search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டைக்காடு, ராஜாக்கமங்கலத்தில் சொகுசு கார், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட காரை படத்தில் காணலாம்.

    மண்டைக்காடு, ராஜாக்கமங்கலத்தில் சொகுசு கார், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    • அதிகாரிகள் நடவடிக்கை
    • கார் யாருடையது என்பது குறித்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படு வதை தடுக்க வருவாய் துறை அதிகாரிகள் பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கள்.

    மாவட்ட எல்லை பகுதி களில் தீவிர கண்காணிப்பு பணியில் நடந்து வருகிறது. தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் தலைமையிலான குழுவினர் மண்டைக்காடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தினார்கள். டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். அதிகாரிகள் காரை சோதனை செய்த போது அதில் சாக்கு மூட்டை களில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    காரில் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் காரை யும் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை காப்புக் காடு கிட்டங்கியில் ஒப்ப டைத்தனர். பறிமுதல் செய் யப்பட்ட கார் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    முதல் கட்ட விசார ணையில் ரேஷன் அரிசி குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் சென்றது தெரிய வந்துள் ளது. ரேசன்அரிசி கடத்தல் வழக்கில் யார்? யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து அதிகாரிகள் விசா ரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ராஜாக்கமங்கலம் துறை கடற்கரை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் தென்னந்தோப்பில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக ராஜாக்க மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடி யாக போலீசார் அந்த இடத் துக்கு விரைந்து சென்ற னர். அங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவை சுமார் 2 டன் எடை இருக்கலாம் என தெரிகிறது. அவற்றை கைப்பற்றி போலீ சார் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

    இது குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் கள் அரிசி மூடைகளை கோணத்தில் உள்ள அரிசி குடோனுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×