என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பழவேற்காடு ஏரியில் சேற்றில் சிக்கி மீனவர் பலி
- கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி குபேந்திரன் சாயு தண்ணீரில் மூழ்கினார்.
- குபேந்திரன் சாயு உடல் பிணமாக கரை ஒதுங்கியது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த சின்ன மாங்காடு குப்பம் பகுதியை சேர்ந்தவர் துல்லா குட்டி (வயது 65). இவர் 12 பேருடன் படகில் சென்று பழவேற்காடு ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது வலையை இழுக்கும்போது சேற்றில் சிக்கி துல்லா குட்டி மூழ்கினார். அவரை மற்ற மீனவர்கள் மீட்டபோது அவர் ஏற்கனவே இறந்து இருப்பது தெரிந்தது.
நேபாள நாட்டை சேர்ந்தவர் குபேந்திரன் சாயு (வயது22). செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் பகுதியில உள்ள ஹாலோ பிளாக் (சிமெண்ட் செங்கல் தயாரிப்பு) கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று மதியம் சாயு உடன் வேலை செய்யும் நண்பர்களுடன் மாமல்லபுரம் சுற்றுலா வந்தார்.
கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி குபேந்திரன் சாயு தண்ணீரில் மூழ்கினார். நண்பர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியில் குபேந்திரன் சாயு உடல் பிணமாக கரை ஒதுங்கியது. இதையடுத்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்