search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபான கொள்கை முறைகேடு வழக்கு"

    • என் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கமும் இந்த நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று.
    • அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்குமா, கிடைக்காதா என பெண்கள் யோசிக்கலாம்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை 28-ந்தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நேற்று டெல்லி கோர்ட்டு அனுமதி அளித்தது.

    இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் காணொலி வாயிலாக உரையாற்றினார்.

    அமலாக்கத்துறை காவலில் இருக்கும் தனது கணவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், டெல்லி மக்களுக்கும் சொல்ல விரும்பிய செய்தியை தற்போது தான் கூறுவதாக அவரது செய்தியை வாசித்தார். அதில்,

    * நான் உள்ளே இருந்தாலும் சிறையில் இருந்தாலும் எனது வாழ்க்கை நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று. என் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கமும் இந்த நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று.

    * நான் நிறைய போராட்டங்களை சந்தித்து விட்டேன். இந்த கைது என்பது எனக்கு எந்தவிதமான ஆச்சர்யத்தையும் கொடுக்கவில்லை.

    * நான் உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் மக்களை பற்றிதான் சிந்தித்து கொண்டு இருப்பேன்.

    * இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கக்கூடிய சில சக்திகள் இந்தியாவை பலவீனமாக்கி வருகின்றன. அந்த சக்திகளை நாம் அடையாளம் கண்டு அவர்களை வீழ்த்த வேண்டும்.

    * அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்குமா, கிடைக்காதா என பெண்கள் யோசிக்கலாம்.

    * சிறையில் இருந்து விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்.

    * உங்களின் சகோதரனையும் மகனையும் நம்புங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

    * நான் சிறையில் இருப்பதால் எந்த பணிகளும் தடைபட்டு விடக்கூடாது.

    * பாஜகவினரை யாரும் வெறுக்க வேண்டாம். அவர்களும் நம் சகோதர - சகோதரிகள்தான் என்று தெரிவித்துள்ளார்.

    • கெஜ்ரிவாலை 6 நாள் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.
    • அவரது வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்றார் சுனிதா.

    புதுடெல்லி:

    மதுபான கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். அதன்பின், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து, கெஜ்ரிவாலை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத் துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது அமலாக்கத் துறை சார்பில் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு 6 நாள் விசாரிக்க சிபிஐ சிறப்பு கோர்ட் அனுமதி அளித்தது.

    இந்நிலையில், கெஜ்ரிவால் மனைவி சுனிதா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடி தனது அதிகார ஆணவத்தால் 3 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மந்திரியை கைதுசெய்து, அனைவரையும் நசுக்கப் பார்க்கிறார். இது டெல்லி மக்களுக்கு செய்யும் துரோகம். உங்கள் முதல் மந்திரி எப்போதும் உங்களுடன் நின்றவர். உள்ளே (சிறையில்) இருந்தாலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி, அவருடைய வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு எல்லாம் தெரியும் என பதிவிட்டுள்ளார்.

    • கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது.
    • வரும் 28-ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதி அளித்தது.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து, கெஜ்ரிவாலை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரிக்க 6 நாள் காவலுக்கு சிறப்பு சி.பி.ஐ. கோர்ட் அனுமதி அளித்தது. இதன்மூலம் அவரிடம் 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    • பிஆர்எஸ் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    • வரும் 23-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

    புதுடெல்லி:

    தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா வீட்டில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    இந்நிலையில், பி.ஆர்.எஸ். தலைவர் கே.கவிதாவை வரும் 23-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி கோர்ட்டு நீதிபதி எம்.கே.நாக்பால் உத்தரவிட்டுள்ளார்.

    ×