார்த்தனர். அப்போது ராமன் இறந்திருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அவரது உடலை போலீசார் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கடலில் விழுந்து பலியான மீனவர் ராமனுக்கு திருமணமாகி சூர்யா என்ற மனைவியும் ரத்திஷ், ரபினேஷ் என்ற மகன்களும் உள்ளனர்.

    மீன் பிடிக்கச்சென்றபோது கடலில் தவறி விழுந்து மீனவர் பலியானதால் பழவேற்காடு மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    • நேற்று மதியம் பழவேற்காடு ஏரியில் இறால் மீன் பிடித்தார்.
    • ஏரியில் உள்ள சேற்றில் இறங்கியபோது அசோகன் சிக்கி கொண்டார்.

    பொன்னேரி:

    பழவேற்காடு அடுத்த சாத்தான் குப்பத்தை சேர்ந்தவர் அசோகன் (வயது47). மீனவர். இவர் நேற்று மதியம் பழவேற்காடு ஏரியில் இறால் மீன் பிடித்தார்.

    அப்போது ஏரியில் உள்ள சேற்றில் இறங்கியபோது அதில் சிக்கி கொண்டார். நீண்ட நேரம் போராடியும் அசோகனால் வெளியே வர முடியவில்லை. பின்னர் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பாலைவனம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான அசோகனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பலியான அசோகனுக்கு சுகுணா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    ×