என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழவேற்காட்டில் இறால் மீன் பிடித்தபோது சேற்றில் சிக்கி மீனவர் பலி
- நேற்று மதியம் பழவேற்காடு ஏரியில் இறால் மீன் பிடித்தார்.
- ஏரியில் உள்ள சேற்றில் இறங்கியபோது அசோகன் சிக்கி கொண்டார்.
பொன்னேரி:
பழவேற்காடு அடுத்த சாத்தான் குப்பத்தை சேர்ந்தவர் அசோகன் (வயது47). மீனவர். இவர் நேற்று மதியம் பழவேற்காடு ஏரியில் இறால் மீன் பிடித்தார்.
அப்போது ஏரியில் உள்ள சேற்றில் இறங்கியபோது அதில் சிக்கி கொண்டார். நீண்ட நேரம் போராடியும் அசோகனால் வெளியே வர முடியவில்லை. பின்னர் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பாலைவனம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான அசோகனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியான அசோகனுக்கு சுகுணா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
Next Story






