search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water Reservoir"

    • கோவில்பத்து சிவன் கோவில் பிரகார பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
    • மழையால் தண்ணீர் தேங்கி இருப்பதால் அறுவடை எந்திரங்களை வயல்களில் இறக்க இயலாத நிலையை உருவாக்கி உள்ளது.

    பூதலூர்:

    பூதலூர், திருக்காட்டு ப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 12 மணி முதல் விடிய விடிய இடி மின்னலுடன் கொட்டி தீர்த்தது.

    பெருமழையால் சாலைகளில் வெள்ள மென தண்ணீர் திரண்டு ஓடியது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் பகுதியில் பகல் நேரங்களில் கோடை வெயிலை போல வெயில் கொளுத்தியது.

    இதனால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் நல்ல நிலைமையில் அறுவடை செய்து நெல்லை விற்பனை செய்து விடலாம் என்றுஎண்ணியிருந்தனர்.

    இந்த பகுதியில் சில இடங்களில் குறுவை அறுவடை எந்திரங்கள் மூலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.அறுவடை செய்யப்பட்ட நெல்லை வழக்கம்போல கிடைக்கும் இடத்தில் எல்லாம் காய வைக்கும் பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர்.

    குறிப்பாக பூதலூர் மேம்பால பகுதியில் முழுவதும் விவசாயிகள் தங்கள் நெல்லை கொட்டி காய வைத்திருந்தனர்.

    நேற்று மாலை நெல்லை குவித்து மூடி வைத்திருந்தனர்.

    அதேபோல நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்பதை எதிர்பார்த்து கோவில்பத்து பூதலூர் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல்லை குவித்து மூடி வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் மூடி வைக்கப்பட்டிருந்த நெல் குவியல்களை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் இன்று கொள்முதல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    கல்லணையில் அதிகபட்சமாக 15 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. பூதலூர் அருகே உள்ள கோயில்பத்து சிவன் கோவில் பிரகாரப் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    அதேபோல பல்வேறு தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்களை இந்த மழையால் தண்ணீர் தேங்கி இருப்பதால் அறுவடை எந்திரங்களை வயல்களில் இறக்க இயலாத நிலையை உருவாக்கி உள்ளது. மழை தொடர்ந்தால் குறுவை அறுவடை பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர்.

    தற்போது அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டிருக்கும் நெல்லை ஈரப்பதம் பார்க்காமல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    திருவாலங்காடு நீர் தேக்கிக்கு மேட்டூர் காவிரி நீர் வந்தடைந்தது.
    குத்தாலம்:

    மேட்டூர் அணை கடந்த 24ம் தேதி பாசனத்துக்காக திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் இரவு கடைமடை பகுதியான  மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கியில் தண்ணீர்  வந்தடைந்தது. காவிரியில் முதல் கட்டமாக 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக நீர் தேக்கியில், தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கண்ணப்பன், உதவி பொறியாளர் யோகேஷ் மற்றும் விவசாயிகள் காவிரி நீருக்கு மலர்தூவி வரவேற்பளித்தனர்.

    மேட்டூர் அணையின் விதிகளின் படி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூர் கடையணை பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும். இதன் படி இன்னும் ஓரிரு தினங்களில், தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    இந்த ஆண்டு முன்கூட்டியே மே 24 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேர்ந்துள்ளதால் மகிழ்ச்சியளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். காவிரி மற்றும் கிளை ஆறுகள் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×