என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பழவேற்காட்டில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
Byமாலை மலர்23 July 2022 6:29 AM GMT
- படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமன் திடீரென கடலில் தவறி விழுந்தார்.
- மீனவர்கள் கடலில் குதித்து அவரை மீட்டு கரைக்கு தூக்கி சென்று பார்த்தனர்.
பொன்னேரி:
பழவேற்காடு சாத்தான் குப்பத்தை சேர்ந்தவர் ராமன் (36). இவர் அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் சேர்ந்து படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். திடீரென ராமன் கடலில் தவறி விழுந்தார். அவருடன் சென்ற மீனவர்கள் கடலில் குதித்து அவரை மீட்டு கரைக்கு தூக்கி சென்று பார்த்தனர். அப்போது ராமன் இறந்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அவரது உடலை போலீசார் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கடலில் விழுந்து பலியான மீனவர் ராமனுக்கு திருமணமாகி சூர்யா என்ற மனைவியும் ரத்திஷ், ரபினேஷ் என்ற மகன்களும் உள்ளனர்.
மீன் பிடிக்கச்சென்றபோது கடலில் தவறி விழுந்து மீனவர் பலியானதால் பழவேற்காடு மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு செல்லவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X