என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
தூத்துக்குடியில் மீன்பிடித்தபோது கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
BySuresh K Jangir16 Nov 2022 4:14 AM GMT (Updated: 16 Nov 2022 4:14 AM GMT)
- தூத்துக்குடியில் இருந்து 45 கடல் மைல் தூரத்தில் படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
- நேற்று இரவு செல்வா மயக்கமான நிலையில் மீட்கப்பட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் செல்வா (வயது48). மீனவர். செல்வா சக மீனவர்கள் 4 பேருடன் நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.
அவர்கள் தூத்துக்குடியில் இருந்து 45 கடல் மைல் தூரத்தில் படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது படகில் இருந்த செல்வா திடீரென கடலில் தவறி விழுந்தார்.
உடனடியாக சக மீனவர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து கடலோர காவல் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று இரவு செல்வா மயக்கமான நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக கடலோர காவல்படை சப்-இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X