search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர் தேக்கம்"

    • பிரின்ஸ் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
    • லட்சக்கணக்கான பக்தர்கள் குளிப்பதற்கு பயன்படும்.

    கன்னியாகுமரி:

    பிரின்ஸ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள கூறியுள்ளதாவது:-

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா வருகிற மார்ச் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைகிறது.

    மாசிக்கொடையை முன்னிட்டு குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி கேரள மற்றும் வெளி மாவட்ட பக்தர்களும் திரளாக மண்டைக்காடு வந்து செல்வர். பக்தர்கள் நீராட மற்றும் புனித கால் நனைப்பதற்கு கோவிலின் மேற்கு பகுதியில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்திற்கு பேச்சிப்பாறை அணை நீர் பரம்பை இரணியல் கால்வாய் வழியாக பாய்ச்சப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது.

    அணை நீர் இரணியல், நெய்யூர், ஆத்திவிளை, பொட்டல்குழி, காஞ்சிர விளை, தலக்குளம், புதுவிளை, திங்கள்நகர், செட்டியார்மடம், கல்லுக் கூட்டம், லட்சுமிபுரம், கருமங்கூடல் ஆகிய சானல் வழியாக மண்டைக்காடு செல்வதால் இந்த பகுதியில் நிலத்தடி நீராதாரம் பெருகுகிறது. இதனால் இந்த பகுதி விவசாயிகள், பொதுமக்களும் பயன் பெறுகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரணியல் அருகே நெய்யூர் பரம்பை என்னுமிடத்தில் இரட்டை ரெயில் பாதைக்காக இரணியல் கால்வாய் துண்டிக்கப்பட்டது.தண்டவாளத்தின் குறுக்கே தொட்டி கட்டப்பட்டது.இந்த தொட்டியில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மேற்கூறிய பகுதிகளுக்கு அணை நீர் பாய்ச்ச முடியாமல் உள்ளது. தொட்டியில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவை துரிதமாக சீரமைக்க வேண்டும்.

    மண்டைக்காடு பக வதியம்மன் கோவில் கொடியேற்று விழாவுக்கு முன்பாக தெப்பக்குளத்தில் நீர் தேக்க வேண்டும்.அதனால் பரம்பை இரணியல் கால்வாயை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுவது அவசியமாகிறது. தெப்பக்குளத்தில் நீரை தேக்கினால்தான் மண்டைக்காட் டிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் குளிப்பதற்கு பயன்படும்.பரம்பை இரணியல் கால்வாயை சீரமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் மேற்படி கால்வாயில் ராட்சத குழாய் பதித்து மண்டைக்காடு தெப்பக்குளத்திற்கு நீர் பாய்ச்ச மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கோவில்பத்து சிவன் கோவில் பிரகார பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
    • மழையால் தண்ணீர் தேங்கி இருப்பதால் அறுவடை எந்திரங்களை வயல்களில் இறக்க இயலாத நிலையை உருவாக்கி உள்ளது.

    பூதலூர்:

    பூதலூர், திருக்காட்டு ப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 12 மணி முதல் விடிய விடிய இடி மின்னலுடன் கொட்டி தீர்த்தது.

    பெருமழையால் சாலைகளில் வெள்ள மென தண்ணீர் திரண்டு ஓடியது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் பகுதியில் பகல் நேரங்களில் கோடை வெயிலை போல வெயில் கொளுத்தியது.

    இதனால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் நல்ல நிலைமையில் அறுவடை செய்து நெல்லை விற்பனை செய்து விடலாம் என்றுஎண்ணியிருந்தனர்.

    இந்த பகுதியில் சில இடங்களில் குறுவை அறுவடை எந்திரங்கள் மூலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.அறுவடை செய்யப்பட்ட நெல்லை வழக்கம்போல கிடைக்கும் இடத்தில் எல்லாம் காய வைக்கும் பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர்.

    குறிப்பாக பூதலூர் மேம்பால பகுதியில் முழுவதும் விவசாயிகள் தங்கள் நெல்லை கொட்டி காய வைத்திருந்தனர்.

    நேற்று மாலை நெல்லை குவித்து மூடி வைத்திருந்தனர்.

    அதேபோல நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்பதை எதிர்பார்த்து கோவில்பத்து பூதலூர் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல்லை குவித்து மூடி வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் மூடி வைக்கப்பட்டிருந்த நெல் குவியல்களை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் இன்று கொள்முதல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    கல்லணையில் அதிகபட்சமாக 15 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. பூதலூர் அருகே உள்ள கோயில்பத்து சிவன் கோவில் பிரகாரப் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    அதேபோல பல்வேறு தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்களை இந்த மழையால் தண்ணீர் தேங்கி இருப்பதால் அறுவடை எந்திரங்களை வயல்களில் இறக்க இயலாத நிலையை உருவாக்கி உள்ளது. மழை தொடர்ந்தால் குறுவை அறுவடை பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர்.

    தற்போது அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டிருக்கும் நெல்லை ஈரப்பதம் பார்க்காமல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    ×