search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடுகள்"

    • மாடுகளால் உயிர் இழப்பு ஏற்பட்டால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க விரும்புபவர்கள் சென்னைக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும்.

    சென்னை:

    உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சியுடன் அலெர்ட் அறக்கட்டளை இணைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உயிர் காக்கும் தானியங்கி வெளிப்புற 'டிபிபிரி லேட்டர்' கருவியின் செயல்பாட்டை ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார்.

    இதில் பங்கேற்ற கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி அவசியமானது. மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த பயிற்சி வழங்கப்படும். மக்கள் கூடும் பொது இடங்களில் இக்கருவி அமைக்கப்படும். மேலும் இது தொடர்பான அறிவிப்பு பலகையும் மக்களுக்கு தெரிவிக்கப்படும். சுகாதாரத்தை மக்கள் தேடி செல்ல வேண்டும்.

    வேதனையான சம்பவம் சாலையில் சுற்றித் திரிந்த மாடு முட்டி ஒருவர் குடல் கிழிந்து சிகிச்சை பெற்று வருகிறார். சென்னையில் மயிலாப்பூர், திருவான்மியூர், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., நங்கநல்லூர், பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன.

    நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க விரும்புபவர்கள் வீட்டுக்குள்ளேயே வளர்க்க வேண்டும். சாலையில் சுற்றித் திரிந்தால் உரிமையாளர்களிடம் இனிமேல் திருப்பி ஒப்படைக்கமாட்டோம்.

    மாடுகளால் உயிர் இழப்பு ஏற்பட்டால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க விரும்புபவர்கள் சென்னைக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும். இனிமேல் பிடிக்கப்படுகிற மாடுகளை பேணி காக்க கால்நடை வளர்ப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக வயலில் மின்கம்பி அறுந்து கிடந்தது.
    • மின்கம்பியை எதிர்பாராதவிதமாக 3 மாடுகளும் மிதித்தன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நேமம் அக்ரவர்த்தி பகுதியை சேர்ந்தவர் ராசு.

    இவருக்கு சொந்தமான 2 பசுமாடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டி இளங்காடு செல்லும் சாலை அருகில் இருந்த வயலில் மேய்ச்சலுக்கு சென்றன.

    அங்கு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.

    அந்த வயலில் இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக மின்கம்பி அறுந்து கிடந்தது.

    இந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக 3 மாடுகளும் மிதித்தன.

    இதில் மின்சாரம் தாக்கி 3 மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    3 மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • காளை மாடு திருவொற்றியூர் வடிவுடையம்மன்கோவில் பகுதியில் சுற்றி வந்து உள்ளது.
    • ராஜ கோபுரத்தை பார்த்தபடி நின்ற காளைமாடு சிறிது நேரத்தில் சரிந்து விழுந்து இறந்தது.

    திருவொற்றியூர்:

    அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து தாயுடன் சென்ற மாணவியை மாடு ஒன்று முட்டி வீசியது.

    இதைத் தொடர்ந்து சென்னை நகரில் சாலையில் சுற்றும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவொற்றியூர் வீதிகளில் சுற்றி வந்த காளை மாட்டை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். பின்னர் அதனை பெரம்பூரில் உள்ள கோசாலையில் அடைத்தனர். அந்த காளை மாடு திருவொற்றியூர் வடிவுடையம்மன்கோவில் பகுதியில் சுற்றி வந்து உள்ளது. இதனால் அதனை கோவில் மாடாக நினைத்து பக்தர்கள் நந்தீஸ்வரர் என்று பெயரிட்டு அழைத்து வந்து இருக்கிறார்கள். மாநகராட்சி ஊழியர்களால் காளை மாடு பிடிக்கப்பட்டதால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

    இதற்கிடையே அந்த காளைமாடு கோசாலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் மாடு மிகவும் பல வீனம் அடைந்தது. இதுபற்றி அறிந்த பக்தர்கள் சிலர், மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து நேற்று மாலை காளை மாட்டை மீட்டு வாகனத்தில் கொண்டு வந்து கோவில் குளக்கரை அருகே இறக்கி விட்டனர்.

    ராஜ கோபுரத்தை பார்த்தபடி நின்ற காளைமாடு சிறிது நேரத்தில் சரிந்து விழுந்து இறந்தது.

    இதனை பார்த்து அங்கிருந்த பக்தர்கள், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இறந்த காளை மாடுக்கு திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு மற்றும் ஏராளமான பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிலர் மாட்டின் உடலை பார்த்து கண்கலங்கினர். பக்தர்கள் மாட்டின் உடலுக்கு குங்குமம், சந்தனம் தெளித்து நாலுமாட வீதிகள் வழியாக சிவவாத்தியங்கள் முழங்க இறுதி ஊர்வலம் நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து நள்ளிரவு 2 மணி அளவில் மாட்டின் உடல் இந்திரா நகர் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஆன்மிக முறைப்படி சடங்குகளும் செய்யப்பட்டது.

    • மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • மாடுகளின் உரிமையாளர்களை கண்டறிந்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, டி.கே.எம். சாலை, கோவளம் சாலை, ஒத்தவாடை தெரு, ஐந்து ரதம் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, கங்கை கொண்டான் மண்டபம் சாலை, மாதா கோவில் தெரு, அண்ணல் அம்பேத்கர் தெரு, ராஜீவ்காந்தி தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகள் சாலையின் நடுவே ஆங்காங்கே சுற்றி திரிவதாக மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. அதேபோல் சுற்றுலா வாகனங்கள் செல்லாதவாறு மாமல்லபுரம் நகரின் முக்கிய புராதன சின்ன சாலைகளில் சாலையிலேயே மாடுகள் படுத்திருப்பதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.

    இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கும் வகையில் மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் ஆகியோர் மேற்பார்வையில் மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, துப்புரவு மேற்பார்வையாளர் தாமோதரன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றி திரிந்த மாடுகளை பிடித்தனர். பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகளை பொது வெளியில் திரிய விட்டதாக மாடுகளின் உரிமையாளர்களை கண்டறிந்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

    • இரவு நேரங்களில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ரோட்டில் படுத்து கிடக்கும் மாடுகளால் விபத்தில் சிக்குகிறார்கள்.
    • போக்குவரத்து இடையூறு ஏற்படுவது மட்டுமல்லாமல் மாடுகள் அல்லது பொது மக்களும் காயம் அடைவார்கள் என்று மக்கள் கூறுகின்றனர்.

    சென்னை நகர பகுதியில் மாடு வளர்ப்பவர்கள் மாடுகளை அவிழ்த்து விடுவதால் சாலைகளில் சுற்றித்திரிகிறது. இது போக்குவரத்துக்கு இடையூறு செய்வதோடு மட்டுமல்லாமல் கோபக் கார மாடுகள் பொது மக்களை முட்டியும் பதம் பார்க்கிறது. சமீபத்தில் அரும்பாக்கத்தில் ரோட்டில் நடந்து சென்ற சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி போட்டு பந்தாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து ரோடுகளில் அலையும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அபராதம் விதித்து வருகிறது.

    இதே போல் பழைய மகாபலிபுரம் சாலையும் மாடுகளின் பிடியில் சிக்கி இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். இதில் பெரும்பாலான பகுதிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து பகுதிகள் ஆகும். கேளம்பாக்கம், சிறுசேரி, நாவலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். இரவு நேரங்களில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ரோட்டில் படுத்து கிடக்கும் மாடுகளால் விபத்தில் சிக்குகிறார்கள்.

    களிப்பட்டூரில் ஏழெட்டு மாடுகள் இரவில் சாலையில் படுத்து கிடந்ததாகவும் ஒரு மாடு ரத்தபோக்கு ஏற்பட்டு கிடந்ததாகவும் அதை பார்த்த பயணி ஒருவர் கூறினார்.

    இதை தடுக்காவிட்டால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவது மட்டுமல்லாமல் மாடுகள் அல்லது பொது மக்களும் காயம் அடைவார்கள் என்று மக்கள் கூறுகின்றனர்.

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் சாலைகளில் மாடுகள் நடமாடுவதை கண்காணிக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.

    தையூர் பஞ்சாயத்துச் செயலாளர் குமரேசன் அந்த பகுதியில் மாடுகள் சுற்றித் திரிந்ததால் 2 உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து இருப்பதாக கூறினார்.

    ரோடுகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து சென்றால் அடைத்து வைக்கும் பவுண்டு வசதி பஞ்சாயத்தில் இல்லை என்றும் இதனால் மாடுகளை பிடிப்பதும் அபராதம் விதிப்பதும் சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.

    பஞ்சாயத்துகள் கால்நடைகள் தொல்லையை சமாளிக்க தங்களுக்கு வசதிகள் இல்லை என்று கூறுவதற்கு நிதிபற்றாக் குறையை காரணம் காட்ட முடியாது. தேவையறிந்து வரி வசூலில் தீவிரம் காட்ட வேண்டும். மாட்டு உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் என்பதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தலாம் என்கிறார் முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் இயக்குனர் சிவசாமி.

    • ரூ.60 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
    • மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே, நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.

    இந்த வாரம் நடைபெற்ற சந்தைக்கு மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 27 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில், 20 மாடுகள் ரூ.7 லட்சத்துக்கு விற்பனையாயின.இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.60 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

    • கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
    • உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    காஞ்சிபுரம் பகுதியில் சாலைகளில் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாகவும் , அச்சுறுத்தும் வகையிலும் சுற்றி திரிந்த ஏராளமான கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அப்போது வட்டாட்சியர் புவனேஸ்வரன், கவுன்சிலர்கள் கார்த்திக், குமரன், சங்கர் உடன் இருந்தனர்.

    • நகராட்சி பிடித்துசென்ற மாடுகள் நாளை ஏலம் விடப்படுகிறது.
    • மாட்டின் உரிமையாளர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்

    கீழக்கரை

    கீழக்கரையில் பொது மக்களுக்கு இடையூறாக பராமரிப்பின்றி சுற்றித்தி ரியும் மாடுகளை பிடித்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் கீழக்கரையில் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர். அவை நகராட்சி அலுவலகம் அருகே தனியார் இடத்தில் அடைக்கப் பட்டிருந்தன. சம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அனுமதி இன்றி மாடுகள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டது. இது அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதை யடுத்து மாடுகளை பாது காப்பதற்கு நியமிக்கப்பட்ட முருகேசன் என்பவர் நகராட்சி நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் நாளை (10-ந் தேதி) காலை 11 மணிக்கு அந்த மாடுகள் ஏலம்விடப் படவுள்ளன. ஒரு மாட்டிற்கு ஏலத் தொகையாக ரூ.25 ஆயிரம் நிர்ணயிக்கப் பட்டது. இது குறித்து கீழக்கரை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், தலைவர் செஹனாஸ் ஆபிதா கூறியதாவது:

    ஏலத்திற்கான காப்புத் தொகையினை குறித்த காலத்திற்குள் டிமாண்ட் டிராப்டாக ஆணையாளர் கீழக்கரை நகராட்சி என்ற பெயரில் நகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஏலத்திற்கான காப்பு தொகை செலுத்தி அனுமதி சீட்டு பெற்ற நபர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனும திக்கப்படுவார்கள். ஏலத்தின் போது ஆணை யாளர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் ஒவ்வொரு மாட்டிற்கான ஆரம்ப ஏலத்தொகை நிர்ணயம் செய்யப்படும்.

    இதற்காக பல்வேறு நிபந்த னைகள் விதிக்கப்பட்டுள்ளது, சாலைகளில் திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டதை தொடர்ந்து சாலைகளில் மாடுகளின் நடமாட்டம் குறைந்துள்ளது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் இதே போல் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகபட்சமாக ரூ.87 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் கூடிய மயிலைப் பசு விற்பனையானது.
    • மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம் காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் பழையகோட்டையில் காங்கேயம் மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 47 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் ரூ.12 லட்சத்துக்கு 35 மாடுகள் விற்பனையாயின. அதிகபட்சமாக ரூ.87 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் கூடிய மயிலைப் பசு விற்பனையானது.

    • புலியை பிடிக்க வனத்துறையினர் புதுவியூகம்
    • குமரி மாவட்ட வனத்துறையினருடன் இணைந்து புலியை பிடிப்பதற்கான நடவடிக்கை

    கன்னியாகுமரி :

    பேச்சிப்பாறை அருகே முக்கறைக்கல் சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் கடந்த சில நாட்களாக புலிகள் அட்டகாசம் செய்து வருகிறது. அங்குள்ள ஆடு, மாடுகளை கடித்து கொன்று வருகிறது.

    குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து நாய், ஆடுகளை கொன்றதால் மலைவாழ் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குடியிருப்பு பகுதியில் சுற்றி தெரியும் புலியை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 2 இடங்களில் கூண்டு அமைத்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். ஆனால் புலி சிக்கவில்லை.

    இந்த நிலையில் புலியை பிடிக்க புது வியூகம் வகுத்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மாவட்ட வன அதிகாரி இளையராஜா தலைமையிலான குழுவினர் நேற்று அந்த பகுதியில் உள்ள மலைவாழ் மக்களை சந்தித்து பேசினார்கள்.

    அப்போது ஆடு, மாடுகளை ஆங்காங்கே கட்டுவதால் புலிகள் கடித்து கொன்று வருகிறது. எனவே அவற்றை ஒரே இடத்தில் கட்ட நட வடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மலைவாழ் மக்களிடம் கேட்டுக்கொண்டனர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு மக்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் காம்பவுண்டின் உள்பகுதியில் ஆடு, மாடுகள் கட்டப்பட்டுள் ளது. சுமார் 20 மாடுகள், 40 ஆடுகள் ஒரே இடத்தில் கட்டப்பட்டு உள்ளது. அந்த பகுதியை வனத்துறை அதி காரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் புலியை பிடிக்கும் வகையில் ஆட்டுக்கொட்டகை போன்ற தோற்றம் உடைய கூண்டு ஒன்றை வடிவமைத்து 2 இடங்களில் வைத்துள்ளனர். அந்த கூண்டுக்குள் 2 ஆடுகளையும் கட்டி வைத்துள்ளனர். 24 மணி நேரமும் அந்த கூண்டை வனத்துறை கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் புலி பிடிப்பதற்கு வெளியூரிலிருந்து சிறப்பு குழுவினரை அழைத்து வரவும் நட வடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

    கோவையில் இருந்து புலியை பிடிப்பதற்கு பயிற்சி பெற்ற குழுவினர் விரைவில் இங்கு வர உள்ளனர். அவர்கள் குமரி மாவட்ட வனத்துறையினருடன் இணைந்து புலியை பிடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர்.

    • பழையகோட்டையில் 101 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
    • 60 மாடுகள் மொத்தம் ரூ.23 லட்சத்துக்கு விற்பனையாயின.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான இந்த பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 101 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

    இதில் 60 மாடுகள் மொத்தம் ரூ.23 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.79 ஆயிரத்துக்கு கன்றுக் குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

    • ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் காங்கேயம் இன மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 95 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.
    • அதிகபட்சமாக 3 மயிலைப் பசுக்கள் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்துக்கு விற்பனையாயின.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம் காங்கயத்தை அடுத்துள்ள பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் காங்கேயம் இன மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 95 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் 45 மாடுகள் ரூ.21 லட்சத்துக்கு விற்பனையாயின. அதிகபட்சமாக 3 மயிலைப் பசுக்கள் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்துக்கு விற்பனையாயின.

    ×