search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றித்திரிந்த மாடுகள்"

    • கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
    • உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    காஞ்சிபுரம் பகுதியில் சாலைகளில் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாகவும் , அச்சுறுத்தும் வகையிலும் சுற்றி திரிந்த ஏராளமான கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அப்போது வட்டாட்சியர் புவனேஸ்வரன், கவுன்சிலர்கள் கார்த்திக், குமரன், சங்கர் உடன் இருந்தனர்.

    • 5 மாடுகள் பிடிக்கப்பட்டன
    • அதிகாரிகள் எச்சரிக்கை

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மாடுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் மாடுகள் சுற்றி திரிகின்றன.

    சத்துவாச்சாரி ரோட்டில் சாலையை ஆக்கிரமித்து ஏராளமான மாடுகள் படுத்து கிடக்கின்றன.

    மாடுகளை கட்டவிழ்த்து விடும் உரிமையாளர்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் மாடுகள் சுற்றி திரிவதை அவர்கள் நிறுத்தவில்லை.

    இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்து சாமி தலைமையில் வேலூர் அலமேலுமங்காபுரம் முதல் சத்துவாச்சாரி வரை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்தனர். மொத்தம் 5 மாடுகள் பிடிக்கப்பட்டன. இதில் 4 மாடுகள் மாநகராட்சி கோசாலையில் அடைக்கப்பட்டன. 3 மாடுகளின் உரிமையா ளர்கள் அங்கு வந்து விட்டு விடும்படி அதிகாரிகளிடம் கேட்டனர்.

    இதனை தொடர்ந்து அந்த மாடுகளுக்கு தலா ரூ.2000 விதம் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்து விட்டு மாடுகளை ஒப்படைத்தனர்.

    சாலையில் மாடுகளை திரிய விட்டால் அபராதம் விதிப்பது தொடரும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×