search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்டைக்காடு"

    • இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது.
    • மாசிக்கொடை விழா 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது.

    இங்கு மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்தின் மாசிக்கொடை விழா கடந்த 5-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 7-ம் நாள் விழாவான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

    தொடர்ந்து 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது.

    மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.15 மணிக்கு பாலப்பள்ளம் நடுப்பிடாகை முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து யானை மீது சந்தனகுடம் பவனி புறப்பட்டு மண்டைக்காடு கோவில் வந்தடைந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7 மணிக்கு சிறப்பு வில்லிசை, 8 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி நடந்தது. ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், சொற்பொழிவு போட்டி, சங்க வருடாந்திர மகாசபை கூட்டம், 5 மணிமுதல் இரவு 7 மணிவரை கலைநிகழ்ச்சி, 7 மணிமுதல் 9 மணிவரை நாகர்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ் தலைமையில் மாதர் மாநாடு, இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை சிறப்பு சொற்பொழிவு, 10.30 மணிக்கு மேல் புராண நாட்டிய நாடகம் நடந்தது.

    விழாவின் 9-ம் திருவிழாவான நாளை (திங்கட்கிழமை) இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனியும் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும் நடக்கிறது.

    • வலிய படுக்கை பூஜை ஒரு ஆண்டில் மூன்று முறை மட்டுமே நடக்கும்.
    • அம்மனை மலர்களால் அலங்கரித்து இருந்தனர்.

    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் மாசித்திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் அம்மன் பவனி, சமயமாநாடு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.

    6-ம் நாள் திருவிழாவை யொட்டி நேற்று காலையில் அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. பகல் 11.30 மணிக்கு ராஜபாளையத்தில் இருந்து செவ்வாடை பக்தர்கள் இருமுடி கட்டுடன் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து பருத்திவிளை இந்து சமுதாய பேரவை சார்பில் சந்தனக்குட பவனியும், உண்ணாமலைக்கடையில் இருந்து சந்தனகுட பவனியும் கோவிலை வந்தடைந்தது. இதே போல் மாலையில் குளச்சலில் இருந்து மாவிளக்கு ஊர்வலமும், குளச்சல் களிமார் கணேசபுரம் பிள்ளையார் கோவிலில் இருந்து சந்தனகுட பவனியும் கோவிலுக்கு வந்து சேர்ந்தது.

    இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் திருக்கண் சாத்தி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகாபூஜை தொடங்கியது. இந்த பூஜை ஒரு ஆண்டில் மூன்று முறை மட்டுமே நடக்கும். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த பூஜை மாசி திருவிழா தவிர மீனபரணி கொடை விழா, கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மட்டும் தான் நடைபெறும்.

    வலிய படுக்கை பூஜையில் அம்மனுக்கு அவல், பொரி, திரளி, தேன், கற்கண்டு, முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, தினை மாவு, தேங்காய், பழவகைகள், இளநீர், பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டிருந்தது. அப்போது அம்மனை மலர்களால் அலங்கரித்து இருந்தனர். வலிய படுக்கை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கேரள மாநிலத்தில் இருந்தும் அதிகமான பக்தர்கள் வந்திருந்தனர்.

    • பக்தர்கள் நள்ளிரவு வரை காத்திருந்து வலிய படுக்கை பூஜையில் கலந்து கொள்வார்கள்.
    • வலியப்படுக்கையில் படைக்கப்படும் பதார்த்தங்கள், கனிகள் மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா கடந்த 5-ந் தேதி தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது. விழாவில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, காலை 9.30 மணிக்கு வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி, மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை போன்றவை நடந்தது.

    மாலை 4.15 மணிக்கு மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலையில் இருந்து யானை மீது சந்தன குடம் பவனி புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. 6 மணிக்கு தங்கத்தேர் பவனி, 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி ஆகியவை நடந்தது.

    ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் காலை 6 மணி முதல் 8 மணி வரை லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரதாமம், 8 மணிக்கு பக்தி பஜனை, 10 மணிக்கு பெரியபுராணம் தொடர் விளக்கவுரை ஆகியவை நடந்தது. 11 மணிக்கு பொருளாளர் சசீதரன் தலைமையில் சமய மாநாடு, பிற்பகல் 2 மணிக்கு சிந்தனை சொல்லரங்கம், மாலை 4 மணிக்கு இசைச்சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி, 6 மணி முதல் 7.30 வரை பரத நாட்டியம், 7.30 மணி வரை சமய மாநாடு ஆகியவை நடந்தது.

    விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாசிக்கொடையின் முக்கிய வழிபாடான மகா பூஜை என்னும் வலிய படுக்கை பூஜை நடக்கிறது. வலியபடுக்கை பூஜை என்பது நள்ளிரவில் அம்மனுக்கு மிகவும் பிடித்த உணவு, கனி வகைகள், இனிப்பு போன்றவற்றை அம்மன் முன்பு பெரும் படையலாக படைத்து வழிபடுவதாகும்.

    இந்த வழிபாடு மாசிக்கொடையின் 6-வது நாளும், மீன பரணிக்கொடை அன்றும், கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையும் என ஆண்டுக்கு 3 முறை மட்டும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இது முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. பக்தர்கள் நள்ளிரவு வரை காத்திருந்து இந்த வலிய படுக்கை பூஜையில் கலந்து கொள்வார்கள். வலியப்படுக்கையில் படைக்கப்படும் பதார்த்தங்கள், கனிகள் மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்-அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ் பங்கேற்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில் களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று.

    கேரள பெண் பக்தர் கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடு வதால் இக்கோவில் பெண் களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.இக்கோவிலில் மாசிக் கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம்.இந்த வருடத்தின் மாசிக் கொடை விழா இன்று காலை திருக் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது.5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 8.23 மணியளவில் திருக் கொடியேற்றம் நடந்தது. கோவில் தந்திரி சங்கர நாராயணன் திருக்கொடி யேற்றினார்.

    இதில் தெலுங் கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொடர்பு தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் ஸ்ரீதர், எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத், குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன், விஜய்வசந்த் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ., தி.மு.க. தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், பாரதிய ஜனதா மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், தேவசம் மண்டல இணை ஆணையர் கவிதா பிரியதர்சினி, குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாக இணை ஆணையர் ஞானசேகர், பேரூராட்சி தலைவர்கள் ராணிஜெயந்தி, பாலசுப்ரமணியன், குட்டி ராஜன், செயல் அலுவலர் கலாராணி, கவுன்சிலர்கள் முருகன், கிருஷ்ணஜெயந்தி, ஜெயலட்சுமி, ராபர்ட் கிளாரன்ஸ், ஆன்றலின் சோபா, சோனி, உதயகுமார், ஒன்றிய தி.மு.க.செயலாளர் சுரேந்திரகுமார், குளச்சல் நகர செயலாளர் நாகூர் கான், உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண் டனர்.

    தொடர்ந்து சமய மாநாடு திடலில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 86-வது இந்து சமய மாநாடு கொடி யேற்றம் நடந்தது. தலைவர் கந்தப்பன் தலைமையில் மாநாடு தொடங்கியது. மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் மாநாட்டை தொடங்கி வைத்து விழா பேருரை ஆற்றினார்.

    தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்து விளக்கேற்றி சிறப்பு ரை ஆற்றினார். மாதா அமிர்தானந்தமயி மடம் குமரி மாவட்ட பொறுப்பா ளர் நீலகண்டாம்ருத சைதன்யா, வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்தா ஆசிரமம் சுவாமி கருணானந்தஜி மகாராஜ், குமாரகோவில் சின்மயா மிஷன் சுவாமி நிஜானந்தா ஆகியோர் ஆசியுரை ஆற்றினர்.இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

    எம்.பி., கேரள முன்னாள் மந்திரி சிவகுமார், இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் டாக்டர் தெய்வபிரகாஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    குமரி மாவட்ட திருக் கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர், தேவசம் கண்காணிப்பளர் ஆனந்த், கோயில் ஸ்ரீ காரியம் செந்தில்குமார், மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிந்துகுமார், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சிவகுமார், மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நண்பகல் 12 மணியளவில் கருமங்கூடல் தொழிலதிபர் கல்யாணசுந்தரம் இல்லத்தி லிருந்து அம்மனுக்கு சீர் பொருட்கள் கொண்டு வரப்பட்டது.

    மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது.தொடர்ந்து அன்னை பகவதி அன்னதான குழு சார்பில் 30 வது ஆண்டு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை மற்றும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பூஜையும், 9 ஆயிரம் திருவிளக்கு பூஜை யும் நடக்கிறது. இரவு 8 மணி முதல் பரத நாட்டியம் நிகழ்ச்சி 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கிறது

    • இந்த வருடத்தின் மாசிக் கொடை விழா இன்று காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இந்த விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ் பங்கேற்றனர்.

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.இக்கோவிலில் மாசிக் கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த வருடத்தின் மாசிக் கொடை விழா இன்று காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது.5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 8.23 மணியளவில் திருக் கொடியேற்றம் நடந்தது. கோவில் தந்திரி சங்கர நாராயணன் திருக்கொடியேற்றினார். இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொடர்பு தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் ஸ்ரீதர், எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத், குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன், விஜய்வசந்த் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ., தி.மு.க. தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், பாரதிய ஜனதா மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், தேவசம் மண்டல இணை ஆணையர் கவிதா பிரியதர்சினி, குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாக இணை ஆணையர் ஞானசேகர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து சமய மாநாடு திடலில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 86-வது இந்து சமய மாநாடு கொடியேற்றம் நடந்தது. தலைவர் கந்தப்பன் தலைமையில் மாநாடு தொடங்கியது. மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் மாநாட்டை தொடங்கி வைத்து விழா பேருரை ஆற்றினார். தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் குத்து விளக்கேற்றி சிறப்புரை ஆற்றினார்.

    மாதா அமிர்தானந்தமயி மடம் குமரி மாவட்ட பொறுப்பாளர் நீலகண்டாம்ருத சைதன்யா, வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்தா ஆசிரமம் சுவாமி கருணானந்தஜி மகாராஜ், குமாரகோவில் சின்மயா மிஷன் சுவாமி நிஜானந்தா ஆகியோர் ஆசியுரை ஆற்றினர்.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, விஜய் வசந்த் எம்.பி., கேரள முன்னாள் மந்திரி சிவகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    நண்பகல் 12 மணியளவில் கருமங்கூடல் தொழிலதிபர் கல்யாணசுந்தரம் இல்லத்திலிருந்து அம்மனுக்கு சீர் பொருட்கள் கொண்டு வரவழைக்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது.தொடர்ந்து அன்னை பகவதி அன்னதான குழு சார்பில் 30 வது ஆண்டு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை மற்றும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பூஜையும், 9 ஆயிரம் திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. இரவு 8 மணி முதல் பரத நாட்டியம் நிகழ்ச்சி 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கிறது.

    • திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 14-ந்தேதி ஒடுக்கு பூஜை நடக்கிறது.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. தொடக்க விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தமிழக அமைச்சர்கள் 3 பேர் கலந்து கொள்கிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் மாசிப் பெருந்திருவிழா நாளை ( ஞாயிற்றுக்கிழமை) காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நாளை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றம் போன்றவை நடக்கிறது.

    இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி, எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், விஜயதரணி, தளவாய் சுந்தரம், ராஜேஷ்குமார், எம்.ஆர். காந்தி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி, துணைத்தலைவர் சுஜி, அரசு செயலாளர்கள் சந்திரமோகன், குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாந்த், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், கூடுதல் இணை ஆணையர்கள் திருமகள், ஹரிப்பிரியா, கவிதா, இணை ஆணையர்கள் சுதர்சன், ஜெயராம், ஞானசேகர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    பகல் 12 மணிக்கு கருமன்கூடல் தொழில் அதிபர் கல்யாண சுந்தரம் இல்லத்தில் இருந்து அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வருதல், 1 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 9 மணிக்கு அத்தாழபூஜை போன்றவை நடக்கிறது.

    2-வது நாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு முப்பந்தல் ஆலமூடு இசக்கி அம்மன் கோவில் பக்தர்களால் அம்மனுக்கு பூஜை பொருட்கள் கொண்டு வருதல், 1 மணிக்கு உச்சகால பூஜையும், 3-வது நாள் முதல் 9-வது நாள் வரை காலை 9.30 மற்றும் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளலும் நடைபெறும்.

    3-வது நாள் மாலை 6.15 மணிக்கு கீழ்கரை சடையப்பர் கோவிலில் இருந்து யானைமீது சந்தனகுடம் பவனி, 4-வது நாள் பகல் 11.30 மணிக்கு மேற்கு நெய்யூர் ஊரம்மன் கோவிலில் இருந்தும், 12 மணிக்கு வெட்டுமடை இசக்கி அம்மன் கோவிலில் இருந்தும் யானை மீது சந்தனக்குட பவனி, 5-வது நாள் மாலை 6 மணிக்கு மணவாளக்குறிச்சி மணல் ஆலை வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்துடன் யானை மீது களபம் பவனி போன்றவை நடக்கிறது.

    6-வது நாள் பகல் 12 மணி மற்றும் 12.30 மணிக்கு பருத்திவிளை மற்றும் உண்ணாமலைக்கடை பகுதியில் இருந்து சந்தனகுடம் பவனி, இரவு 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் வலிய படுக்கை என்ற மகா பூஜை, 7-வது நாள் பாலப்பள்ளம் ஊர்மக்கள் சார்பிலும், மணவாளக்குறிச்சியில் இருந்து மாவட்ட பத்திரப் பதிவுத்துறை சார்பிலும் சந்தனகுடம் பவனி, 8-வது நாள் பகல் 12.30 மணிக்கு நடுவூர்கரை சிவசக்தி கோவிலில் இருந்து மாவிளக்கு பவனி, மாலை 6.15 மணிக்கு செம்பொன்விளை சிராயன்விளை பக்தர்களால் களப பவனி, 9-வது நாள் காலை 11 மணிக்கு உண்ணாமலைக்கடை பட்டாரியார் சமுதாயம் சார்பில் சந்தனகுட பவனி, பகல் 12 மணிக்கு சந்தன காப்பு காவடி, இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவட்டியுடன் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் ஆகியவை நடைபெறும்.

    திருவிழாவின் 10-வது நாளான 14-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தா கோவிலில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளல், 4.30 மணிக்கு அடியந்திர பூஜை, காலை 6 மணிக்கு குத்தியோட்டம், இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் கோவிலுக்கு கொண்டு வருதல், 12.30 மணிக்கு மேல் ஒரு மணிக்குள் ஒடுக்கு பூஜை போன்றவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • இந்த விழா 10 நாட்கள் நடக்கிறது.
    • 8-ந்தேதி கதாகாலஷேபம் நடைபெறும்.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் மாசி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை திருவிழா நிறைவுபெறும் வகையில் 10 நாட்கள் விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு ராதாகிருஷ்ணபுரம் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 10 நாட்களும் சமய மாநாடு நடக்கிறது. மாநாடு நடத்துவது குறித்து எழுந்த பிரச்சினைக்குபின் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடக்கும் 86-வது இந்து சமய மாநாடு நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.

    விழாவில் அதிகாலை 4.30 மணிக்கு கோவிலில் நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 7.30 மணிக்கு கொடியேற்றம் ஆகியவை நடக்கிறது. பகல் 12 மணிக்கு கருமன்கூடல் தொழிலதிபர் கல்யாண சுந்தரத்தின் இல்லத்தில் இருந்து அம்மனுக்கு சீர் கொண்டு வருதல், 1 மணிக்கு உச்சகால பூஜை, தொடர்ந்து அன்னதானம், மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    மாநாட்டு பந்தலில் காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஜனை, 8.30 மணிக்கு மாநாடு கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து நடக்கும் சமய மாநாட்டை மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்து உரையாற்றுகிறார். விழாவை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.

    நாகர்கோவில் மாதா அமிர்தானந்தமயி மட மாவட்ட பொறுப்பாளர் நிலகண்டாம்ருத சைதன்யா, வெள்ளிமலை ஆசிரமத் தலைவர் சைதன்யானந்த மகராஜ் சுவாமிகள் மற்றும் குமாரகோவில் சின்மயா மிஷன் சுவாமி நிஜானந்தா ஆகியோர் ஆசி வழங்குகின்றனர். குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகர், பத்மனாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், கோவில் ஸ்ரீகாரியம் செந்தில் குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிந்துகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் சிவகுமார், மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணிஜெயந்தி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

    தமிழக இந்து அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, தளவாய் சுந்தரம், இந்திய உணவு கழக இயக்குனர் தெய்வ பிரகாஷ், கேரள முன்னாள் மந்திரி சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

    மாலை 6.30 மணிக்கு ராஜ ராஜேஸ்வரி பூஜையும், 9 ஆயிரம் திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு பரத நாட்டியமும் நடக்கிறது.

    6-ந் தேதி காலை 6 மணிக்கு லலிதா சகஸ்ர நாமம், விஷ்ணு சகஸ்ர நாமம், 10 மணிக்கு பெரிய புராண விளக்கவுரை, பிற்பகல் 3 மணிக்கு பஜனை, இரவு 8.30 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சியும், 7-ந் தேதி காலை 8 மணிக்கு அகவல் பாராயணம், பிற்பகல் 3.30 மணிக்கு தேவார இன்னிசை, 4.30 மணிக்கு பாலப்பள்ளம் குருகுல மாணவர்களின் யோகா, மாலை 6 மணிக்கு கர்நாடக இன்னிசை, இரவு 9.30 மணிக்கு கதகளியும், 8-ந் தேதி இரவு 8 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகர் மகதி குழுவினரின் கர்நாடகா மற்றும் பக்தி இன்னிசை, 11 மணிக்கு கதாகாலஷேபமும் நடைபெறும்.

    9-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு சிந்தனை சொல்லரங்கம், மாலை 4 மணிக்கு இசை சொற்பொழிவு, இரவு 10 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சியும், 10-ந் தேதி காலை 9 மணிக்கு பஜனை போட்டி, மாலை 3.30 மணிக்கு திருமுறை பக்தி பண்ணிசை, 5.30 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 11 மணிக்கு ஈஷா யோகா நிகழ்ச்சி, இரவு 12 மணிக்கு மேல் வலிய படுக்கை பூஜையும் நடக்கிறது.

    11-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சொற்பொழிவு போட்டி, மாலை 4 மணிக்கு சங்க வருடாந்திர கூட்டம், 5 மணிக்கு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு மாதர் மாநாடு, 10.30 மணிக்கு புராண நாட்டிய நாடகமும், 12-ந் தேதி மாலை 4 மணிக்கு வாழும்கலை மைய சத்சங்கம், மாலை 5 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு அய்யாவழி கலை நிகழ்ச்சி, 10.30 மணிக்கு பக்தி இன்னிசையும், 13-ந் தேதி காலை 9 மணிக்கு சிவபுராண விளக்கவுரை, பிற்பகல் 3 மணிக்கு வில்லிசையும் நடக்கிறது.

    அன்று மாலை 6 மணிக்கு நடக்கும் சமய மாநாட்டில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார். இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளலும், பெரிய சக்கர தீவட்டி வீதி உலாவும் நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 14-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2 தேர்வில் 500 மதிப்பெண்ணும் அதற்கு மேலும், 10-ம் வகுப்பில் 400-ம் அதற்கு மேலும் மதிப்பெண் பெற்ற இந்து மாணவர்களையும், சொற்பொழிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும் பாராட்டி பரிசு வழங்குதல், இரவு 9.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் திருக்கோவிலுக்கு கொண்டு வருதல், நள்ளிரவு 12.30 மணிக்கு ஒடுக்கு பூஜை ஆகியவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆதரவுடன் ஹைந்தவ சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

    • சமய மாநாடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்கிறது
    • அமைச்சர் சேகர்பாபு பேட்டி

    நாகர்கோவில்:

    தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று குமரி மாவட்டம் வந்தார். அவர் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், வேளி மலை குமார கோவில் முருகன் ஆலயங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஆக்கிர மிப்பில் இருந்த இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இது வரை ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த மீட்பு வேட்டை தொடரும்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் விழா நிகழ்ச்சி 5-ந் தேதி தான் நடக்கிறது. அதற்கு இன்னும் 15 நாட்கள் இருக்கிறது. தற்போது அங்கு எழுந்துள்ள பிரச்சினை குறித்து, சம்பந்தப்பட்ட சங்கங்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பேசி வருகின்றனர். இந்த விவகாரம் சுமூகமாக முடியும் என்ற நம்பிக்கை துறை அமைச்சர் என்ற முறையில் எனக்கு புலப்படுகிறது. அரசை பொருத்தவரை பிரச்சினையை பெரிதாக்க விரும்பாது. அனைத்து மக்களும் சாதி,சமுதாய வேறுபாடின்றி விழாவில் பங்கேற்க வேண்டும்.

    தக்கலை வேளி மலை குமார கோவில் முருகன் கோவிலில் புணரமைப்பு பணிகள் செய்வதற்காக ரூ.1 கோடியே 8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனை இன்று பார்வை யிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டு உள்ளேன்.

    பணிகள் அனைத்தும் முடிந்ததும் வருகிற ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை திருவிழா நடைபெறும்.

    வேளிமலை குமார கோவிலில் அதிக அளவு திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இங்கு திருமணம் நடத்துவோர் பயன்படுத்தும் சமையல் கூடங்கள், தங்கும் அறை கள் போன்றவை சிதிலமடை ந்துள்ளன.

    அவற்றை புணர மைப்பதா? அல்லது புதிதாக திருமண மண்டபம் கட்டுவதா ? என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அறிக்கை தந்த வுடன், முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று புதிதாக திருமண மண்டபம் கட்டலாமா? என பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • மாசிக்கொடை விழா மார்ச் 5-ந்தேதி தொடங்குகிறது.
    • இந்த விழா 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு கேரள பெண் பக்தர்கள் இரு முடிக்கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு மாசிக்கொடை விழா அடுத்த மாதம் (மார்ச்) 5 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி வரை நடக்கிறது. விழா நடைபெறும் 10 நாட்களிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருவிழா தொடங்குவதற்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் நேற்று முதல் கேரள பக்தர்கள் மண்டைக்காட்டிற்கு வர தொடங்கி உள்ளனர். அவர்கள் சுற்றுலா வேன்கள், பஸ்களில் வந்தனர். கேரள பக்தர்கள் கடலில் கால் நனைத்து கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர்.

    கேரள பக்தர்களின் வருகையால் மண்டைக்காடு கோவில் சன்னதி, கோவில் வளாகம், பீச் சந்திப்பு, கடற்கரை போன்ற பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா இப்போதே களைகட்ட தொடங்கியுள்ளது.

    • பிரின்ஸ் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
    • லட்சக்கணக்கான பக்தர்கள் குளிப்பதற்கு பயன்படும்.

    கன்னியாகுமரி:

    பிரின்ஸ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள கூறியுள்ளதாவது:-

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா வருகிற மார்ச் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைகிறது.

    மாசிக்கொடையை முன்னிட்டு குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி கேரள மற்றும் வெளி மாவட்ட பக்தர்களும் திரளாக மண்டைக்காடு வந்து செல்வர். பக்தர்கள் நீராட மற்றும் புனித கால் நனைப்பதற்கு கோவிலின் மேற்கு பகுதியில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்திற்கு பேச்சிப்பாறை அணை நீர் பரம்பை இரணியல் கால்வாய் வழியாக பாய்ச்சப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது.

    அணை நீர் இரணியல், நெய்யூர், ஆத்திவிளை, பொட்டல்குழி, காஞ்சிர விளை, தலக்குளம், புதுவிளை, திங்கள்நகர், செட்டியார்மடம், கல்லுக் கூட்டம், லட்சுமிபுரம், கருமங்கூடல் ஆகிய சானல் வழியாக மண்டைக்காடு செல்வதால் இந்த பகுதியில் நிலத்தடி நீராதாரம் பெருகுகிறது. இதனால் இந்த பகுதி விவசாயிகள், பொதுமக்களும் பயன் பெறுகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரணியல் அருகே நெய்யூர் பரம்பை என்னுமிடத்தில் இரட்டை ரெயில் பாதைக்காக இரணியல் கால்வாய் துண்டிக்கப்பட்டது.தண்டவாளத்தின் குறுக்கே தொட்டி கட்டப்பட்டது.இந்த தொட்டியில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மேற்கூறிய பகுதிகளுக்கு அணை நீர் பாய்ச்ச முடியாமல் உள்ளது. தொட்டியில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவை துரிதமாக சீரமைக்க வேண்டும்.

    மண்டைக்காடு பக வதியம்மன் கோவில் கொடியேற்று விழாவுக்கு முன்பாக தெப்பக்குளத்தில் நீர் தேக்க வேண்டும்.அதனால் பரம்பை இரணியல் கால்வாயை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுவது அவசியமாகிறது. தெப்பக்குளத்தில் நீரை தேக்கினால்தான் மண்டைக்காட் டிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் குளிப்பதற்கு பயன்படும்.பரம்பை இரணியல் கால்வாயை சீரமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் மேற்படி கால்வாயில் ராட்சத குழாய் பதித்து மண்டைக்காடு தெப்பக்குளத்திற்கு நீர் பாய்ச்ச மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • இந்த விழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 10-ந்தேதி வலியப்படுக்கை நடக்கிறது.

    குமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி கொடை விழா அடுத்த மாதம் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் பாரம்பரிய முறைப்படி சிறப்பு வழிபாட்டு பூஜைகளும், சமய சொற்பொழிவு, சமய இன்னிசை விருந்து போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    மாசி கொடை விழாவின் முக்கிய நிகழ்வான வலியப்படுக்கை 10-ந் தேதியும், அதன்பின்னர் 'மகா ஒடுக்கு பூஜை' நடைபெறும். தொடர்ந்து 21-ந் தேதி எட்டாம் கொடை விழாவும், 25-ந் தேதி மீனபரணி கொடை விழாவும் நடைபெற உள்ளன. திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மேற்கொள்கின்றனர்.

    திருவிழா தொடங்கும் 5-ந் தேதியன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.

    விழாவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சிறப்பு பஸ் வசதிகள், சுகாதார வசதிகள், மின்சார வசதி, பக்தர்கள் நீராட ஏ.வி.எம். சானலில் படித்தளம் ஏற்பாடு செய்தல், தெப்பக்குளத்தில் சுத்தமான நீர் நிறைத்தல், கோவில் சுற்றுப்புறத் தூய்மை பணிகள், பாதுகாப்பான தற்காலிக கடைகள் என அனைத்தும் கலெக்டரின் அறிவுறுத்தல்படி இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்புக்காக படகு மற்றும் நீச்சல் வீரர்கள் என அனைத்து முன்னேற்பாடு வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகாரிகள் நடவடிக்கை
    • கார் யாருடையது என்பது குறித்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படு வதை தடுக்க வருவாய் துறை அதிகாரிகள் பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கள்.

    மாவட்ட எல்லை பகுதி களில் தீவிர கண்காணிப்பு பணியில் நடந்து வருகிறது. தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் தலைமையிலான குழுவினர் மண்டைக்காடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தினார்கள். டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். அதிகாரிகள் காரை சோதனை செய்த போது அதில் சாக்கு மூட்டை களில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    காரில் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் காரை யும் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை காப்புக் காடு கிட்டங்கியில் ஒப்ப டைத்தனர். பறிமுதல் செய் யப்பட்ட கார் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    முதல் கட்ட விசார ணையில் ரேஷன் அரிசி குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் சென்றது தெரிய வந்துள் ளது. ரேசன்அரிசி கடத்தல் வழக்கில் யார்? யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து அதிகாரிகள் விசா ரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ராஜாக்கமங்கலம் துறை கடற்கரை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் தென்னந்தோப்பில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக ராஜாக்க மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடி யாக போலீசார் அந்த இடத் துக்கு விரைந்து சென்ற னர். அங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவை சுமார் 2 டன் எடை இருக்கலாம் என தெரிகிறது. அவற்றை கைப்பற்றி போலீ சார் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

    இது குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் கள் அரிசி மூடைகளை கோணத்தில் உள்ள அரிசி குடோனுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×